Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரையும் அழிப்போம் என்பது பகல் கனவு - அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன்

Featured Replies

எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரையும் அழிக்கும் வல்லமை தனக்கிருப்பதாக இலங்கை அரசு கூறுவது பகல்கனவெனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இரகசிய தகவல் மூலம் தமிழ்ச்செல்வன் மீது தாககுதல் நடத்தப்படவில்லை எனவும் கூறினார்.

அத்துடன் எத்தனை இழப்புகள் இடர்பாடுகள் வந்தாலும் எதிர் கொள்வதற்கும் எப்போதும் தாம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்த பா. நடேசன் துயர் சூழ்ந்த வேளைகளில் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றியிருக்கிறோம். அது இனியும் தொடருமெனவும் கூறியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேட்டியளித்த அவர் :-

கேள்வி : தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகள் அமைப்பிலும் ஈழமக்களிடமும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது?

பதில் : தமிழ்ச்செல்வன் எமது போராளி அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஒரு படைத்தளபதியாக மட்டுமின்றி அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இராஜதந்திரியாகவும் செயற்பட்டார். அவரது இழப்பு எமக்குப் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரை மக்கள் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும் மக்கள் அவரை எவ்வளவு நேசித்தார்கள் என்பதும் உலகெங்கும் அவருக்காக நடத்த அஞ்சலிக் கூட்டங்களில் வெளிப்பட்டது.

ஈழத்தில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட போது மேலே இலங்கை இராணுவ விமானங்கள் பறந்து அச்சுறுத்தின. ஆனால், அதற்கு அஞ்சாமல் மக்கள் அந்தத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். தமிழ்சசெல்வனின் கொலை எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

கேள்வி : அநுராதபுரம் இராணுவத்தளம் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏழுநூறு கோடி ரூபா இழப்பால் விளைந்த கோபம் தான் தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு காரணம என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில் : இலங்கi அரசு தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பின் ஒரு பகுதியே தமிழ்ச்செல்வன் கொலை. அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் இப்படிப்பட்ட கொலைகளை சிங்கள அரசு செய்யும். அதன் இனவெறி வரலாற்றில் இதற்குப் பல எடுததுக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

கேள்வி : நோர்வே தூதுவரை அழைத்து தமிழ்ச்செல்வன் கொலைக்காகப் புலிகளின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். சர்வதேச சமூகம் இந்தக் கொலையை எப்படி எடுத்திருக்கிறது?

பதில் : போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவரையே அழைத்து இலங்கை அரசின் இந்தப்படுகொலை குறித்த எங்கள் விளக்கத்தையும் கண்டனததையும் நோர்வே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தப் படுகொலைக்கு என்ன விதமான நடவடிக்கையை இலங்கை அரசின் மீது எடுக்கப் போகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம், என்றும் நாங்கள் கேட்டிருக்கிறோம். பல நாடுகளுக்கும் இலங்கை அரசின் தமிழர் விரோத பாசிச போக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பிரிட்டன் பாராளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களுக்கான பல கட்சிக் குழுவினரும் இந்தக் கொலையை பகிரங்கமாக கண்டித்திருக்கிறார்கள். மற்ற பல நாடுகளும் கண்டிக்கும் என நம்புகின்றேன்.

கேள்வி : தமிழகத்தில் உங்களை ஆதரிப்பவர்கள் பல குழுக்களாக சிதைந்து கிடக்கிறார்களே?

பதில் : தமிழகத்தில் உள்ள பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன. எங்களைப் பொறுத்த வரை தமிழகத்தின ஆறரைக் கோடி மக்களும் எமது ஈழவிடுதலைப் போரின்பால் அக்கறையும் ஆதரவும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவு தான் கருத்து வேறுபாடு இருந்தாலும ஈழத்தமிழர் போராட்டம் என வரும் போது உணர்வால் ஒன்றுபட்டே நிற்கின்றார்கள்.

