Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01

கண்மணி, தனது இளமைப் பருவத்தில், தன்னம்பிக்கை, ஆர்வம் உள்ளவராகவும், சக மாணவர்களாலும் குடும்பத்தினராலும் போற்றப்பட்டவராகவும் இருந்தாள். அவள் கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் மனநிறைவு [Education, marriage, children, contentment.] கொண்ட வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டில் நகரும் ஒன்றென்று அன்று நம்பி வளர்ந்தவள். இந்த வரிசை பெண்களுக்கு வேறுபடுவதாக யாரும் அவளுக்குச் சொல்லவில்லை.

கண்மணி புத்திசாலி மற்றும் திறமைகள் பல தன்னகத்தே கொண்ட பெண்ணாக, மென்மையான தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை முடித்து, ஆசிரியராக தொழில் வாய்ப்பும் பெற்றாள். ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக, ஒழுக்கத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு முழுமையாக பாடம் விளங்கும் வண்ணம் கற்பித்தாள்.


அப்பொழுதும் காதல் — அது புரிதலால் வளரும் ஒன்று என்று நினைத்தாள். திருமணம் — அது உடன்பாட்டின் பிணைப்பு என்று கருதினாள். அவள் அதில் மாற்றம் அடையவில்லை.

அப்போது அவள் இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று அகவை கொண்ட அழகான பெண். அன்பு, புரிதல் மற்றும் நெருக்கமான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும், தன் மேல் காதல் கொண்ட, கண்ணீரையும் வெற்றிகளையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் கணவரை அல்லது காதலனைக் அவள் கனவு கண்டு, வாழ்க்கையை நேசித்தாள். காதலை — உடலோடு மட்டுமல்ல, மனதோடும், பகிர்வோடும், பரஸ்பர புரிதலோடும் நேசித்தாள். அவள் கனவு கண்டது ஒரு கணவனை அல்ல— ஒரு இணையான மனிதனை. அங்கே, அவள் கனவு கண்ட நெருக்கம் - கட்டாயமில்லாத தொடுதல், பயமில்லாத உடல், மறைப்பில்லாத மனம்.

அவளை “விவேகமான பெண்” என்று அனைவரும் புகழ்ந்தனர். “விவேகமான பெண்களுக்கு நல்ல வாழ்வு அமையும்” என்றார்கள். கண்மணி அந்த வாக்கியத்தை நம்பினாள். ஆனால் நடந்ததோ வேறு. அவளுக்குத் தெரியாது — சில திருமணங்கள் இணைவு அல்ல; உரிமை அறிவிப்பென்று.

கண்மணியின் திருமணம் வேறு விதமாக அமைந்து விட்டது. இது அவள் தேர்ந்து எடுத்த காதல் திருமணம் அல்ல, பெற்றோர் ஒழுங்கு படுத்திய திருமணம், என்றாலும் ஒரு நம்பிக்கையுடன் தன் கழுத்தை நீட்டினாள்.

திருமணமும் அழகாகவே நடந்தது. சடங்குகள். புன்னகைகள். புகைப்படங்கள். என்றாலும் அவளது கணவரின் போக்கு முதல் இரவே வித்தியாசமாக இருந்தது.

முதல் இரவில் அவள் எதிர்பார்த்தது மென்மை. அவளுக்காகக் காத்திருக்கும் கரம். ஆனால் வந்தது உரிமை உணர்வு. அவள் உடல் — ஒரு கடமை போல. அவள் தயக்கம் — ஒரு குற்றம் போல.

அன்று, அவன் செயலும் மௌனமும் அவளுக்குப் புதிராக இருந்தாலும், “ஆண்கள் இப்படித்தான்” என்று சமூகம் அவளுக்குப் பதில் சொன்னதால், அவள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. போகப் போக சரிவரும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

அவன் அணைப்பு— காதலின் வெளிப்பாடு அல்ல; உடல் மீது வைத்த அதிகாரத்தின் அறிவிப்பாக மாறியது. அவள் விருப்பம் கேட்கப்பட வில்லை. அவள் தயக்கம் மதிக்கப்படவில்லை. “மனைவி” என்ற சொல்லே அவளது சுய விருப்பத்தை அழித்து விட்டது. அந்த இரவுகளில் அவள் அழவில்லை. அழுகை கூட அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது.

கல்யாணத்துக்கு முன் கண்மணிக்குத் தன்னைப் பற்றிய முதல் நினைவு, ஒரு பெண்ணாக அல்ல; ஒரு முழுமையான மனிதையாக இருந்தது. அப்பொழுது அவளது சிரிப்பில் அச்சமில்லை. அவளது உடலில் குற்றவுணர்ச்சி இல்லை. அவளது கனவுகள் “அனுமதி” கேட்காது. ஆனால் இன்று ...

நாட்கள் பழக்கமாக மாறின. அவன் காலையில் போவான். இரவில் வருவான். விளக்கம் இல்லை. கண்மணி தன் ஆசைகளை மடக்கிக் கொண்டாள். கேள்விகளை ஒத்திவைத்தாள். ஏக்கங்களை அமைதியாக மாற்றினாள்.

அவள் உடல் விருப்பத்தின் இடமாக இல்லை; எதிர்பார்ப்பின் இடமாக ஆனது. ஒரு சிறிய குறிப்பேட்டில் அவள் எழுதினாள்:

'பயன்படாத ஆடைகள் போல என்னை மடக்கி வைத்தேன், எப்போதும் பூட்டிய அலமாரியில்.' அவள் இன்னும் நம்பினாள் — பொறுத்துக் கொள்வதே காதல் என்று.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

பி கு: உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும்

துளி/DROP: 1993 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/33271271955854690/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.