Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்]

இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி

இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்]

இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி

கூட்டு விமான பயிற்சியின் போது இந்திய படை தவறுதலாக புலிகளின் பகுதியில் குண்டை போட்டுவிட்டதாக எப்போ அறிக்கை விட போறிங்க? :D .

அப்படி அறிக்கை விடும் போது கருணாநிதியின் ஊடாக விடுங்கோ(அவருக்கு தான் எதுகை மோனையுடன் எழுத தெரியும்) அப்போ தான் ஈழத்தமிழர் மனங்கள் நன்றாக குளிரும் :lol::D

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா பெரிய ஒரு கண்டுபிடிப்பு என்கடை லினுக்ஸ்ஸால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான்,

அதற்கான சாத்தியங்கள் இல்லையென்று உங்களால் அறுதியிட்டுக் கூறமுடியுமா ?

புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்டதான செய்திகளில் இந்தியக் கடற்படையின் பங்களிப்பு எப்படியானது என்று எங்கள் யருக்காவது தெரியுமா ? இந்தியாவே தாக்குதல்களை நடத்தியிருக்கலாம்தானே, எம். வி . அகத்திற்கு நடந்தது என்னவென்று தெரியும்தானே ?!

ஆகவே இந்திய விமானப்படை தாக்குவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. ஏனென்றால் ஒருமுறை புலிகளுடன் கொடூரமான யுத்தமொன்றில் இந்தியப்படை ஈடுபட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடவேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது நடப்பது இந்தியாவின் முழு அளவிலான யுத்தத்திற்கான முதல்ப்படிதான்.

கூட்டு விமான பயிற்சியின் போது இந்திய படை தவறுதலாக புலிகளின் பகுதியில் குண்டை போட்டுவிட்டதாக எப்போ அறிக்கை விட போறிங்க?

இந்த கேள்வி யாரை பார்த்து கேட்கப்படுகின்றது?

அப்படி அறிக்கை விடும் போது கருணாநிதியின் ஊடாக விடுங்கோ

யாருக்கு இது சொல்லப்படுகின்றது?

கேட்கப்படும் கேள்விக்கும் சொல்லப்படும் ஆலோசனைக்கும் உரியவர்கள் யார்? அவ்வாறானவர்கள் முன்பு விட்ட உதாரண அறிக்கைகள் என்ன? இந்த கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ? ஒன்றுமே புரியவில்லை சற்று புரியவைக்கமுடியுமா?

இலங்கை இந்தியப் படைகள் ஆகாயத்திலும் கூட்டு ரோந்து.

விடுதலைப்புலிகளால் தற்சமயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் வான் படை அச்சுறுத்தலைத் தொடர்ந்து இலங்கை இந்திய கூட்டு விமானப்படை நடவடிக்ககைள் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் கொழும்புக்கு வந்து இதுபற்றி உயாமட்ட ஆலோசனைகள் இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பின்னர் மேற்கண்டவாறு தீர்மானிக்கபட்டடதாகத தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி இந்தி நாளேடுகள் வெளியிட்ட செய்திகளில்

தென்னிந்தியக் கடல் பகுதியில் கடந்த வாரம் பாரிய ஒத்திகையொன்றை மேற்கொண்டிருந்த இந்திய விமானப்படை, எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான ஒத்திகைகளை மேற்கொள்த் தீர்மானித்துள்ளது.

சமச்சீரற்ற யுத்தத்தின் சவால்களை எதிர் கொள்ளவும், கடல் வழி ஊடுருவலைத் தடுக்கவும் அடுத்த வருடம் இந்திய விமானப்படை இலங்கை விமானப்படையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அறியமுடிந்தது.

'விடுதலைப் புலிகளின்விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்டை அவசரமாக இரு 'ராடர்'களைத் தென்னிந்தியாவிற்கு நகர்த்தியிருந்தது.

மேலும் அப் பகுதியில் வளங்களைக் குவிப்பதில் அது கவனம் செலுத்துகிற்னது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட் 'ஏரோஸ்டட் ராடர்'களைப் பயன்படுத்தவும் எண்ணியுள்ளது.

இப்பகுதியில் உள்ள விமானத் தளங்களை உஷாh நிலையில் வைத்திருக்கவும் பலவகை விமானங்களைக் கையாளக்கூடியதாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறன.

நன்றி சுடர் ஒளி

அப்ப அபுரம், கட்டுநாயக்காவை இந்திய மக்கள் நேரிலும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டும் என நம்புவோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான்,

அதற்கான சாத்தியங்கள் இல்லையென்று உங்களால் அறுதியிட்டுக் கூறமுடியுமா ?

புலிகளின் கப்பல்கள் தாக்கப்பட்டதான செய்திகளில் இந்தியக் கடற்படையின் பங்களிப்பு எப்படியானது என்று எங்கள் யருக்காவது தெரியுமா ? இந்தியாவே தாக்குதல்களை நடத்தியிருக்கலாம்தானே, எம். வி . அகத்திற்கு நடந்தது என்னவென்று தெரியும்தானே ?!

ஆகவே இந்திய விமானப்படை தாக்குவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. ஏனென்றால் ஒருமுறை புலிகளுடன் கொடூரமான யுத்தமொன்றில் இந்தியப்படை ஈடுபட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடவேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது நடப்பது இந்தியாவின் முழு அளவிலான யுத்தத்திற்கான முதல்ப்படிதான்.

சாத்தியமில்லை என்று கூறவில்லை. லினுக்ஸ் என்பவர் ஏதோ வைத்து எடுத்தவர் போல கூறுவது சந்தேகத்தை அவர் பால் ஏற்படுத்துகிறதே தவிர சத்தான எதனையும் தரவில்லை என்றே தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.