Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் குடாநாட்டில் மேஜர் முரளி உட்பட 10 வேங்கைகள் நினைவு கூரப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 23-12-2007 07:51 மணி தமிழீழம் [சிறீதரன்]

யாழ் குடாநாட்டில் மேஜர் முரளி உட்பட 10 வேங்கைகள் நினைவு கூரப்பட்டனர்

மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் நினைவு நிகழ்வுகள் யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவினை தழுவிக் கொண்ட முன்னாள் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் 20 ஆண்டு நினைவு நிகழ்வுகள் உரும்பிராயில் அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் மேற்படி மாணவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் பொதுமக்களால் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி படையினரால் கடந்த ஆண்டு சிதைக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களால் மிகுந்த உணர்வோடு சிதைக்கப்பட்ட தூபி சுத்தமாக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

சிங்களப் படைகளின் கொலைத்து வேசங்களின் மத்தியிலும் இதில் அப்பகுதி பொது மக்களும் கலந்துகொண்டனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

<_< மாவீரரான மேஜர் முரளியின் 20 ஆம் ஆண்டு நினைவில் அவர் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வு.....

1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றியும் அமைந்திருந்த புலிகளின் காவலரன்களை அழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் வான்படை விமானங்கள் அகோரக் குண்டுவீச்சில் ஈடுபட்டிருந்த காலம். யாழ்ப்பாணக் குடா நாடெங்கும் வீடுகளிலும், பொது இடங்களிலும் மக்கள் பதுங்கு குழிகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

முதன் முறையாக முரளி அண்ணாவை நான் கண்டது ஒரு பாடசாலை நாளில். அப்போது அவர் புலிகளின் மாணவர் பிரிவான சோல்ட் இன் பொறுப்பாளராக இருந்தார்.விமானக் குண்டு வீச்சில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று விளக்கம் தருவதற்காக எமது பாடசாலைக்கு இன்னும் சில போராளிகளுடன் வந்திருந்தார். அங்கு ஒரு ஒளிப்பட நாடா காட்டப்பட்டது. அதில் ரெண்டாம் உலகப் போரிலும், வியட்னாமிலும் மக்கள் எப்படி தம்மை விமானக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தனர் என்பதுபற்றி விரிவாக விளங்கப் படுத்தப்பட்டது. ஒளிப்பட நாடா முடிந்தவுடன் முரளி அண்ணா பேசத் தொடங்கினார். அவர் பேசும்போது அந்த மண்டபத்தில் குழுமியிருந்த 2000 பேரினதும் மவுனமே அவரின் பேச்சின் திறனை எடுத்துக் கூறப் போதுமானது. நேர் விழித்த கண்களும், போராட்டம் பற்றிய தீர்க்கமான சிந்தனையும் அவர் முகத்தில் நான் அவதானித்திருக்கிறேன்.

இன்னொரு முறை கோப்பாய்ப் பொறுப்பாளராக இருந்த காந்தி அண்ணாவுடன் வந்திருந்தார். அப்போது புலிகள் அண்மையில் நடத்தியிருந்த பண்ணைப் பால தாக்குதலும், ஆனையிறவுப் படைதளத்திலிருந்து புறப்பட்ட ரணுவத்தை புலிகள் வழி மறித்துத் தாக்கிய ஒளிப்பதிவும் காட்டப்பட்டது. இப்படி பலமுறை முரளி அண்ணாவை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை பலாலி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. உரும்பிராய் இந்துக்கல்லூரிப் பகுதியிலிருந்து புலிகளின் அணிகள் இந்தியப்படை மீது கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. அவ்வணிகளில் ஒன்றில் முரளியண்ணாவும் இருந்தது அப்போது எனக்குத் தெரியாது. கோண்டாவில் டிப்போவடியிலிருந்த எனது வீட்டைக் கடந்துபோகும் புலிகளின் பிக்கப் வாகனத்தில் அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

ஓரிரு நாட்களில் இந்தியப்படை உரும்பிராயைக் கைப்பற்றி கோண்டாவில் பகுதியில் புகுந்திருந்தது. எமது ஒழுங்கையிலிருந்த பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அயல்வீட்டார் பலர் கொல்லப்பட்டு நாங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி நடந்து போகும்படி இந்தியப் படையால் பணிக்கப்பட்டோம். அவ்வாறு கோண்டாவில்ச் சந்தியை அடையும்போது அங்கிருந்த புலிகளின் அணியொன்று எம்மைப் பாதுகாப்பான பொற்பதி வீதியூடாக அழைத்துச் சென்றது. அப்போதுதான் முரளியண்ணா பற்றி தெரியவந்தது. உரும்பிராயிலும், கோப்பாயிலும் நடந்த உக்கிர மோதல்களில் முரளியண்ணா, காந்தியண்ணா உடபட பல வேங்கைகள் பலியான செய்தி அறிந்துகொண்டோம். என்னால் நம்பமுடியவில்லை, சிரித்த முகமும், கணிவான பேச்சும் கொண்ட அந்த போராளியின் இழப்பை ஏற்றுக் கொள்வது மிகவும் கடிணமாக இருந்தது. இன்றும் 1987 ஆம் ஆண்டுப் போர்பற்றி நினைக்கும்போதெல்லாம் முரளியண்ணாவும் காந்தியண்ணாவும் மனதில் வந்துபோவது சாதாரணமாகை விட்டது.

இந்தியப் படையுடனான மோதல்களில் பலியான இவ்விரு வீர வேங்கைகளுட்பட அனைத்து மாவீரர்களுக்கும் இத்தருணத்தில் எனது வீர வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து போராளிகளையும் இவ் இருபதாம் ஆண்டில் நினைவு கூர்வோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.