Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-5-21.jpg?resize=750%2C375&ss

துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கித் தீ வைத்துக் கொளுத்தியது. 

இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் எரிசக்தி ஆலைகளையும் எண்ணெய் கிணறுகளையும் அமெரிக்கா அழித்துவிடும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் வளைகுடா மற்றும் நீரிணையில் ஏவுகணைகள் அல்லது வெடிகுண்டு வீசும் வான் மற்றும் கடல் ட்ரோன்கள் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் அண்மைய நிகழ்வு இதுவாகும்.

ஒரு மாதத்துக்கும் காலமாக நீடித்து வரும் இந்த மோதல், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய விலையில் 200 மில்லியன் டொலருக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் சிறிது நேரம் உயர்ந்தன.

சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்தது.

பின்னர், துபாயில் உள்ள அதிகாரிகள், எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்தனர். 

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

Image

எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையேற்றம், அமெரிக்கக் குடும்பங்களின் நிதிநிலையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

அதேநேரம், எரிசக்தி விலைகளைக் குறைத்து அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு அரசியல் தலைவலியாகவும் மாறியுள்ளது.

உலகளாவிய விநியோக இறுக்கம் அமெரிக்க மசகு எண்ணெய் விலையை ஒரு பீப்பாயக்கு 101 டொலருக்கும் மேல் உயர்த்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய சராசரி சில்லறை பெட்ரோல் விலை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக திங்களன்று ஒரு கேலனுக்கு 4 டொலரை தாண்டியது என விலை கண்காணிப்பு சேவையான GasBuddy-யின் தரவுகள் காட்டின.

இரு தரப்புத் தாக்குதல்களும் தணியும் அறிகுறிகள் தென்படாத நிலையில், ஒரு பரந்த மோதல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

அண்மைய நாட்களில், ஈரான் ஆதரவு ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் வீசி போரில் நுழைந்தனர். 

மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், பின்னர் நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82 ஆவது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மத்திய கிழக்குக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்தனர். 

தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் அதே வேளையில், ஈரானிய எல்லைக்குள் படைகளை நிலைநிறுத்துவது உட்பட ட்ரம்பின் விருப்பங்களை விரிவுபடுத்தும் ஒரு வலுவூட்டலின் பகுதியாக இது உள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு அவர் நிர்ணயித்திருந்த முந்தைய காலக்கெடுவை நீட்டித்த பின்னர், கடந்த வாரம் அவர் நிர்ணயித்த ஏப்ரல் 6 ஆம் திகதி காலக்கெடுவுக்குள் தெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ட்ரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் பின்னர் கூறினார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக லெவிட் கூறினார். 

மேலும், தெஹ்ரான் பகிரங்கமாகக் கூறுவதற்கும், அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் கூறுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும், அதை மீண்டும் திறப்பதற்கான சிக்கலான நடவடிக்கையை பிற்காலத்தில் மேற்கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பின்னர் செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தான், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுகளைப் பெற்றதாக ஈரான் திங்கள்கிழமை முன்னதாகத் தெரிவித்தது.

போரின் செலவை ஏற்குமாறு அரபு நாடுகளைக் கேட்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. 

ட்ரம்ப் நிர்வாகம் போருக்காக மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதியைக் கோரியுள்ளது. 

புதிய செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அமெரிக்க காங்கிரஸில் இந்தக் கோரிக்கை கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

https://athavannews.com/2026/1470499

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.