Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொங்கொங் ஹொங்கொங் ஹாங்காங்

Featured Replies

கொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு, இங்கே சில தமிழக உறவுகளுடனும் உறவுகள் உள்ளன. 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ கொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக "சிம் சா சுயி" (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள "சுங் கிங் மென்சன்" எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் கொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த "சுங் கிங் மென்சன்" கட்டிடமும் அதன் சுற்றுப் புரமும் தான்.

சிறிலங்கா தமிழர்கள் பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப்பது "யுங் லோங்" (Yuen Long)என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் ஆகும். இது சிம் சா சுயி என்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது.

இருப்பினும் எல்லொருக்கும் பரிச்சையமான இடமும், அதிகமாக நடமாடும் இடமும் இந்த "சிம் சா சுயி" யில் இருக்கும் "சுங் கிங் மென்சன்" கட்டிடம் தான்.

சரி விடயத்திற்கு வருவோம்.

இங்கே சில தமிழக உறவுகளுடன் கலந்துரையாடும் போது தமிழீழத் தமிழர்களாகிய நாங்கள் "கொங்கொங்" என்று உச்சரிப்பது தொடர்பாக ஒரு சிறு விவாதம் எழுந்தது.அதற்கான விடை தரும் பொருட்டே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

நாங்கள் கொங்கொங் என்று உச்சரித்தாலும் அது ஆங்கிலத்தில் Hong Kong என்று தான் இருக்கின்றது. இதை இந்த நாட்டவரும், இந்த நாட்டில் வசிக்கும் பிரித்தானியரும் ஹொங்கொங் என்று தான் உச்சரிக்கின்றனர்.

இந்தியா, பாக்கிசுத்தான், நேபாள் நாட்டவர்கள் ஹாங்காங் என்று உச்சரிக்கின்றனர்.

ஆனால், தமிழீழத் தமிழர்களோ, தமிழ் உச்சரிப்புக்களிற்கு உற்படாத சொற்களை, அதாவது (வட இந்திய) ஜ, ஸ, ஹ, ஷ, போன்ற கிரந்த எழுத்துக்களின் ஒலிக்குறிகளை பயன்படுத்துவது இல்லை. குறிப்பாக எமது நடைமுறை வாழ்க்கையில் கூட பிற மொழிகளின் கலப்பை விரும்புவதில்லை.

எழுத்து, ஆக்கங்கங்கள் போன்றவற்றிலும் தமிழ் ஒலிக்குறிகளுக்கு உட்படாத சொற்களை, வாக்கிய அமைப்புக்களை முடிந்தவரையில் தவிர்த்தே வருகின்றனர்.

இதற்கு காரணம் எம்மவர்களிடம் காணப்படும் அதிக அளவான தமிழ் பற்றே ஆகும்.

அந்நிய ஆதிக்க காலங்களின் போது எல்லாப் பிரதேசங்களையும் போன்று சில அந்நிய மொழிகளின் திணிபுகள் தமிழீழத்திலும் தமிழுக்கும் ஏற்பட்டது. ஆயினும் அது மற்றைய தமிழர் வாழ் பிரதேசங்களைப் போன்று, பிற மொழிகளின் ஆதிக்கம் தமிழீழத்தில் தமிழை சீர்குழைக்கும் அளவிற்கு எமது மூதாளர்கள் இடங்கொடாது காத்தனர் என்பதே பொருத்தமான கூற்றாகும். மாறாக அக்காலம் தொட்டு இன்றுவரைப் பார்த்தால் தமிழ் பற்று இப்பிரதேசங்களில் வழுவுற்றிருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்றும் தமிழீழத்தில் படிப்பறிவு குறைந்தவர்கள் மத்தியில் கூட ஜ, ஸ, ஷ, ஹ, போன்ற ஒலிக்குறிகளை உச்சரிப்பவர்களை காண்பது அறிது.

என் இனிய தமிழ் உறவுகளே! எம் தமிழ் எந்த ஒரு பிற மொழி தாக்கமில்லா தனித்தன்மை வாய்ந்த தொன்மையான ஓர் மொழியாகும். நமது மொழி ஒரு செம்மொழி. நாம் ஏன் பிற மொழிகளின் ஒலிக்குறிகளைப் பயன்படுத்த வேண்டும்? எனவே தமிழர்களாகிய நாம் தமிழ் பேசும் போதாவது அந்நிய மொழிகளின் கலப்பையும், வட இந்திய (கிரந்த) ஒலிக்குறிகளான ஹொ, ஹ, போன்றவற்றை பயன்படுத்துவதையும் தவிர்க்க முயற்சிப்போம்.

