Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மு.கா எதிராக வாக்களீக்க முடிவு.

Featured Replies

தற்போது கிடைத் செய்தியின் படி இ.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹாக்கிம் பஜட்டிற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றது

ஜானா.

தற்போது கிடைத் செய்தியின் படி இ.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹாக்கிம் பஜட்டிற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றது

ஜானா.

ரவூப் ஹாக்கிம் எங்க அறிக்கை விட்டவர்? :D

முஸ்லிம் காங்ரஸ் அரசில் இருந்து விலகவுள்ளது?

[Wednesday December 12 2007 06:30:29 AM GMT] [யாழினி]

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக நேற்று மாலை தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.இன்று பாராளுமன்ற அமர்வுகளின் போது முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி ஆசனத்தில் அமருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேளை முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் சார்பில் தான் உரையாற்றுவது இதுவே கடைசி தடவையாக இருக்குமென தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் பிற்பகல் 2 மணிக்கு எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர

[12-12-2007 11.55am]

roufhakeem.jpg

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதனையடுத்து, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் இன்று பிற்பகல் 2 மணியளவில் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் அஸன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத், பைசல் கசீம் ஆகியோரே இன்று நண்பகல் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.

அத்துடன், 14ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்றிரவு கூடியபோது, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இன்று எதிர்க்கட்சியில் அமர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிகளை அரச நிறுவனங்களுக்காக சொந்தமாக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சு தோல்வியில் முடிவடைந்ததாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தி எதிராக வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களின் பெருமமையானவர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://lankadissent.com/index.php?option=c...57&Itemid=1

தமிழ் மக்களின் நெருக்கடிகள் குறித்து எமக்கு சிக்கல் உள்ளது என்கிறார் ரவூப் ஹக்கீம்

[12-12-2007 4.00pm]

முஸ்லிம் மக்களின் உரிமையைப் பாதுகாத்துத் தரும் வரை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதேபோல், தமிழ் மக்களின் நெருக்கடிகள் குறித்தும் தமக்கு சிக்கல் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து இன்று (டிச.12) எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட ரவூப் ஹக்கீம், சபையில் விசேட உரையொன்றை ஆற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

''குறித்த காலம் முதல் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து தரும்வரை பார்த்துக் கொண்டிருந்தாலும், அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் நெருக்கடிகள் குறித்து எமக்கு இன்று சிக்கல் உள்ளது. விசேடமாக இதுகுறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்'' என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

சபையிலும், சபைக்கு வெளியிலும் தாம் அரசாங்கத்திற்காக பேசியதாகவும், வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவு வழங்கியதாகவும் எனினும், அரசாங்கத்திலிருந்து விலகுவதாக தாம் முன்கூட்டியே அறிவித்ததாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ''பெசில் ராஜபக்ஷவுடன் நாம் பேசினோம். எனினும், எமக்கிருந்த சிக்கல்களுக்கு அதில் தீர்வு காணப்படவில்லை. எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் நியாயமானதாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்பட்டால் நல்லதென நான் கூறுகின்றேன்'' என ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கமுடன், மேலும் மூன்று உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டனர்.

அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சியில் அமர்ந்த நான்கு உறுப்பினர்களும் பதவி வகித்த அமைச்சுப் பொறுப்புக்களின் இராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LankaDissent.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.