Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்கள்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

தென்னிலங்கையில் கொள்ளைகளும் கொலைகளும் இனி அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் யாலவில் கிளைமோர் தாக்குதல்: ஓருவர் பலி

ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 நவம்பர் 2007இ 03:09 யுஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் யால கட்டுக்கமுவ என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6:45 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்தே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் வாகனம் சிக்கியதையடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும்இ மற்றொருவர் காயங்களுடன் காட்டுக்குள் தப்பிச்சென்றிருப்தாகவும் அங்கு நிலைகொண்டிருக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இத்தாக்குதலை அப்பகுதியில் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே அந்த வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவலை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சுயாதீன தகவல் ஒன்றின்படி இந்த வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. எனினும் இதனை படையினர் உறுதிப்படுத்தவில்லை.

யாலப் பகுதியின் நடவடிக்கை தளபதியாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று முன்தினம் முதல் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு என 300 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் மேலதிகமாக 200 படையினரும் அங்கு அனுப்பப்பட்டு அப்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே நேற்றிரவு அங்கு கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34Aoe

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனி 10-11-2007 16:36 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ

ஹம்பாந்தோட்டைக்கு புதிய படைத் தளபதி

பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டளைத் தளபதியாக சிறீலங்கா அரசு அவசரமாக நியமித்துள்ளது.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபகஸவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் இதுவரை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுஇ மூவர் கடத்தப்பட்டுள்ளமை அரசுக்கான நெருக்குவாரத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாயிரம் வரையிலான படையினர்இ ஊர்காவல் படையினர் மற்றும் காவல்துறையினர் அந்தப் பிரதேசங்களில் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீலங்கா அரசால் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுதந்த ரணசிங்க சிறீலங்காப் படைகளுக்கும்இ காவல்துறைக்கும் பொறுப்பாக இயங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சனி 10-11-2007 21:02 மணி தமிழீழம் [மயூரன்]

அம்பாந்தோட்டையில் 300 சிங்கள குண்டர்கள் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிங்களக் குண்டர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான கூட்டுக் கட்டளைப் பீடம் ஒன்றை, நேற்று அமைத்த சிறீலங்கா அரசாங்கம், இன்று பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை மாவட்ட கட்டளை தளபதியாக நியமித்துள்ளது.

அத்துடன், யால வனப்பகுதியின் எல்லையில் உள்ள திஸ்ஸமகாரகம பிரதேசத்தை சேர்ந்த முந்நூறு சிங்களக் காடையர்களுக்கு, துப்பாக்கிகளை வழங்கி ஆயுதபாணிகளாக்கியிருக்கின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரன்மினி தென பிரதேச மக்களின் இரவு நேர நடமாட்டத்தை குறைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

வீரகேசரி இணையம்

திஸ்ஸமஹாராம ரன்மினிதென்ன பிரதேச மக்களை இரவு வேளைகளில் நடமாடுவதை குறைக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர் . குறித்த பகுதியில் இரவு வேளைகளில் சோதனைகள் மேற்கொளவதாக பொலிஸ் ஊடக பேச்சாளார் இ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று ஆலயமொன்றில் இடம் பெற்றது. இதன் போது அப்பிரதேச வாசிகளிற்கு இரவு வேளைகளில் இடத்திற்கு இடம் திரிங்கை குறைக்குமாறு கோரியுள்ளோம் இரவு வேளைகளில் சோதனை நடவடிக்கைகளும் தேடுதல்களும் மேற்கொள்ளளும் போது பொது மக்களின் நடமாட்டம் சோதனை நடவடிக்கைளிற்கு இடையூறாக இருக்கும் சில வேளைகளில் பொதுமக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படாலம் இதனாலேயே இவ்வாறு கோரியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

http://www.virakesari.lk/html/head_view.asp?key=7792

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச கூறின மாதிரி இலங்கை இராணுவம் தான் நம்பர் 1, (களவெடுக்குறதில, கற்பழிக்கிறதில, கொலை செய்யிறதில), ஆனால் பொலிசும் நம்பர் 1ஆ இருக்கு போல? பின்ன தாக்குதல் நடந்த சில நாட்களில பொதுமக்களிட்ட ஆயுதத்தை கொடுத்திருக்கிறாங்க,

இப்படி யாழ்ப்பாண சனத்திண்ட கையில ஆயுதத்தை குடுத்தால் நல்லா இருக்குமே?? :):)

தென்னிலங்கையில் கொள்ளைகளும் கொலைகளும் இனி அதிகரிக்கும்.

ஏன் இதற்க்கு முன்னம் ஏதோ குறைவோ.????, இப்ப அதிகரிக்க.

ஏன் இதற்க்கு முன்னம் ஏதோ குறைவோ.????, இப்ப அதிகரிக்க.

ஆயுதம் கிடைத்துவிட்டால் இன்னமும் அதிகரிக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.