Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்திற்குத் தடை - பழ.நெடுமாறன் கண்டனம்.

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்குச் சென்னை மாநகர ஆணையாளர் தடைவிதித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக அரசின் மனித நேயமற்றப் போக்கினையும் தமிழர் விரோதப் போக்கினையும் எடுத்துக்காட்டுகிறது. என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நன்றி : sankathi.com

"தடைகள் வரும். அவைகளை மதித்து ஆதரவைப் பெருக்குங்கள்" அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. நெடுமாறன் அவர்களே! இது அரசியல் நாடகம். தங்களுடையபாத்திரங்கள் வலிமையிழந்துவிடுமென உங்களைத் தடைசெய்கிறார்கள். இவர்கள் தமிழர்களல்ல. அடிவருடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்திய ஆளும் வர்க்கத்தின் அராஜகப்போக்கை தமிழக மக்களுக்கு தெளிவாக உணர்த்தி நிற்கும்.

தமிழக மக்கள் தமிழ்செல்வன் அண்ணாவின் விடயத்தை புலிக்கண்ணோட்டத்தில பார்க்கல்ல. அவர்கள் இனக்கண்ணோட்டத்தில தான் பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள உறவுகளோடு கதைக்கின்ற போது எல்லோருமே "என்னப்பா எங்கட தமிழ்செல்வனைக் கொன்றுட்டாங்கள் என்ன செய்யப் போறம்" என்றுதான் கேட்கின்றனர். இதுநாள் வரை ஈழத்தில என்ன நடக்கு என்று கேட்காத உறவுகள் கூட கேட்கின்றனர். அந்தளவுக்கு தமிழகத்தில ஒரு விழிப்புணர்வை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு அனுதாப அலை பிறந்துள்ளதை இது காட்டுநிற்கிறது.

அது பெருகி தமது முதலுக்கே மோசம் வந்திடுமோ என்று இந்திய மத்திய ஆளும் வர்க்கமும் அதன் உளவுப்படைகளும் தொடைநடுங்கி நிற்பதன் விளைவுதான் இத்தடை. இது அனுதாப அலையை பெருக்குமே தவிர சிறுப்பிக்காது. தடைகளை அரசுகள் என்ன நோக்கத்துக்காக பிறப்பிக்கின்றனவோ அதை மீறித்தான் தடைகளுக்கான மக்களின் எண்ணங்கள் சொன்றுள்ளன.. மக்கள் ஆதரவுப் போராட்டங்களைப் பொறுத்தவரைக்கும்.

எனவே முயற்சிகளை தடைகளுக்கு அஞ்சி கைவிடாமல் தொடருங்கள். அது எங்கென்றாலும் சரி..! உலகத்தமிழர் எமது ஒருமித்த பலத்தின் வெளிப்பாடே இந்திய மத்திய ஆளும் வர்க்கத்துக்கும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கும் அச்சுறுத்தும் ஒரு காரணியாக அமையும். தமிழினம்.. துண்டுபட்டு நிற்பின்.. அது முழுத் தமிழினத்துக்கும் ஆபத்தாகவே அமையும்..! எம்மைப் பிரித்தாள நினைப்பவர்களின் எண்ணத்துக்கு நாமே அடிமையாகிடக் கூடாது. அவர்களின் சவால்களை எதிர்கொண்டு புத்திசாதுரியமாக நடந்து அவற்றை முறியடிக்க வேண்டியது உலகத்தமிழினத்தின் இன்றைய தேவை. அதை தமிழ்செல்வன் அண்ணா தனது மறைவில் கூட சாதித்துச் சென்றுள்ளார்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.