ஹாங்காங் இல்லை கொங்கொங். எல்லோரும் கொங்கொங் என்றே கூறுவோம்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நானும் தற்பொழுது அவுஸ்திரெலியாவை அவுச்திரெலியா என்று தான் யாழில் எழுதுவது வழக்கம்.

  • தொடங்கியவர்

அவுசுதிரேலியா என்று குறிப்பிடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க உலகத்தில இருக்கிற தேசங்களுடைய பெயராக வரும் பெயர்ச்சொற்களுக்கெல்லாம் அதே சத்தத்தில் வரவேண்டுமென்று அதுக்குள்ள தமிழ்ச் சொற்களைப் புகுத்தி எதற்காக அத்தேசங்களைப் புண்ணாக்க வேண்டும். வேண்டாங்க பாவம் விட்டுடுங்க.

ஐரோப்பாவில பாருங்க ஒவ்வொரு நாட்டுக்கும் சுமார் மூன்று அல்லது நான்கு பெயர்கள் உண்டு. இத்தனைக்கும் இந்த நாடுகளெல்லாம் அருகருகே இருக்கின்றன. ஒரு சாக்குப் பையில போட்டு பொட்டலமாய்க் கட்டக்கூடியமாதிரி.

இங்கிலன்ட், இங்கிலாந்து, ஆங்கிலத்தேர் யுனைட்டட் கிங்டம், றுவாயோம்யுனி என்றபடி....

ஹொலன்ட், ஒல்லாந்து, பேய்பா, என்றபடி.....

ஜெர்மன், ஜெர்மனி, அல்மான்ட் என்றபடி... பக்கத்திலிருக்கிற ஒவ்வொரு நாட்டவரும் தத்தமது வாயில் நுழையிறமாதிரி வசதியாக பெயரை வைத்து அழைக்கிறார்கள்.

அதிகம் ஏன். இந்த அந்நியன்கள் எமது நாட்டுக்குள் வந்தார்கள் என்ன செய்தார்கள்! தமது வசதிக்கேற்றபடி திரிகோணமலையை றின்கோ என்றும் மட்டக்களப்பை பற்றிக்கலோவென்றும் யாழ்ப்பாணத்தை ஜாவ்னா என்றும் பருத்தித்துறையை பொயின்ற்பெட்றோவென்றும் மாற்றவில்லையா? நாங்களும் அவர்கள் வைத்த பெயரைத்தானே ஸ்டைலாக சொல்லி வாழ்ந்து வந்தோம்.

இந்தத் தியறியின் அடிப்படையில் ஏன் நாம் ஹொங்கொங்கை அழகாக கொங்கைபுரமென்றும், அவுஸை கங்காருப்பட்டியென்றும் அழைக்கக்கூடாது? இப்படியே ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அழகான பெயர்களை வைத்து அந்தந்த நாட்டு தலைவர்கயிடம் அப்பெயர்களை அழகிய ஓலைச்சுவடியில் பொறித்து மஞ்சள் பூசிக் குத்துவிளக்கேற்றி ஒரு சம்பெயினும் உடைத்துக் கையளிக்கக் கூடாது?

பாவங்க தத்தளிக்கும் தமிழைக் காப்பாற்றுகிறோம் என நினைத்து ஆர்வத்தில தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுடக் கூடாதுங்க. ப்ளீஸ். :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவங்க தத்தளிக்கும் தமிழைக் காப்பாற்றுகிறோம் என நினைத்து ஆர்வத்தில தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுடக் கூடாதுங்க. ப்ளீஸ். :unsure::o

இதான் எனது கருத்தும்.

  • தொடங்கியவர்

//புகுத்தி எதற்காக அத்தேசங்களைப் புண்ணாக்க வேண்டும். வேண்டாங்க பாவம் விட்டுடுங்க.//

நீங்கள் இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை அல்லது விளங்கிக்கொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன். :unsure:

"புகுத்துதல்" என்பது புதிதாக அல்லது பலவந்தமாக புகுத்துதல் ஆகும்.

நான் எதையும் புதிதாக புகுத்தவில்லை. மாறாக எமது தமிழீழத் தமிழர்களின் (குறிப்பாக யாழ்ப்பாணம்) இயல்பான நடைமுறை தமிழ் உச்சரிப்பின் மீது, தமிழக உறவுகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான உறையாடலின் எழுத்து வடிவமே இந்த ஆக்கம்.

