Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

Published By: Digital Desk 1

06 Mar, 2026 | 10:52 AM

image

இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது

அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சாரசபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.  

WhatsApp_Image_2026-03-06_at_10.18.40.jp

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இ.மி.ச பதிலான புதிய நிறுவனங்களுக்கான முகாமையாளர்கள் நியமனம்

Mar 8, 2026 - 03:36 PM

இ.மி.ச பதிலான புதிய நிறுவனங்களுக்கான முகாமையாளர்கள் நியமனம்

கலைக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக புதிதாக நிறுவப்பட்டுள்ள 6 நிறுவனங்களில், 3 நிறுவனங்களுக்காகப் புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கை மின் உற்பத்தி (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்னவும், தேசிய மின் கடத்தல் கட்டமைப்பு சேவை வழங்குநர் (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். எஸ். வெத்தசிங்கவும், மின் விநியோக இலங்கை (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் கே. எஸ். ஐ. குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் கடந்த 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், மின்சார சபை ஊழியர் நிதிய (தனியார்) நிறுவனம் மற்றும் எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றுக்கு இதுவரை புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதால், அந்த சபையின் கீழ் ஊழியர்களால் நிறுவப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் ரத்தாகின்றன.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் புதிய புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட வேண்டும்.

தற்போது மின்சார சபையிலுள்ள 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், தமது புதிய நிறுவனங்களின் கீழ் புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ.மி.ச பதிலான புதிய நிறுவனங்களுக்கான முகாமையாளர்கள் நியமனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபை மறுசீரமைப்பு: 3 புதிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரிகள் நியமனம்!

08 Mar, 2026 | 04:53 PM

image

நாட்டின் மின்சாரத் துறையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கலைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள ஆறு புதிய நிறுவனங்களில் மூன்றிற்குப் புதிய முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரத் துறை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

லங்கா மின்சார உற்பத்தி லங்கா (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்ன.

தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் என். எஸ். வெட்டசிங்க.

மின்சார விநியோக லங்கா (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் கே. எஸ். ஐ. குமார.

மறுசீரமைப்புச் செயல்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட ஏனைய நிறுவனங்களான மின்சார சபை ஊழியர் நிதி (தனியார்) நிறுவனம் மற்றும் எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றிற்கு இதுவரை புதிய முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ செயல்பாட்டு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (08) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, மின்சார சபையின் கீழ் ஊழியர்களால் நிறுவப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் தானாகவே கலைக்கப்படுகின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலைக்கப்படுவதால், ஊழியர்கள் தத்தமது புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் புதிய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்து நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மின்சாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த பாரிய மாற்றம், எதிர்வரும் காலங்களில் மின் விநியோகக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார சபை மறுசீரமைப்பு: 3 புதிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரிகள் நியமனம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2026 at 06:29, ஏராளன் said:

அமைச்சர் குமார ஜயகொடி

இவர் முன்னர் அரச அலுவலராக இருந்த போது அரசாங்க களஞ்சியத்துக்கு கார்பெட் வாங்கிய விதத்தில் டெண்டர் ஊழல் செய்ததாக, ஊழல் ஒழிப்பு ஆணையம் இவர் மேல் வழக்கு போட்டுள்ளது.

ஆனாலும் அனுர இவரை பதவி விலக்கவில்லை.

@ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2026 at 10:04, goshan_che said:

இவர் முன்னர் அரச அலுவலராக இருந்த போது அரசாங்க களஞ்சியத்துக்கு கார்பெட் வாங்கிய விதத்தில் டெண்டர் ஊழல் செய்ததாக, ஊழல் ஒழிப்பு ஆணையம் இவர் மேல் வழக்கு போட்டுள்ளது.

ஆனாலும் அனுர இவரை பதவி விலக்கவில்லை.

@ரசோதரன்

ஜயக்கொடியின் கொடியும் இப்படி விழுந்து போனதே..................

இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி நடக்கின்றார்கள் போல...........🫣

என் நண்பன் ஒருவன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாற்றலாகிப் போனான். எனக்கு தெரிந்த வரையில் அவன் ஒருவனே சுத்தமானவன்............

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

ஜயக்கொடியின் கொடியும் இப்படி விழுந்து போனதே..................

இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி நடக்கின்றார்கள் போல...........🫣

என் நண்பன் ஒருவன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாற்றலாகிப் போனான். எனக்கு தெரிந்த வரையில் அவன் ஒருவனே சுத்தமானவன்............

ஓம் முந்தைய ஆட்சிகளில் இப்படி வழக்கே போட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் மேற்கில் (டிரம் ஆட்சி அல்ல) இப்படி நடந்தால் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பதவி விலகுவர்.

இவர் அமைச்சராகவே தொடர்கிறார்.

https://srilankamirror.com/news/case-filed-against-kumara-jayakody-over-rs-8-8-million-corruption-allegations/?amp=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.