Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதலை தடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலை தடுப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல்கள்

-விதுரன்-

மாவீரர் தினத்துக்கு முன் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல் எதுவும் நடத்தலாமென அரசு கருதுகிறது. அவ்வாறானதொரு தாக்குதல் மூலம் புலிகள் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடக் கூடாதென்பதில் அரசு மிகவும் அக்கறையாக உள்ளது. வடக்கில் புலிகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் தெற்கில் அரசின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகி விடுமென்பதால் இந்த அரசின் இன்றைய மூலதனம் யுத்தத்திலேயே உள்ளது.

வடபோர் முனையில் படையினர் தற்போது இரு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரம் வரப்போகும் புலிகளின் மாவீரர் தினத்திற்கும் வடக்கே பெய்துவரும் மழைக்கும் படையினர் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

மாவீரர் வாரத்தில் புலிகள் எங்காவது பாரிய தாக்குதலை நடத்தி பெருவெற்றி பெற்றுவிடலாம். கடும் மழை பொழிவதால் புலிகளுக்கெதிராக பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையென இரு பெரும் நெருக்கடிகளைப் படையினர் சந்திக்கின்றனர். இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்காகவே வடக்கே தற்போது படையினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வடக்கே, வன்னியில் அல்லது மணலாறில் அல்லது யாழ்.குடாவில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தலாமென படையினர் எதிர்பார்க்கின்றனர். இதனால், புலிகளின் திடீர் தாக்குதல்கள் நடைபெறலாமெனக் கருதப்படும் பகுதிகளில் படையினர் தினமும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தங்கள் முன்னரங்க நிலைகள் மீது புலிகளே தாக்குதல்களை நடத்துவதாக படையினர் கூறிக்கொண்டு தாங்களே புலிகளின் நிலைகள் மீது தினமும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளுக்கெதிரான பாரிய நடவடிக்கைகள் சாத்தியப்படாதென்பதை படையினர் உணர்ந்துள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களிலும் சிறுசிறு குழுக்களாகவும் சென்று புலிகளின் பகுதிகளில் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாமெனக் கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாகவும் இடைவிடாதும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் பாரிய தாக்குதலொன்றை நடத்துவதற்கு அவகாசமோ அல்லது வாய்ப்போ கொடுக்காத விதத்தில் வடக்கே சகல பகுதிகளிலும் படையினரின் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

புலிகள் தாக்குதல் சமரொன்றில் ஈடுபடும் நிலையிலிருந்து தங்களை தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே படையினர் தினமும் வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீதும், அவர்களது விநியோகப் பாதைகள் மீதும், அவர்கள் ஒன்று திரளும் இடங்கள் மீதும் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்களையும் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், வன்னிக்குள் புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அவர்களது போர்த் தயாரிப்புக்களை குழப்பும் விதத்திலும் தினமும் விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் விமானத் தாக்குதலொன்றில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையானது விமானப் படையினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான மேலும் பல தாக்குதல்கள் மூலம் புலிகளின் ஏனைய தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைக்க முடியுமென்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தாதது வன்னிக்குள் விமானப் படையினரின் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

போர் விமானங்கள் ஒன்று இரண்டாவது புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் வன்னிக்குள் விமானப்படையினரின் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும். தாக்குதல் நடத்த முற்படும்போது ஏவுகணை குறித்த அச்சத்தில் விமானிகளும் இலக்குகளை தவறவிடும் வாய்ப்புள்ளது. ஆனால், புலிகளிடமிருந்து இதுவரை எவ்வித அச்சுறுத்தலுமில்லாததால், தாக்குதல் நடத்தாவிடினும் புலிகளை மிரட்டும் நோக்கிலும் போர் விமானங்கள் அங்கு பறந்து திரிகின்றன.

இதுவரை காலமும் இல்லாவிட்டாலும் தமிழ்ச்செல்வனின் இழப்பின் பின்னாவது விமானப்படை விமானங்கள் வன்னி வான் பரப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டுமென்ற எண்ணம் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அங்கு மேலும் பல தாக்குதலுக்கு விமானப் படையினரை உற்சாகப்படுத்தும் அதேநேரம் போர் விமானங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களின் அவசியத்தையும் புலிகளுக்கு இது உணர்த்தியிருக்கும்.

