Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணிதமேதை இராமனுஜம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்

சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.

நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில்.

சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் என்னுடைய உண்மையா மென்ட்டர், ஆசான் எல்லாமே எங்க மாமாதான். அதாவது எங்க அம்மாவோட தம்பி, சின்ன வயதிலேயே நல்லா படிச்சிட்டு, 90களின் தொடக்கத்தில் வந்த கம்ப்யூட்டர் சகாப்பதத்தால் அமேரிக்கா சென்றவர்.

இன்றைக்கு நான் படித்த படிப்பு, நான் செய்து கொண்டிருக்கும் வேலை, நான் வேலை செய்து கொண்டிருக்கும் விஷயம் உட்பட பல இவரால் தீர்மானிக்கப்பட்டவைதான். நான் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அது இவரால் தான். +2 அதிகம் மதிப்பெண் எடுக்காத பொழுதும் நம்பிக்கையளித்து கணிணி படிக்கவைத்து, வேலை தேடிக்கொண்டிருந்த பொழுது இதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அதைப் படிக்க வைத்தவர்.

இதெல்லாம் நல்ல விஷயங்களைப்பற்றி நான் சொல்ல வந்தது. இந்த தாக்கங்கள் எல்லாம் எனக்கு நல்லவையாகவே இருந்தது.

நான் நட்சத்திரப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்க மாமாவிற்கும், அய்யர் ஆட்களுக்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியாது. சரியாக நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் அமேரிக்காவில் இருந்து வந்து பின்னர் ஆஸ்திரேலியா சென்றது. அந்த சமயத்தில் இவர் என்மேல் திணித்த சில விஷயங்களில் ஒன்று, அய்யர் வீட்டு ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற ஒன்று.

இன்னும் சொல்லப்போனால், BHEL, 16 வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு அம்மா மண்டபத்தில் டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்தால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மாமாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. அந்த சமயத்தில் எனது வீட்டிலும், எங்க மாமா வீட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அட்வைஸ், “ஸ்ரீரங்கத்தில் இருக்கப்போற, அந்த ஆளுங்கக்கிட்ட பார்த்து இருந்துக்கோ” அப்படிங்கிறது மட்டும்தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் இருந்த பொழுதுதான் நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்தது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வயது, அமேரிக்கா மாமாவின் ஆலோசனை, (பின்னர் அமேரிக்கா அழைத்துச் செல்லும் கனவு.) இத்தனையும் சேர்ந்திருந்த நிலை.

அந்த ஹரன் ஒரு பிராமணப்பையனாப் போக, எல்லாம் சேர்ந்துப்போச்சு, மனசுல ஒரு ஆழமான சுவடா பதிந்திருச்சு, மாமா சொன்ன விஷயத்தை மறக்கவே முடியலை, தவறு என்பேரில் இருந்தாலும், போட்டுக் கொடுத்தானே அப்படிங்கிற ஒரு உணர்வுதான் அதிகமிருந்தது. இதனாலெல்லாம் பிராக்டிகலா வேற நடந்ததிற்குப் பிறகு, என்ன செய்ய மாமா சொல்றது தான் வேதவாக்கு, சில சமயம், நாள் கணக்கா மாமா என்னிடம் அவருக்கு நடந்த சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். எனக்கு ஒரு பிராமின் பிரண்ட் இருக்கான்னு சொன்னாக்கூட திட்டுற ஒரு காலம் அது. இன்னும் புரியவில்லை அப்படி என்ன பிரச்சனையென்று.

ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாய் எங்க மாமாவிற்கு ரொம்பவும் பிடித்த ஒரு நபர்களில் இராமானுஜமும் ஒருவர். மனுஷன் அவ்வளவு புத்தகம் வைச்சிருப்பார். அடிக்கடி தப்பிப் பிறந்திட்டான் தப்பிப் பிறந்திட்டான்னு சொல்லிக்கிட்டேயிருப்பார்னா பாருங்களேன். ஏதாவது ஒரு விஷயம்னா இராமானுஜத்தை தான் இழுப்பார் அவ்வளவு படிப்பறிவு அவரைப்பத்தி மாமாவிற்கு.

ஆரம்பக்காலத்தில் மாமா சொல்றாரேன்னு, சில புஸ்தகங்களைப் படித்திருக்கிறேன் இராமானுஜத்தைப் பற்றி. இப்பத்தான் இந்தப் பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் நாளில் எனக்கும் அவருக்கும் என்னமோ ஒரு சின்ன பிரச்சனை வந்திருச்சு, எனக்கெல்லாம் பிரச்சனை வந்திருச்சுன்னா நிறையப் படிப்பேன், அந்த சமயத்தில் இராமானுஜத்தைப் பற்றி என்ன தவறான விஷயங்கள் கிடைக்கும் தேடித்தேடி படித்திருக்கிறேன். இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அன்று நான் செய்தது.

பெரிய ஜீனியஸ் அந்தாளு, கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி, இயற்கையாவே கணக்கு போடுவதில் பெரிய கை. சின்ன வயதிலிருந்தே அந்த கணக்கு மேல அப்படியொரு பிரியம். ஜி எஸ் கார்(GS Carr) அப்படிங்கிற ஒருத்தரோட புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு தானாவே கணக்கு கத்துக்கிட்டவரு. அவர் தன்னோட பள்ளிப்படிப்பில் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கும்பகோணத்தில் இருந்து கவர்மெண்ட் காலேஜில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்துவந்தார். ஆனால் தலைவர் கணக்கில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்ற சப்ஜெட்டை எல்லாம் கோட்டைவிட்டதால் அடுத்த ஆண்டிற்கான ஸ்காலர்ஷிப் காலாவதியானது.

