Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறீலங்காவுக்கு அமெரிக்காஇராணுவ உதவி வழங்குவதன் பின்னணி"

Featured Replies

"சிறீலங்காவுக்கு அமெரிக்காஇராணுவ உதவி வழங்குவதன் பின்னணி"

ஜெயராஜ்

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த போக்கில் உள்ளது என்பது இன்று அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாகும். இது ஊகத்தின் அடிப்படையிலான எதிர்வு கூறல் எனக் கூறத்தக்கதல்ல. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யாதுவிடினும், முழு அளவிலான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை 20 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளமையே போதிய எடுத்துக் காட்டாகும்.

யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்று காணப்படுதல் விரும்பத்தக்கது.

போன்றவைற்றைத் தமது அபிப்பிராயமாக வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா, தற்போது அதற்கு எதிர்மாறான சூழ்நிலையில் சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியும் ஒத்துழைப்பும் வழங்க முன்வந்துள்ளது.

அதாவது எதிர்மாறான சூழல் என்பது இதுவரையில் இல்லாத அளவிற்கு சிறீலங்கா அரசு மீது மனித உரிமை மீறல்கள் குற்றச் சாட்டுக்கள் மிக அதிகளவில் சுமத்தப்படும் நிலையிலும், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைப்பதைச் சிறீலங்கா அரசு தொடர்ந்தும் நிராகரித்து வரும் நிலையிலும், இவை யாவற்றிற்கும் மேலாக சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறிப்பாகக் கொழும்பில் இருந்து தமிழரை வெளியேற்ற முற்பட்டமை வகை தொகையின்றிக் காரணமின்றித் தமிழரைக் கைது செய்து சிறையில் அடைத்தமை என்பதன் மூலம் இனரீதியான ஒடுக்கு முறையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்ற அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் அமெரிக்கா இராணுவ உதவி அளிக்க முன்வந்துள்ளமையானது, அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாகவே நோக்கப்படுகிறது.

இதேவேளை இவ்வாறான மாற்றத்திற்கு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அமெரிக்கா நலனுக்கு மாறானதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டமையோ அன்றி உணரப்பட்டமையோ காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளின் அண்மைய நடவடிக்கைகள் எவையும் அமெரிக்க் நலன்களைப் பாதித்ததற்கான வாய்ப்புக்களில்லை. சிலவேளை அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் சிறீலங்கா அரசிற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கருதினால் இத்தகைய உதவிகளை முனைப்புப்படுத்தியிருக்கலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.