கேள்வி : தமிழ்ச்செல்வனுக்கு தமிழக முதல்வர் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக்கவிதை ஈழத் தமிழரிடம் வரவேற்பையும் தமிழகத்தில் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறதே?

பதில் : தமிழக முதல்வர் கலைஞரின் கவிதை வரிகள் தமிழகத்ததின் ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பாதாக இருந்தது. எங்கள் காயங்களுக்குக் களிம்பு தடவுவதாக இருந்தது அந்தக் கவிதைக்கு ஈழத்தமிழர் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி இந்த இரங்கல் கவிதையை முன் வைத்து எழுப்பப்படும் சர்ச்சைகள் பற்றி நான் கூற எதுவும் இல்லை.

கேள்வி : தமிழகத்திடமும் இந்தியவிடமும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் : எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்து கொண்டு ஈழ மக்களின் தாயக கனவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

கேள்வி : புலித்தலைவர்களின் வசிப்பிடங்கள் எங்களுக்குத் தெரியும், அவர்களை ஒவ்வொரவராகக் கொல்வோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?

பதில் : எமது முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போரில் இவ்வாறான அறிவிப்புகளைப் பல முறை செய்திருக்கிறார்கள். எங்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரையும் கொல்லும் வல்லமை தனக்கிருப்பதாக இலங்கை அரசு சொல்வது பகல் கனவுதான்.

கேள்வி :நான்கு வருட சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் இருதரப்பிலும ஏராளமான உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகவும் அப்படி ஊடுருவிய உளவாளிதான் தமிழ்ச்செல்வனின் துல்லியமான கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகின்றதே?

பதில்: தமிழ்ச்செல்வனின் படுகொலை அப்படி நடந்ததாக நாங்கள் கருதவில்ல.

கேள்வி : அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பிறகு சர்வதேச அளவில் உங்கள் அமைப்புக்காகப் பணியாற்ற சரியான ஒரு பிரதிநிதி இல்லை என்று சொல்லப்படுகிறதே?

பதில் : எமது தலைவர் ஆழமான திட்டங்கள், சிந்தனைகளின் அடிப்படையிலேயே பல்வேறு துறைகளிலும் பொறுப்பாளர்களை வளர்த்து வருகிறார். அவ்வாறான ஒரு கட்டமைப்பின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை முன்னேடுத்துச் செல்ல முடியும். போராட்டம் என்றால் இழப்புகளையும எதிர்பார்த்துத்தான் நாங்கள் இருக்கின்றோம். எத்தனை இழப்புகள் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை நிரப்பத் தயார் நிலையில் தான் எங்கள் அமைப்பு எங்கள் தலைவரின் தலைமையில் அணிவகுத்து நிற்கின்றது. துயர் சூழ்ந்த வேளைகளில் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக நாங்கள்மாற்றிக் காட்டியிருக்கிறோம். இனியும் அது தொடரும்.

நன்றி : தினக் குரல்

"துயர் சூழ்ந்த வேளைகளில் அதை வெற்றியின் படிக்கட்டுகளாக நாங்கள்மாற்றிக் காட்டியிருக்கிறோம். இனியும் அது தொடரும்."

இதுவே ஈழவிடுதலைப் போராட்டத்தின் நிலைப்பாடு. வெல்க தமிழீழம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் நிட்சயமாக புலிகளின் நிதி நிலையை வலுப்படுத்த வேண்டும்.

சிங்கள தேசம் இனி வரும் காலங்களில் முற்றிலும் நவீன வான்படையை நம்பித்தான் யுத்தத்தை மேற்கொள்ளும். தரை நகர்வுகளை மட்டுபடுத்தி தான் மேற்கோள்ளும்.

புலிகளின் வான்படையை எதிர்கொள்ளும் வலிமை அதிகரிக்கப்படல் வேண்டும். அதற்கு புலத்தில் வாழும் தமிழர் தான் கைகொடுத்து உதவுதல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.