அதையும் நான் குறிப்பிட்டே இந்த ஆக்கம் எழுதப்பட்டிருக்கின்றது. :wub:

//இங்கே சில தமிழக உறவுகளுடன் கலந்துரையாடும் போது தமிழீழத் தமிழர்களாகிய நாங்கள் "கொங்கொங்" என்று உச்சரிப்பது தொடர்பாக ஒரு சிறு விவாதம் எழுந்தது.அதற்கான விடை தரும் பொருட்டே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.//

இந்தக் கட்டுரை தமிழீழத் தமிழர்களின் இயல்பான தமிழ் உச்சரிப்பையே சுட்டிக்காட்டுகிறது. அதையும் நான் குறிப்பிட்டு உள்ளேன். மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தமிழீழத்தில் தமிழர்களின் தமிழ் உச்சரிப்பில் பிறமொழி தாக்கம் குறைவாக இருப்பதை இன்றும் அவதானிக்கலாம். :lol::)

//தமிழீழத் தமிழர்களோ, தமிழ் உச்சரிப்புக்களிற்கு உற்படாத சொற்களை, அதாவது (வட இந்திய) ஜ, ஸ, ஹ, ஷ, போன்ற கிரந்த எழுத்துக்களின் ஒலிக்குறிகளை பயன்படுத்துவது இல்லை. குறிப்பாக எமது நடைமுறை வாழ்க்கையில் கூட பிற மொழிகளின் கலப்பை விரும்புவதில்லை.

எழுத்து, ஆக்கங்கங்கள் போன்றவற்றிலும் தமிழ் ஒலிக்குறிகளுக்கு உட்படாத சொற்களை, வாக்கிய அமைப்புக்களை முடிந்தவரையில் தவிர்த்தே வருகின்றனர்.//

//இன்றும் தமிழீழத்தில் படிப்பறிவு குறைந்தவர்கள் மத்தியில் கூட ஜ, ஸ, ஷ, ஹ, போன்ற ஒலிக்குறிகளை உச்சரிப்பவர்களை காண்பது அறிது.//

குறிப்பு: இங்கே எந்த புகுத்தலையும் செய்யவில்லை. எமது இயல்பான தமிழ் உச்சரிப்பினையும், சிறிப்பினையுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை புரிக.

//இந்தத் தியறியின் அடிப்படையில் ஏன் நாம் ஹொங்கொங்கை அழகாக கொங்கைபுரமென்றும், அவுஸை கங்காருப்பட்டியென்றும் அழைக்கக்கூடாது?//

இவ்வாறு கூறினால் அதற்குப் பெயர் "திரிபுபடுத்தல்" அவ்வாறு திரிபுபடுத்தும் மனநிலை பாதிப்புக்களோ அவசியமோ எமக்கு இல்லை என்பதை அறிக.

//பாவங்க தத்தளிக்கும் தமிழைக் காப்பாற்றுகிறோம் என நினைத்து ஆர்வத்தில தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுடக் கூடாதுங்க. ப்ளீஸ்.//

ஏங்க

வேண்டாங்க

விட்டுடுங்க

ஐரோப்பாவில பாருங்க

நுழையிறமாதிரி

பாவங்க

கொன்னுடக் கூடாதுங்க.

ஏன், வேண்டாம், விட்டுவிடுங்கள், ஐரோப்பாவில் பாருங்கள், நுழைகிற மாதிரி, பாவம், கொன்றுவிடக் கூடாது. போன்ற வார்த்தைகளை நீங்கள் எழுதியிருக்கும் முறையிலேயே உங்களிடம் தமிழ் தத்தளிக்கின்றது என்பது புரிகின்றது. :o:blink::huh:

உங்கள் அதே கண்ணோட்டத்தை பொது பார்வைக்கு வைக்காதீர்கள்.

உலகில் தோன்றிய பழமை வாய்ந்த மொழிகளில் தற்போதும் உயிருடன் இருக்கும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். காலங்காலமாக தமிழ் மொழி ஒரு சாரரால் வளர்க்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றது.

தமிழ் தத்தளிக்கும் நிலை தமிழீழத்தில் தமிழுக்கு இல்லையென்பதையே எனது கட்டுரையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.30 ஆண்டுக்கால கோர யுத்தத்தில் கூட தமிழீழத்தில் தமிழ் மொழி மேலும் வளர்ச்சியும் சிறப்புமே அடைந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். :D:)

ஏன்! இந்த யாழ் கருத்துக்களமும் தமிழை வளர்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

மெல்லத் தமிழினி சாகுமோ...!

மேதகு வே. பிரபாகரன் பிறந்த இத்தரணியில்...!

  • கருத்துக்கள உறவுகள்

நன்பர் அக்கராயன்! நான் சொல்வது பொதுவாக இடங்களின் பெயர்கள், மற்றும் மனிதர்களின் போன்றவை மட்டுமே. காரணம் இந்தப் புலம் பெயர்ந்த இடங்களில் அவர்கள் எங்களின் பெயர்களை உச்சரிக்கும் விதமே நகைச்சுவையாக? இருக்கும். அதனால்தான்... நாங்களும் மாற்றுகிறோம் என்று நகைச்சுவையாகிவிடக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.