Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடினமான எதுவுமில்லை

Featured Replies

கடினமான எதுவுமில்லை

இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ். குடாநாட்டில் தொடர்ந்து எவ்வாறு கொலைகள் இடம் பெறுகின்றன என்பதை விளங்கிக்கொள்வது கடினமானதாகவுள்ளது என கொழும்புப் பேராயர் டுலிப் டி சிக்கேரா" குறிப்பிடப்பட்டுள்ளமையானது பேராயர் தமது உணர்வுகளை வெளியிடத் தயக்கம் காட்டுவதாகவே கொள்ளத்தக்கது.

ஏனெனில் யாழ். குடாநாட்டில் இன்று இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள், கொள்ளைகள் யாவற்றிற்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆயுதபடையினருமே ஆகும். இதனைப் புரிந்துகொள்வது என்பது ஒரு கடினமான விடயமோ காரியமோ அல்ல.

யாழ். குடாநாடு 1996 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா ஆயுதப்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனை நாம் கூறவில்லை. சிறிலங்கா அரசாங்கமோ வலியுறுத்திக் கூறிவருகின்றது. இதனை எவ்வேளையிலும் அவர்கள் நிராகரிக்கவில்லை.

இதனைத் தவிர யாழ். குடாநாட்டில் பெரும்பகுதி இன்று உயர்பாதுகாப்பு வலயம் என ஆயுதப்படையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆயுதப் படையினரின் பூரணமான பிடிக்குள் உள்ளனர். மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் கூட ஆயுதப்படையினரின் கண்முன்னாலேயே இடம்பெறுகின்றன.

இத்தகையதொரு நிலையில் இப்பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆயுதப்படைத்தரப்பினரே முழுப் பொறுப்பாகும். இதனை ஆயுதப்படையினரோ அன்றி அரசாங்கமோ மறுத்து விடமுடியாது. அண்மைக்காலத்தில் அவ்வாறு மறுப்பு எதுவும் தெரிவித்ததாகவும் இல்லை.

இதேவேளை இவ்வாறு நடைபெறும் படுகொலைகள், கடத்தல்கள், பணப்பறிப்புக்கள், கொள்ளைகள் என்பவற்றிற்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரே குறிப்பாக ஈ.பி.டி.பியினரே காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாகவுள்ளது.

இதில் பெரும்பாலும் உண்மையும் உண்டு. ஆனால் ஒட்டுக்குழுக்களின் இந்நடவடிக்கைக்கும் சிறிலங்கா ஆயுதப்படையினரும், அரசாங்கமுமே பொறுப்பேற்றல்வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் சிறிலங்கா ஆயுதப்படையினரின் பாதுகாப்புடனேயே இவ் ஒட்டுக் குழுக்களால் யாழ். இல் இயங்க முடிகிறது.

அதாவது சிறிலங்கா ஆட்சியாளர்களே ஒட்டுக்குழுக்களை வளர்த்தெடுப்பதிலும் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். சிறிலங்காவின் ஆயுதப்படையினரின் பாதுகாப்பு இன்றி இவ் ஒட்டுக் குழுக்களினால் யாழ். குடாநாட்டில் மட்டுமல்ல தமிழர் தாயகத்தின் எப்பகுதியிலும் செயற்படுதல்; என்பது சாத்தியப்பாடான தொன்றல்ல.

அதாவது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வவுனியாவிலும் ஏன் கிழக்கிலும் கூட எந்தவொரு ஒட்டுக்குழுவும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையின்றியோ ஆயுதப்படையினரின் பாதுகாப்பின்றியோ இத்தேசத்துரோகக்குழுக்கள் செயற்பட முடியாது அவ்வாறு அவர்கள் செயற்படுவதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகவும் இல்லை.

ஆகையினால் யாழில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றை விளங்கிக்கொள்வதென்பது கடினமானதோ சிரமமானதோ காரியம் இல்லை. ஒருபுறத்தில் சிறிலங்கா ஆயுதப்படையினரால் இவை மேற்கொள்ளப்படுகின்றன. இன்னொரு புறத்தில் அரசாங்கத்தினது ஆயுதப்படையினரின் பாதுகாப்புப் பெற்ற ஒட்டுக்குழுக்களினராலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றிற்கும் மேலாக இவை திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு ஒட்டுக்குழுக்கள் கோடாரிக் காம்புகள் போன்று தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

ஆகையினால் கொழும்புப் பேராயர் மட்டுமல்ல எவருமே யாழ். இல் இடம்பெறும் படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்பதை வெளிப்படுத்த தயங்கத் தேவையில்லை. அவ்வாறு இல்லாது இவை குறித்துச் சந்தேகம் எழுமாயின் அவர்களின் அறிவாற்றல் குறித்தும் நடுநிலைகுறித்தும் கேள்வி எழுப்பப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

http://www.tamilnaatham.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.