Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டபயாவின் சூளுரை!

Featured Replies

'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நாம் கொல்வது உறுதி அவரது சாவு நெருங்கிவிட்டது. இன்று (கடந்த திங்களன்று) அவர் கொண்டாடும் 53 வது பிறந்த தினமே அவர் காணும் கடைசிப் பிறந்த தினமாக இருக்கும்.'

இந்த சாரப்பட ஆணித்தரமாகச் சூளுரைத்திருக்கின்றான் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோரதனுமான கோட்டபயா ராஜபக்ஷ.

செய்தி நிறுவனம் ஒன்றறுக்கு நேற்று முன்தினம் அளித்த விசேட போட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

அவரது அந்தப் பேட்டி தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு :-

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரைக் கொல்லும் இலக்கோடு அவரைக் குறிவைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஒளிவு மறைவான கெரில்லா இயக்கத்தின் தலைவரின் நடமாட்டங்களும், தந்திரோபாய வெற்றிகளை நிலைநாட்டும் வலிமையும் முடக்கப்பட்ட நிலையில், இநத நீண்ட கால யுத்தத்தில் இப்போது தங்கள் கையோங்கியிருக்கின்றது என வலிமை வாய்த பாதுகாப்பு செயலாளர் கோட்டபயா கொழும்பில் தெரிவித்தார்.

இம் மாதம் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். அது இலக்கு வைத்தது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும கூறும் அரசு, தற்செயலாக அதில் தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்பதை மறுக்கின்றது.

'தமிழச்செல்வனின் கொலை ஒரு பலமான செய்தியை எடுத்துச் சென்றது. அவர்களின் நடமாட்டம் குறித்து நுண்ணியமான புலனாய்த் தகவல்கள் எங்களிடம் உள்னளன என்பது அவர்களுக்கு இப்பொது தெரியும்'. என்று கடந்த திங்களன்று மிகுந்த பாதுகாப்பு மிக்க பாதுகாப்பு அமைச்சுக்குள் இருந்தபடி பேட்டியளித் கோட்டபயா கூறினார்.

திங்களன்றுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 53 வது பிறந்த தினமாகும். திட்டப்படி எல்லாம் நடந்தால் அதுதான் அவரது கடைசிப் பிறந்ததினம் என்றான் கோட்டபயா.

'நாம் அவரை இலக்கு வைத்துள்ளோம். அவர்களது தலைமையை நாம் விசேடமாகக் குறிவைத்துள்ளோம்.' என்றார் அவர்..

'கடந்த சில மாதங்களாக அவர் (பிரபாகரன்) தமது நடமாட்டங்களை மேலும் குறைத்துக் கொண்டுள்ளார். நாம் அவர்களை நெருக்குவாரத்துக்கள் வைத்திருக்க விரும்புகிறோம். புலனாய்வுத் தகவல்களை நாம் திரட்டி வருகின்றோம்".

தனியான தாயகத்துக்கான யுத்தத்தில்; மரணித்த சுமார் 20 ஆயிரம் தமிழர்களை நினைவு கூறும் வகையில், ஒரு வாரமாக இடம் பெற்ற மாவீரர் வார முடிவில், வடபகுதியில் உள்ள தமது 'மினி' தேசத்தில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்தபடி, வருடாந்த உரையை பிரபாகரன் ஆற்றவிருக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்குப் பல பின்னடைவுகளைத் தந்த ஒரு வருடத்தின் முடிவில் பிரபாகரனின் உரை செவ்வாய் பின்னாளில் ஒலிபரப்பாகவிருந்தது.

தீவின் கிழக்குப் பகுதியை கடந்த ஜூலையில் முற்றாகத் தனது கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வர அரசால் முடிந்தது. அத்துடன் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கடத்தல் கப்பல்கள் பலவற்றையும் தங்களால் மூழ்கடிக்க முடிந்ததாக அரசு தெரிவிக்கின்றது.

