Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பந்தங்களும் முடிவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

ஆக்கம் - சுகன்

ஒப்பந்தங்களும் முடிவுகளும்

நடைமுறையில் இல்லாத போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசுவிலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைமும் ஐ.நா அதிபர் பாங்கிமூன் ஐயாவும் கவலைப்படுகின்றனர். மேலும் சில நாடுகள் வருத்தத்தை தெரிவித்துள்ளன. இந்த நிலைமையானது தமிழர்கள் அதிகளவு கொல்லப்படும் போது தெரிவிக்கும் கவலைகளுக்கு ஒப்பானது. கவலை தெரிவிப்பது, கண்டனம் செய்வது, நடவடிக்கை எடுப்பது என்ற ஒழுங்கில் இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான புரிந்துணர்வு கவலைகளை பரிமாறுவதிலேயே தான் இன்னமும் உள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகாமலேயே யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியவண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தல், கடத்தல் காணமல் போகச்செய்தல், பாதை மூடல் முதல் பத்திரிகை சுதந்திரம் பறிப்பு, ஊடகவியலாளர்கள் கொலை என ஒரு போர்காலத்தில் இருந்ததை விட அதிகமாகவே செயற்பட்டது.

சிங்களத்தின் பேரினவாத நகர்வுக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் இடைஞ்சல் செய்ததாக கருத இடம் இல்லை.

அரசின் அனைத்து செயற்பாடுகளையும் கண்டும் கண்காணிப்பாளர்கள் கண்களை மூடிக்கொண்டிருந்தனர் என்பது வெளிப்படையானது.

ரணில் அரசு யுத்தநிறுத்தம் மூலமே புலிகளை பிளவுபடுத்தி சாதனை புரிந்ததாக கருணாவிவகாரம் குறித்து பெருமிதம் கொள்கின்றது. சர்வதேச வலையில் சிக்க வைத்ததாக தம்பட்டம் அடிக்கின்றது.

யுத்த நிறுத்த ஒப்பந்த விலகல் குறித்து மேற்கு நாடுகள் இற்றை வரை வருத்தம் தெரிவிப்பதுடன் நிற்கின்றது. இதை விசனமாக கண்டனமாக எதிர்கால நகர்வுகள் மாற்றலாம். இலங்கை அரசின் யுத்த நிறுத்த ஒப்பந்த விலகல் அறிவிப்பானது தற்போது ஒரு பெரிய விடயம் இல்லை. அது வெற்றியின் படிகளில் நின்று விலகியுள்ளது. ஆனால் வெற்றியின் படிகள் எவ்வளவு உறுதியானது என்பதில் அதிகளவு சந்தேகங்கள் உள்ளது ஏனெனில் புலிகள் இதுவரை முறியடிப்பு தாக்குதல்களே செய்து வருகின்றனர். அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலில் எந்தவொரு பாரிய நடவடிக்கையையும் யுத்த நிறுத்தத்தின் பின்னரான காலத்தில் செய்யவில்லை.

புலிகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது குறித்து எதிர்வு கூற தரவுகள் இல்லை. ஆனால் அரசின் நடவடிக்கை மற்றும் புலிகளின் நடவடிக்கைகளின் விளைவுகள் என்பது தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை விலகலை குற்றமாக மாற்றும் தன்மையை கொடுக்கும் என்பது வெளிப்படையானது.

இது வரை காலமும் தமிழர்கள் கொல்லப்படவும், காணமல் போகடிக்கப்படவும், விமானத்தாக்குதல்கள் நடத்தப்படவும் எல்லாவற்றையும் எழுதி பதிவு செய்யும் வேலையையே கண்காணிப்பு குழு மேற்கொண்டு வந்தது. நடைமுறையில் இல்லாமல் எழுத்துவடிவில் மட்டும் இருந்த ஒப்பந்தமும் இந்த வகையில் வரலாற்றில் முக்கியமானதே. அதிலிருந்து விலகியதும் முக்கியமான நிகழ்வே.

