Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - புத்தளம் வீதியை திறந்து தாருங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள்; இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் போராட்டம் மேற்கொள்வோம் - ரிஷாத் பதியுதீன் 

19 Feb, 2026 | 07:10 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

100 வருடங்கள் பழைமை வாய்ந்த மன்னார் புத்தளம் வீதியை திறந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள். இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை புத்தளத்தில் இருந்து வாக்களிக்க பஸ்ஸில் கொண்டுசென்ற வழக்கில் நான் 3மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மாதங்களில் அந்த வழக்கில் இருந்து நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன். ஆனால் எனக்கு உதவி செய்த சிலரின் வழக்கு விசாரணைகள் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதுதாெடர்பான அறி்கையை வழங்காதமமையால் வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கின்றனர். அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதாவது இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து திருந்தி, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மன்னார் போன்ற இடங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை அரசாங்கம் நினைத்தால் நிறுத்தலாம். அதற்கு கடற்படை அதிகாரிகளை நீண்டகாலத்துக்கு அங்கு நிறுத்தக்கூடாது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் போதைப்பொருள் கடத்தலுன் தொடர்பு பட்டிருப்பதாக நான் இந்த சபையில் தெரிவித்தபோது, அவருக்கு எதிராகநடவக்கை எடுக்கப்படுவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவரை இடமாற்றம் செய்ததே தவிர வேறு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் மன்னாருக்கு சென்றால், கடத்தல் காரர்கள் சாப்பாடு கொடுக்கிறார்கள். இவ்வாறு செயற்படும்போது எப்படி அந்த பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும்? அதனால் மன்னாருக்கு செல்லும் அமைச்சர்கள் புத்தியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று அதிகமான பள்ளிவாசல்களில் அல் குர்ஆனுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. குர்ஆன் விளக்க புத்தகங்கள் இறக்குமதி செய்வதற்கு இருந்துவரும் தடையே இதற்கு காரணமாகும். ஏனைய மத புத்தகங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டுவருவதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சில் அதற்கான அனுமதியை பெறவேண்டி இருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல. இது கோட்டா என அராஜகன் போட்ட தடை. ஆனால் அது இந்த அரசாங்கத்திலும் தாெடர்கிறது. ஏன் அநுர அரசாங்கத்துக்கு அதனை மாற்ற முடியாதா? துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு அனுப்பியபோதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மஹர பள்ளிவாசல் இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. மதத்த்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சருக்கும் பல தடவைகள் இதுதொடர்பில் தெரிவித்து வந்தபோதும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. அதனால் ரமழான் காலத்தில் அந்த மக்கள் வழிபாடுகளில் ஈடுபட மஹர பள்ளிவாசலை திறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மன்னார் புத்தளம் வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது பொய்யான கருத்துக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது. அதனால் 100 வருடம் பழைமைவாய்ந்த இந்த வீதியை திற்ந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்று பாதையை கடல் ஓரமாக அமைத்துத்தாருங்கள் இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம்.இந்த பாதை கம்பஹாவிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் இவ்வாறு மூடி வைத்திருப்பீர்களா? அந்த பாதையை அதிகம் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படு்த்துவதாலே உங்களது கண்கள் இந்த விடயத்தில் குருடாக இருக்கின்றன.

அத்துடன் வில்பத்துவில் காடுகள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெரிய அறிவாளி போன்று பேசுகிறார். அவர் தெரிவிக்கும் விடயங்கள் அனைத்தும் பொய்யான கருத்தாகும். வில்பத்துவில் ஒரு அங்குலம்கூட காடு அழிக்கப்படவில்லை. விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த மண்ணிலேயே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பின்னர் அந்த காணிகள் காடாக இருந்தன. அதனால் அந்த மக்களை குடியேற்ற காடுகளை அழிக்க வேண்டி ஏற்பட்டது. அதனையும் சட்ட ரீதியிலே மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு இல்லை என்றால் முடிந்தால் அதனை நிரூபியுங்கள்.

மன்னாரில் அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக இந்த காடுகளை அழித்ததாக தெரிவித்து, மன்னார் புத்தளம் வீதியை திறக்காமல் இருப்பதற்கு இந்த சபையில் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/239077

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வீட்டில் பணிபெண் சிறுமி மீது கொடுமை நிகழ்தப்பட்ட வழக்கை ஜேவிபி தூசு தட்டும் காலம் நெருங்கி விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இவர் வீட்டில் பணிபெண் சிறுமி மீது கொடுமை நிகழ்தப்பட்ட வழக்கை ஜேவிபி தூசு தட்டும் காலம் நெருங்கி விட்டது

அந்த கேசு தூசு தட்டி விசாரணைக்கு வருகுது....இப்ப ரூட்டைமாத்திப் பாய்கிறார்...இவர்சொன்ன ஆர்ப்பாட்ட மாதமும் கேசு எடுக்கும் திகதியும் கிட்டக் கிட்ட..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.