கடந்த 35 வருடங்களாக இழுபட்ட ஆசியாவின் மிக நீண்ட சிவில் யுத்தமான இந்தப் பிணக்கு இறுதியாக அரசுக்கு சார்பாக முடியப் போகின்றது என்று தீவின் ஜனாதிபதியின் சகோதரனும் வெளிப்படையகப் பேசுபவனுமான பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.

2002 இல் நோர்வேயின் அனுசரனையுடன் ஆரம்பித்த சமாதான முயற்சிகள் கவிழ்ந்த போனதை அடுத்துத் தொடங்கிய இந்த பயனற்ற யுத்தம், அடுத்த வருடத்தில் மோதல்கள் மோசமாக வெடித்து, இறுதியில் முற்றுப் புள்ளிக்கு வரும், என்று அவர் சைகை காட்டினார்.

'எங்கள் நோக்கம் அவர்களைப் பலவீனப்படுத்துவது. இராணுவ ரீதியாக அவர்களைத் தோற்கடித்து, வன்னியை எமது கட்டுப்பாடடின் கீழ் நாம் கொண்டு வந்தாக வேண்டும்'. என்றார்.

'அது சாத்தியமானதே. நாம் அவர்களைத் திருக வேண்டுயது தான் பாக்கி. அதன் பின்னர் அமைதித் தீர்வுகிட்டுவது சாத்தியமாகும்." என்று குறிப்பிடும் பாதுகாப்புச் செயலாளர், புலிகள் மேலும் ஆயுதங்களைக் கடத்துவதற்கு மட்டுமே யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்துவதால் அவர்களைச் சிதறடிப்பதே வழி என்றார்.

புலிகளின் இலகு ரக விமானத் தாக்குதல்கள், கரும்புலித் தாக்குதல்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அடியோடு நிராகரிக்கிறார் பாதுகாப்புச் செயலாளர்.

'இறுதியில் அவை வெறும் குறியீடுகள் தாம். அவை மனோ வலிமையைப் பாதிக்கலாம் ஆனால் தந்திரோபாய ரீதியில் அவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'. என்றார் அவர்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுவரை கோத்தபாய உயிருடம் இருப்பதன் உண்மைக்காரணமே அவரது புத்தி சுவாதியீனமான பேச்சுக்கள் புலிகளை இரசிக்கவைத்துக் கொண்டிருப்பதே என்பதை அவர் இன்னும் உணரவில்லைப் போலும்.

உவர் தனிய உதை பேசவில்லை... உவரை ஆரோ பேசவைக்கினம்.... ஈழ்த்தின் விடிவு ஒன்றுதான் எமது தலைமையின் முதல் தெரிவு... அதுக்குப்பிறகு உவரைப் பார்க்கலாம்.

சும்மா புளுகுறதவிடவேனும்.... புலி புகுங்தால் எல்லாம் நாறிப்போடும்... கவனம்

ஒருமையிலான சொற்கள் திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

Edited by இணையவன்

சமாதானப் பேச்சுக்கள், யுத்த நிறுத்த ஒப்பந்தங்களின் பலாபலன்களால் கோத்தபாயவினால் இவ்வாறு பேச முடிகிறது. அனுபவப்பட்ட ஆட்சியாளர்கள் இவர்களுக்கு படிப்பினையாகக் கூட இருக்கவில்லை. வரலாறுகளைக் கூட இவர்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றார்கள். மனிதர்களுக்கு மரணம் வரும். தலைவர் பிரபாகரனும் மனிதன்தான். அந்தத் தலைவனால் உருவாக்கப்பட்ட விடுதலைத் தீ இவர்களால் அணைக்கப்படுவதற்கு முடியாதது. தாக்குதல் நிலையெடுத்து விடுதலைப்புலிகள் செயற்படும்போது இவர்களின் சுருதி மாறுபடும். அப்போது இந்தக் கருத்துக்களை இவர்கள் எதற்காகச் சொன்னார்கள். அதன் விளைவு எத்தகையது என்பது தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.