Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dfff.jpg?resize=549%2C332&ssl=1

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந் திகதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.

இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்திகதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார். இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும், ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம். என்று தெரிவித்து உள்ளார். மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம், 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.

எனவே தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை வரும் ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 5-ந் திகதி காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தரவும், 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் வழங்கவும், மேலும் பல பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை கூட வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது காங்கிரசை பலப்படுத்தும் ஒரே வழி என்று ராகுல் காந்தி கருதுவதாக தெரிகிறது. இதற்கு இணையாக தி.மு.க.வும் சலுகையை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1466440

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி.

விஜே கதவைத் திறந்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரே?

3 minutes ago, தமிழ் சிறி said:

இந்த சூழலில் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தரவும், 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் வழங்கவும், மேலும் பல பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை கூட வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆசை தோசை அப்பளம் வடை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

விஜே கதவைத் திறந்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாரே?

ஆசை தோசை அப்பளம் வடை.

காங்கிரஸ்... விஜயுடன் சேரப் போவதாக, கதையை கட்டி...

தி.மு.க. வை பணிய வைத்து, ஒரு 10 - 15 இடமாவது எடுக்கலாம் என்று பிளான் போடுகிறார்கள் போலுள்ளது. 😂

இது எல்லாம்... பழைய ரெக்னிக் என்று, தி.மு.க. வுக்கும் தெரிந்து இருக்கும்.

என்ன நடக்கப் போகின்றது என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

காங்கிரஸ்... விஜயுடன் சேரப் போவதாக, கதையை கட்டி...

தி.மு.க. வை பணிய வைத்து, ஒரு 10 - 15 இடமாவது எடுக்கலாம் என்று பிளான் போடுகிறார்கள் போலுள்ளது. 😂

இது எல்லாம்... பழைய ரெக்னிக் என்று, தி.மு.க. வுக்கும் தெரிந்து இருக்கும்.

என்ன நடக்கப் போகின்றது என்று பார்ப்போம்.

விஜக்கு ஒரேஒரு சான்ஸ் பிஜேபி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

விஜக்கு ஒரேஒரு சான்ஸ் பிஜேபி தான்.

விஜயின் ரசிகர்கள்... இதற்கு சம்மதிப்பார்களா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

காங்கிரஸ்... விஜயுடன் சேரப் போவதாக, கதையை கட்டி...

தி.மு.க. வை பணிய வைத்து, ஒரு 10 - 15 இடமாவது எடுக்கலாம் என்று பிளான் போடுகிறார்கள் போலுள்ளது. 😂

இது எல்லாம்... பழைய ரெக்னிக் என்று, தி.மு.க. வுக்கும் தெரிந்து இருக்கும்.

என்ன நடக்கப் போகின்றது என்று பார்ப்போம்.

உண்மையில் காங்கிரசை தமிழ் நாட்டில் மீள நிறுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

திமுக 40 சீட் கொடுத்தாலும் அதில் 20 ல் வெல்லவே காங் திணறும்.

விஜை 80 சீட் வரை கொடுத்தால் கூட இதே 20 வெல்லலாம். கூடவே ஆட்சி அதிகாரம். நாடாளுமன்ற தேர்தலில் 15, 20 சீட் வரை கேக்கலாம்.

மாநிலத்தில் திமுகவுக்குத்தான் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய தேவை உண்டு. காங்குக்கு அல்ல.

எனவே இந்த தேர்தலில் திமுக, தவெக இரெண்டும் தோற்று, அதிமுக+பிஜேபி ஆட்சி அமைத்தாலும், வரும் நாடளுமன்ற தேர்தலில் மீளவும் திமுகவிடன் சேரலாம். மத்தியிலும், மாநிலத்திலும் பிஜேபியை எதிர் கொண்டபடி, அப்போ காங்கிரசையும் ஒதுக்கும் தைரியம் திமுகவுக்கு இராது.

தொங்கு சட்டசபை அமைந்தால், தவெக வை கழட்டி விட்டு விட்டு, திமுகவுடன் மீள சேரலாம்.

இப்படி பல வகைகளில் இப்போ தவெக விடம் கூட்டணி போவது காங்கிற்கு அனுகூலமான விடயம்.

திமுக கூட்டணியில் முரண்டு கொண்டு உடைக்காமல் - எமது தகுதிக்குரிய சீட் இல்லை எனவே போகிறோம் என ஒரு மென் பிரிப்பை செய்து வெளியேறி தவெகவுடம் கூட்டணி வைத்து கொண்டே தேர்தலுக்கு பின்னான ஆப்சன்சை ஓபன்னாக வைத்திருக்கலாம்.

இப்படி பல துருப்பு சீட்டுகள் காங் வசம்.

ஆனால்….

கட்சிக்கு எது நல்லதோ அதன் நேர் எதிர் முடிவை எடுப்பதில் ராகுல் பல்லவர். தவிர ஸ்டாலின்-சோனியா நட்பும் வலிமையானது.

ஆகவே உள்ளாட்சியில் பங்கு, 41 சீட் என அடிமாட்டு விலைக்கு காங்கிரஸ் பணியும் என்றே நானும் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கட்சிக்கு எது நல்லதோ அதன் நேர் எதிர் முடிவை எடுப்பதில் ராகுல் பல்லவர். தவிர ஸ்டாலின்-சோனியா நட்பும் வலிமையானது.

ஆகவே உள்ளாட்சியில் பங்கு, 41 சீட் என அடிமாட்டு விலைக்கு காங்கிரஸ் பணியும் என்றே நானும் நினைக்கிறேன்.

இப்போதைய நிலையில்... காங்கிரஸ் தலைமை விஜய் கட்சியுடன் இணைந்து, பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ள துணிவு இருக்குமா என்பது சந்தேகமே.

ஸ்டாலின்-சோனியா நட்புக்காகத் தன்னும்...

சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் இணைந்து போட்டியிடுவார்கள் என்றே நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.