மாவீரர் தினத்துக்கு முன் சில வெற்றிகளைப் பெற புலிகள் முனையக்கூடுமென படையினர் எதிர்பார்க்கின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் ஏற்பட்ட பெரும் தோல்வியை பெரும்பாலும் மூடி மறைத்துவிட்டது. அநுராதபுரத்தில் படையினருக்கு பெருந்தோல்வி ஏற்பட்டாலும் அதற்கப்பால் புலிகளின் முக்கிய தலைவர்களைக் கூட மிகத் துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்கும் ஆற்றல் விமானப் படையினரிடமுள்ளதென்றதொரு தோற்றப்பாட்டை இத்தாக்குதல் தென் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

விமானப் படையினரின் எத்தனை விமானங்களைப் புலிகள் அழித்தாலும் சரி அவற்றை மீளப்பெற்றால் புலிகளின் தலைவர்களை அழித்துவிடும் ஆற்றல் விமானப் படையினரிடம் உள்ளது போன்றதொரு நிலையை தெற்கில் அரசும் படைத்தரப்பும் ஏற்படுத்த முற்படுகின்றனர்.

அத்துடன், தெற்கே விமானப்படைத்தளங்களுக்கு வந்தால் மட்டுமே புலிகளால் இந்த விமானங்களை அழிக்க முடியுமென்றும் வன்னிக்குச் செல்லும் விமானங்களை அவர்களால் அழிக்க முடியாதென்ற எண்ணமும் தென்பகுதி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வன்னியில் விமானப் படையினர் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். உளவு விமானங்கள் 24 மணிநேரமும் பறந்து புலிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களைத் திரட்ட முற்படுகின்றன. இதனால் புலிகளின் படையணிகளின் நகர்வுகளை பகல் வேளைகளில் மேற்கொள்வதில் புலிகளும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

போர் முனைகளில் புலிகள் பெருமெடுப்பில் ஒன்று திரள்வதைத் தடுப்பதற்கான தீவிர முயற்சிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான படை முகாம்களில் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் குவிக்கப்பட்டு புலிகள் ஒன்றுகூடும் இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக கடும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் அல்லது யாழ். குடாநாட்டில் பாரிய படை நகர்வுகளை மேற்கொள்வதில் படையினர் புதிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா முதல் மன்னார் வரையான முன்னரங்க காவல் நிலைகளிலிருந்தென்றாலும் குடாநாட்டில் முகமாலை முன்னரங்க நிலைகளிலிருந்தென்றாலும் மேற்கொள்ளப்படும் பாரிய படைநகர்வுகள் அனைத்தும் படுதோல்விகளைச் சந்திக்கலாமென்றதொரு அச்சம் படையினருக்கேற்பட்டுள்ளது.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல அடுத்தடுத்து அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு பெரும் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறிவந்தாலும் ஒவ்வொரு பெரும் சமர்களின் போதும் புலிகள் ஷெல்களையும், மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழிந்து நடத்தும் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

புலிகளுக்கு பெரும் ஆயுதப் பற்றாக்குறையேற்பட்டுள்ளதால

இராணுவத்திற்கு மாவீரர் வாரம் எப்போதுமே வயிற்றில் பு(லி)ளி கரைத்தது போன்றதுதான். இவர்கள் எதிர் பார்க்கும் நேரங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் எதிர்பார்த்த இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை. மழை காலத்தை நம்பியும் இனிமேல் தாக்குதல்கள் நிகழப்போவதுமில்லை. இராணுவமோ அரசோ அல்லது இராணுவ நிபுணர்களோ எதிர்பார்த்திராத விடயமொன்றுதான் நடைபெறப் போகின்றது. கா.வே. பாலகுமாரின் பேச்சும் அரசினரால் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும். ஆனாலும் அவைகள் மறக்கப்படும் வேளைதான் தாக்குதல்காலமாகும். அப்போது இராணுவத்தினரும் ஓய்ந்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.