Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வேயின் பாத்திரம் மீள வடிவமைக்கப்படும்

Featured Replies

அமைச்சர் போகொல்லாகம

-ரொஷான் நாகலிங்கம்-

சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்திருக்கும் என்றும் ஆனால், அதன் பாத்திரம் (ROLE) மீள வடிவமைக்கப்படுமென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.

யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்திருப்பதானது நோர்வேயின் அனுசரணைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தப்படாது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் நோர்வேயின் பங்களிப்பு ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அது வேறுபட்ட பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. அந்தப் பங்களிப்பை மீள வடிவமைக்க வேண்டியுள்ளது என்றும் போகொல்லாகம கூறியுள்ளார். அதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்பாகவே நோர்வே சமாதான நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அமைச்சர் போகொல்லாகம இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;

"சர்வதேச சமூகத்துக்கு யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது குறித்த காரணங்களை நாம் விளக்கியதையடுத்து அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர் . போர்நிறுத்த விலகல் குறித்து எரிக்சொல்ஹெய்ம் தனது அதிருப்தியை நேற்று முன்தினம் காலை தெரிவித்திருந்தார்.

அன்று மாலையே நான் இந்தியா, நோர்வே மற்றும் இணைத்தலைமை நாடுகளுக்கு விளக்கியதையடுத்து அவர்கள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது விடுதலைப் புலிகளாலேயே என்பதை புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதே தவிர நாட்டின் சமாதான நடவடிக்கைக்கு நோர்வே உட்பட சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும்.

ஜப்பானின் சமாதானத் தூதுவர் இங்கு விஜயம் செய்து சமாதான நடவடிக்கைகளைத் தொடர்வது இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

கிழக்கின் அபிவிருத்திக்கு அரசாங்கமே நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மக்களின் தேவைகளை உணர்ந்தே அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

யுத்தநிறுத்தம் இரத்துச் செய்யப்படினும் வர்த்தக சமூகம் அரசுக்கு ஆதரவு வழங்கும். ஏனெனில் அரசாங்கம் முதலீட்டுக்கான பாதுகாப்பை வழங்குவதே காரணமாகும்.

2007 ஏப்ரலின் பின்னர் 1000 க்கும் மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்தநிறுத்தத்தை மீறியுள்ளனர்.

பயங்கரவாதத்தை அழிப்பதற்கான முழுத்தகுதியும் அரசுக்கு உள்ளது. 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அனைத்துத் தரப்பினரின் சம்மதத்துடன் சமாதானத்தை எட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்பிரகாரம் அவரால் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் அரசியல் தீர்வுக்கான இறுதி அறிக்கையை மிக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரிவிக்காது புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையை மேற்கொண்டார். இதன் மூலப்பிரதி எங்குமில்ஙலை. பொதுவாக மூலப்பிரதிகள் நோர்வே, புலிகள் மற்றும் அரசிடம் இருக்கும். ஆனால், எந்த மூலப்பிரதிகளும் எங்கும் இல்லாமல் உள்ளது.

தினக்குரல்

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட போர்களைவிட மிக உக்கிரமான போர் ஒன்றை தொடுப்பதற்கு இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கை அநுகூலமாக இருக்கும் என்றால், சாதாரண சிங்கள மக்களின் பார்வைக்கு இந்த வெளிநடப்பில் அற்புதங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு நியாயம் இருக்கலாம்.

ஆனால் கிழக்கை ஆக்கிரமித்தது போலவே வன்னியையும் ஆக்கிரமிப்பதற்க்கு எந்த தடையும் செய்யாதே இந்த யு.நி உடன்படிக்கை. எனவே இது வெறும் அரசியல்சூழ்நிலை சிக்கலில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.