ஒப்பந்த விலகல் ஆனது தற்போதைய சூழலில் ஏன் என்ற கேள்விக்கு பல பதில்கள் சந்தேக அடிப்படையில் கிடைக்கின்றது. பேரினவாதிகளான ஜே.வி.பி கெல உறுமயவை திருப்திப்படுத்தவும் மகிந்தரின் ஏற்கனவே சொன்னது போல அரசமைத்தால் ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் என்று சொன்னதுக்கேற்ப விலகியதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இவ்வாறு கருதுவது வலுவற்ற ஒன்றாகவே உள்ளது. ஒப்பந்தம் இருக்கும் போதே இனவாதிகள் செய்ய வேண்டியதை தாராளமாக செய்யக்கூடியவாறு இருந்தது. அவ்வாறு இருக்கையில் ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டிய தேவையை விட அதை வைத்துக்கொண்டே அவர்கள் அனைத்தையும் செய்யமுடியும்.

கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கை முதல் லட்சக்கணக்கான மக்கள் அகதிகள் ஆன வரை யாழ் பாதை மூடல், விமானத்தாக்குதல் என அனைத்தையும் ஒப்பந்தத்தில் இருந்து விலகாத வண்ணம் செய்து கொண்டிருக்கும் அரசுக்கு ஒப்பந்தம் அதன் போக்குக்கு தடையான ஒன்றல்ல. மாறாக மேற்குலகின் மறைமுக ஆசிர்வாதமும் அதனூடாக கிடைக்கவே செய்தது.

சிங்களத்தின் விருப்பத்திற்கு மாறாக மேற்கு நாடுகள் என்றும் நடந்ததில்லை. சிங்களத்தின் விருப்பப்படியே புலிகளைத் தடைசெய்து சமநிலையை குழப்பி பேச்சுவார்த்தையை சீரழித்தது. இந்த இடத்தில் அதிக விளக்கம் தேவையில்லை பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை கொன்றதையும் பார்த்துக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒப்பந்ததில் இருந்து விலகியமைக்கு வருத்தம் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்து இந்த விலகல் அறிவிப்பானது அமெரிக்காவின் ஆயுத விநியோக தடை என்ற செய்திக்கு பின்னரானது. அமெரிக்காவுக்கு பதிலாக ரசியா ஆயுதங்களை வழங்க தயார் என்று சொல்லியிருந்தது. இந்தியா விமான கூட்டுப்பயிற்சி மற்றும் இலங்கை சார்ந்த ஆர்வத்தின் பலதரப்பட்ட வெளிப்பாடுகள் என்பனவையும் இந்த விலகல் அறிவிப்புடன் சேர்த்து பார்க்கவேண்டியுள்ளது.

நாளாந்தம் வன்னி பெருநிலப்பரப்பின் மீது இராணுவம் முன்னேற பிராயத்தனப்பட்டுக்கொண்டுள்

தமிழர் தரப்பின் கைகள் யுத்தநிறுத்தம் என்ற சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அதற்கான விடுதலை தானாகவே கிடைத்துவிட்டது. கடடுவதற்குத் துணை நின்றவர்கள் திகைத்து நிற்பதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது. இலங்கையரசின் மீதான கண்டனங்கள் அதிகரித்தது போன்றதொரு தோற்றப்பாடும் காணப்படுகிறது.

இரு வகைத் தந்திரங்களின் பயன்பாட்டில் இது இரண்டாவது தந்திரம். முதலாவது தந்திரம் என்னவெனில் ஒப்பந்தத்தினுள் கட்டி வைத்துக்கொண்டு அழிக்கப்பார்த்தார்கள். அரச படைகளுக்கே கூடுதலான அதிர்ச்சிகள் அங்கு ஏற்பட்டன.

இப்போது இரண்டாந் தந்திரம். முழுமையாக ஒப்பந்தத்திலிருந்து விலகி புலிகளை முழுமையாகப் போருக்கிழுத்து அழிக்கலாமென நினைக்கின்றார்கள். இதற்குரிய நியாயத் தீர்ப்பு களத்தில் வழங்கப்படும்

.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் சிவப்பு நிற எழுத்து சாதாரன விடயங்களுக்கு பாவிக்க கூடாது என்ற விதிமுறை இருப்பதாக அறிந்தேன்.

இறைவன் சிவப்பு நிற எழுத்து சாதாரன விடயங்களுக்கு பாவிக்க கூடாது என்ற விதிமுறை இருப்பதாக அறிந்தேன்.

அப்படியெரு விதிமுறையிருப்பதாக நான் அறியவில்லை. தொட்ர்ந்து இவ்வாறுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.