Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண!

20 Mar, 2026 | 04:34 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி அவசியமாகும். அந்த நீதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும். இதன்போது புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தேவை எழுமாக இருந்தால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைமப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி தனது கேள்வியின்போது,

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் காணாமல் போனவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை என்ன? அது புதுப்பிக்கப்பட்டுள்ளதா? காணாமல் போனவர்களைப் பற்றிய ஒருங்கிணைந்த, நம்பத்தகுந்த தேசிய தரவுத்தளம் இன்னும் இல்லையென அரசு ஏற்றுக்கொள்கிறதா? அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்க எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? உடற்கூறு ஆய்வு, அடையாளம் காணல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கான கால அளவு என்ன?

அத்துடன் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான நடவடிக்கை என்ன? என்றார்.

இதற்க தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில்,

2009 இறுதிக் கட்ட யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்த மதிப்பீடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு காலத்தில் மாறுபடுகின்றன. எவ்வாறாயினும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்களின் நம்பகமான ஒருங்கிணைந்த தரவுத்தளம் இல்லாதது ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனால் இது தொடர்பில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பபடுகின்றன. குறிப்பாக நீண்ட காலத் தீர்வாகச் செயல்படும் வகையில், ஒரு விரிவான தரவுத்தள மேம்பாட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை 2025ல் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தடயவியல் பரிசோதனைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நீதி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றதத்தின் ஊடாக நடக்கும்.

நாங்களும் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். தடயவியல் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதற்கான கால அளவை கூற முடியாது. எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்கும் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்போம். அத்தடன் ஏனைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் காணாமல் போதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. யுத்தத்தில் எது சரி, தவறு என்று கூற முடியாது. ஆனால் எவராவது காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனோர் விடயத்தில் இது வரையில் கவனம் செலுத்தப்படாத விடயங்கள் இருப்பின் அது தொடர்பில் கூறலாம். தேவையான நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை, பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளி பொறிமுறையுடன் அரசாங்கம் இணங்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் கூறியுள்ளார். எமது தேசிய வேலைத்திட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதனால் இவ்வாறாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி தேவையான நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம். எவராவது தவறு செய்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். இன பேதமின்றி தேசிய பொறிமுறையில் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம். இதற்காகவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைகிறது.

காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அவசியமாகும். இதற்காக புதிய சட்டம் தேவையென்றால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக எதிர்வரும் 3 வருடங்களில் தேவையான அவதானத்தை செலுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/241486

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.