Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடா நாட்டில் பூனைக்கு மணிகட்டுவது யார்? யாழ் மாணவர் ஒன்றியம்

Featured Replies

யாழ் குடாநாடடில் இதுவரை காலமும் கடத்தப்பட்வர்கள் எங்கே? தினமும் இடம்பெற்று வரும் கொலைகளுக்கெதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் என்னவென யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் கேள்வியெழுப்பயுள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் அராஜகங்கள் முடிவுக்கு வராவிட்டால் புதிய ஆண்டுத் தொடக்கத்திலிருந்து போரட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

'யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் படையினரும் அவர்களுடன் சோந்தியங்கும் ஆயுதக்குழுக்களுமே காரணம் என்பதை அனைவரும் நன்கறிவர்.

இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானல் குடாநாட்டில் உள்ள அதிகாரிகள், மக்கள் குழுக்கள் என்று சந்திப்புகளை மேற் கொள்பவர்கள் தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மக்களுக்காக வெளிப்படையாக நீதி கேட்க முன்வரவேண்டும். இதை விடுத்து அர்த்தமற்ற சந்திப்புகளை நடத்தி அதிரடி அறிவிப்புகளை விடுப்பது பாதிக்கபட்ட மக்களுக்கு எவ்விதமான ஆறுதலையும் தராது.

கடந்த 23ம் திகதி யாழ். மாவட்ட இராணுவத்தளபதியுடன் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இராணுவத்தளபதி உறுதி வழங்கியதாக அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், இதனைக் கொண்டு குடாநாட்டில் அராஜகங்களுக்கு முடிவில்லை என்பதை அனுமானிக்கக் கூடியதாக இருக்கிறதேயன்றி குறைவடையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை.

படையினரால் ஒட்டு மொத்த அராஜகங்களும் இடம் பெறுகின்றது, என்பதனை அறிந்தவர்கள் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற பயத்தில் சந்திப்புக்கு சென்றவர்களிடம் இராணுவத்தளபதி வாக்குறுதிகளை அள்ளிவிட்டுள்ளார்.

இது 2006 ஆம் ஆண்டுக்கு பின் அடிக்கடி நிகழும் நிகழ்வாகி விட்டது.

ஆயுதக் குழுக்களும் படைப்புலனாய்வாளர்களும் மேற்கொள்ளும் அராஜகங்கள் பற்றி தகவல் தரும்படி தொலைபேசி இலக்கங்களை வழங்குவது எவ்வளவு ஏமாற்றுத்தனம்? படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்களை பிடிப்பதற்காக விழிப்புக் குழுக்களை அமைப்பது எவ்வளவு கேலிக்கூத்தான விடயம்?

இவ்வளவு காலமும் கடத்தப்பட்ட பொதுமக்கள் எங்கே? கொலைகளுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் தான் என்ன? இது தொடர்பாக சந்திரசிறியால் கருத்துக் கூறமுடியுமா? சந்திரசிறி படையினர் புரிகின்ற அராஜகங்களுக்கு துணைபுரியும் அரசியல் இலாபங்ளையே தேட முயல்கின்றார்.

யாழ்.குடாநாட்டு மக்களின் மிதமிஞ்சிய மனிதப் பேரவலம் முடிவுற வேண்டுமானல் அரசு மனம் மாறவேண்டும். அதனால், படையினரின் செயற்பாடுகளில் மாற்றம் வரவேண்டும். இந்த மாற்றத்தினை கொண்டு வர குடாநாட்டில் பொறுப்பிலிருக்கும் அனைவரும் அச்சம் தவிர்த்து வாய்திறக்க வேண்டும். பகிரங்கமாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். உலகினை ஏமாற்ற முனையும் படையினரின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது தவிர்க்கப்படும் பட்சத்தில் மக்களினுடைய போரட்டமும் மக்களுக்கான நிம்மதியினைத் தேடித்தரும். மக்களை அணிதிரட்டும் பலம் மாணவர்களாகிய எம்மிடம் உண்டு. மக்களுக்கு இழைக்கப்படும் அராஜகங்கள் முடிவுக்கு வராவிடின் அடுத்தாண்டு தொடக்கத்தில் அரசுக்கும் படையினருக்கும்; எதிராக போரட்டங்களை நடத்தவுள்ளோம்.

இந்தப் போராட்டததிற்கு மதத்தலைவர்கள், சமூகப் பெரியார்கள், கல்விமான்கள், பொதுமக்கள், அனைவரிடமும் ஒத்துழைப்பினை எதிர்பார்த்து நிற்பதாகவும்" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :தினக்குரல்

தமது பாதுகாப்பினைத் தாமே உறுதிப்படுத்தும் நிலையில் மக்களுள்ளார்கள். அரசையும், இராணுவத்தையும் எந்தவகையிலும் நம்பத் தயாராகவில்லை.

"குற்றவாளி நாட்டிடம் நீதி கேட்கும் அவலம்" என்ற வேலவனின் கட்டுரையும் இதைத்தான் சொல்கின்றது. http://www.tamilnaatham.com/articles/2007/...van20071223.htm உயிருடன் பிடிக்கப்படுபவர்கள் கதி என்ன? முறையிடுவதற்குக்கூட இடமில்லை. எந்த முறைப்பாடும் பொலிஸில் பதிவாகவில்லை, என்கிறார் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா. இவ்வாறான போக்கு தொடரக்கூடாது என்பதற்காகவே யாழ் மாணவர் ஒன்றியம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. களத்திலும் புலத்திலும் இதற்கான ஆதரவைக் கொடுக்கவேண்டியது தமிழர் கடமை. இந்த ஆதரவுத் தன்மையினால் குடாநாட்டு மக்கள் உயிராபத்தினை எதிர் கொள்ளலாம். அதற்கேற்ப பாதிப்புகளைக போராட்டத்தில் பங்குபற்றுவோர் அநுபவிக்கா வண்ணம் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.