வீட்டில் யார்கிட்டையும் சொல்லிக்காம விசாகப்பட்டினத்துக்கு ஓடிப்போய்ட்டு, அங்கேயிருந்து கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு 1906ல் மீண்டும் பச்சைப்பாவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் எக்ஸாமில் தேர்ச்சிபெற்று யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க நினைத்திருந்தார். மூன்று மாத படிப்பிற்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணக்கில் மட்டும் நல்ல மார்க் எடுத்திருந்து மற்றவற்றில் மீண்டும் கோட்டைவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க முடியாமல் போனது.

பின்னர் தொடர்ச்சியாக கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1909ல் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். பிறகு அதே வருடத்தில் பத்து வயதே நிரம்பிய அவர் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாவின் பெயர் ஜானகி அம்மாள். அவர், மனைவியுடன் அடுத்த இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தவில்லை, அதாவது அவர் மனைவிக்கு 12 வயதாகும் வரை.

பிறகு அவருடைய கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத்தொடங்கி, கிளர்க்காக வேலை செய்து கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு தான் இவருடைய திறமையை புரிந்து கொண்ட யுனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸ் இவருக்கு இரண்டு வருட ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தின் டிரினிட்டி கல்லுரியில் சேர்ந்தார் இது நடந்தது, 1914. இங்கத்தான் ஆரம்பிச்சது ஒரு புதுப்பிரச்சனை.

நம்மாளு அய்யரு, அசைவம் சாப்பிடமாட்டார், பால்கூட குடிக்கமாட்டார்னு நினைக்கிறேன். இங்கிலாந்தில் சைவம் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனோடயே தன்னோட கணிதத்திறமையை பேப்பர்களாக பப்ளிஷ் செய்து பெரும் புகழை சம்பாதித்திருந்தார். இதெல்லாம் நடந்தது 1916, இப்ப இருக்கிற பிஎச்டி பட்டம் மாதிரி அந்த காலத்து Bachelor of Science by Research கிடைத்து.

இந்த சமயத்தில் எல்லாம் கூட அவருடைய உடல்நலனில் பல பிரச்சனைகள் இருந்துதான் வந்திருந்தது. அதன் பிறகு மேத்தமேட்டிக்ஸ் உலகத்தின் ஒரு உயர்ந்த விருதாக கருதப்படும், Fellow of Royal Society of England(FRS) என்று விருது கூட 1918ல் கிடைத்தது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1917 மிகவும் சங்கடமான காலம் ராமானுஜத்திற்கு, அதாவது அந்த சமயத்தில் மருத்துவர்கள் இவர் இறந்துவிடுவார் என்று கூட பயந்தனராம். அப்படியொரு நிலை.

பின்னர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து கொஞ்சம் காலம் கிளார்க்காக பணிபுரிந்திருக்கிறார். 1919ல் இங்கிலாந்தில் இருந்த வந்த அவர் அதே வருடமே இறந்தும் போயிருக்கிறார்.

எங்க மாமா அடிக்கடி சொல்வது, ராமானுஜம் தன் டைரியில் எழுதி வைத்திருந்த சில சமன்பாடுகளை விளக்க முடியாமல் இன்னும் தடுமாறிக்கிட்டிருக்காங்க, அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பாரு அப்படின்னு.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம், அவர் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் மிகவும் கடுமையா இருந்திருந்ததால் ரொம்பவும் பிரச்சனை செய்திருக்கிறது. இன்று வரை கூட உலக கணிதவல்லுநர்கள் மதிக்கும் ஒரு மிகப்பெரிய கணிதமேதை தான் ராமானுஜம்.

என்னைப் பொறுத்தவரை அவர் வைத்திருந்த சில பழக்கவழங்கள் முற்றிலும் தவறானவை, தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறிய கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தது முட்டாள்த்தனம்.

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். இவரைப்பற்றியும் எழுத என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவருடைய கணிதத்திறமையைப் பற்றி இன்னுமொறு பதிவு எழுதுவேன்.

உங்களுக்கெல்லாம் தெரியுமா, 1917ல் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் மனநலம் கூட பாதிக்கப்பட்டிருந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் இராமானுஜம். அவருடைய நண்பர் ஹார்டிதான் அவர் ஒரு எப்ஆர்எஸ் என்று பொய் சொல்லி(அப்பொழுது அவர் வாங்கியிருக்கவில்லை.) அவரை தப்பிக்க வைத்தார்.

என்னைப் பொறுத்தவரை நமக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நாம்கிடையாது. ஒருவேளை மிகப்பெரியவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்திருக்கலாம் இராமானுஜத்தைப் போல, என்ன இருந்தாலும் என் மாமாவால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்கம் இந்த இராமானுஜம். அதை மறுப்பதற்கில்லை.

ஒரு விஷயத்தை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனால் தவறாகிவிடும். மாமாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதில் முக்கியமாக, பிராமணர்கள் மீதான கருத்து கொஞ்சம் காலத்தில் மாறியது எப்படியென்றால், பிராமணர்கள் மட்டுமல்ல, யாராகயிருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை வரும்பொழுது நடந்துகொள்ளும் நிலை மாறுபடும். இதனால் இப்பொழுதெல்லாம் யாரையும் நம்புவதில்லை அவ்வளவே.

அதிகம் படிக்க படிக்க, வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும் அது எனக்கு இந்த விஷயத்தில் நடந்திருக்கிறது.

http://kundavai.wordpress.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.