Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 36

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருபேப்பருக்கா புத்தனின் கன்னி ஆக்கம் :lol:

வழமை போல் நம்மன்ட தமிழ் ஸ்பைஸ் கடைக்கு போக அங்கே நம்மன்ட மூத்த பிரஜைகள் மூன்று பேர் கதைத்து கொண்டிருந்தவை அடியேனும் மூத்த பிரஜைகளிற்கு ஒரு கலோ சொல்லிபோட்டு அவர்களுடன் சேர்ந்து கோசிப்பில் கலந்து கொண்டேன் ஒரு மூத்த பிரஜை தம்பி நீர் டீவியில கிரிகேட் பார்த்தனீங்களோ எங்கன்ட இந்தியன் சிங் ஒன்றும் செய்யவில்லை அவன் வடிவா டீசன்டா விளையாடினவன் உவங்க வெள்ளையங்க சரியான அலாப்பிகள் அலாப்பி தானே இந்த மட்சை வெற்றி பெற்றவங்கள்.வெள்ளைகள் அப்பீல் பண்ணும் போது கத்துற கத்தில அம்பயர் பயந்து போய் அவுட் கொடுத்து போயிடுவார் அது போக அம்பயரிற்கு பணம்,பெண் என்று கொடுத்து இவங்க மடக்கி வைத்திருக்கிறாங்க அது தான் அம்பயர்மாரும் சப்போர்டாக இருக்கிறார்கள் அவுஸ்ரெலியகாரன் வெற்றி பெறுவதிற்கு இன்னொரு காரணமும் இருக்கு அவனின்ட போடி லாங்வேஜ் (கையை காட்டுறது,மூக்கை காட்டுறது,ஏசுறது,கெட்டவார்த்

தை பாவிக்கிறது).

உடனே மூத்தை பிரஜை நானும் பார்த்தனான் சரியான பிழை அப்படி செய்திருக்க கூடாது உப்படி செய்வதிற்கு காரணம் நாங்கள் இந்தியன்கள் (சொன்னவர் சிறிலங்க காரன் ஆனா இந்தியா என்று புலத்தில் கூறுகிறார்) அடிமையன்கள் என்று நினைப்பில் தான்.உதை இப்படியே விட்டா இவங்கள் தலைக்கு மேல ஏறி போயிடுவாங்கள்.நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் அவுஸ்ரெலிய கிரிகேட் சபைக்கு பேட்டிசன் எழுதி போட வேண்டும் அப்ப தான் திருந்துவாங்கள்.இந்தியா,பாகி

ஸ்தான்,சிறிலங்கா எல்லாம் ஒன்று சேர்ந்து இவங்களுடன் விளையாடமாட்டேன் என்று சொல்ல வேண்டும் அப்ப தான் இவங்களின்ட கொட்டம் அடங்கும்.

கர்பஜன் சிங்கின் சுழற்பந்துவீச்சிற்கு அவுஸ்ரெலியன்காரங்க நின்றுபிடிக்க ஏலாது அது தான் அவன் மேல் பொய் குற்றம் சாட்டி அவனை விளையாடமல் பண்ணிபோட்டாங்கள் உதை தானே முரளிக்கும் செய்தவங்கள் ஆனால் எங்களின்ட ரணதுங்கா சண்டை பிடித்து முரளியை காப்பாற்றினவர் என்ன தான் இருந்தாலும் ரணதுங்கா இஸ் கிரேட் என்றார் மூன்றாவது மூத்த பிரஜை.

இந்த மூத்த பிரஜைகள் இங்கு அவுஸ்ரெலியாவில் வேலை செய்யாமல் அவுஸ்ரெலியா ஓய்வூதியம் எடுத்து கொண்டு சிறிலங்காவில் கடமை ஆற்றியதிற்கான ஓய்வூதியத்தையும் பெற்று கொண்டு வருடத்தில் இருதடவைகள் உலக வலம் வந்து,அவுஸ்ரெலிய புகையிரதங்களிள்,பஸ்களிள் சலுகைகளிள் பயணித்து கொண்டு ஏன் தாத்தாமாரே நீங்க சுகமா வாழும் நாட்டின் வீரர்களை ஏன் திட்டி தீர்கின்றீர்கள் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது ஆனா கேட்கவில்லை ஏனெனில் முந்தி ஒருக்கா கேட்டு நீ என்ன வெள்ளைகாரனோ ஓசியோ என்று திட்டு வாங்கின அநுபவம் தான் இருந்தாலும் இன்னும் சில சந்தேகங்கள் இருக்குது தான்.

சுனாமி நடந்தவுடனே அதில் பாதிக்கபட்ட மக்களிற்காக நிதி சேகரித்து உதவி செய்தவர்கள் இனவாதம் என்று உங்களாள் கூறபடும் அவுஸ்ரெலிய அணி என்பதனை ஏன் மறந்து போனீங்க மூத்த பிரஜைகளே ஆனால் இந்திய உபகண்டத்தில் கொடி கட்டி பறப்பவர்கள் இன்னும் அந்த கிரிகேட் மட்சை நடத்துவதிற்கு தங்களின் அரசுகளிடம் இன்னும் வரிவிலக்கு கேட்டு கொண்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது.

அது சரி இந்த மூத்த பிரஜைகளின் பிள்ளைகள் அல்லது அவர்கள் ஊரில் கிரிகேட் விளையாடின காலத்தில் ஏதோ அலப்பாமல்,ஏமாற்றாமல் விளையாடின மாதிரி அல்லவா கதைக்கீனம் இங்கேயாவது அம்பயர் ஒழுங்கா வீடு போய் சேர கூடியதா இருக்கு.அங்கே ஊரில ஒரு காலத்தில அம்பயர் மாருக்கு கல் எரியிறது ஆட்களை வைத்து அடிக்கிறது மட்ச் முடிந்து வீட்ட போக அம்பயர் பயந்து கொண்டு நிற்கிறது இப்படி எத்தனை அட்டகாசங்கள்,அநியாயங்கள் எல்லாம் நாங்கள் செய்தனாங்கள் ஆனால் இப்ப ஏதோ "டவுன் டூ ஏர்த்" என்று நினைப்பு இந்த சிட்னி வாழ் டமிழர்களிற்கு.

உந்த கர்பஜன் சிங்கோ,ரணதுங்கவோ அல்லது அவர்கள் சாந்த நாடோ அரசோ உங்களின் தனிபட்ட வாழ்கையில் உங்களின் பொருளுளகை நிவர்த்தி செய்வதில் ஒரு துளி பங்கும் வகிக்க வில்லை என்பது தான் ஜதார்த்தம் என்பதனை எப்ப தான் புரிய போகிறீர்கள்.

அம்பயர் கிரிகேட் மட்சில் அவுட் கொடுக்கவிலலி என்று ஆத்திரபடும் கோபபடும் மேற்தட்டு மற்றும் நடுதர வர்க்கத்தினர் அதிகம்,ஊடகங்களில் விமர்சித்து கட்டுரை எழுதுபவர்கள் எண்ணிகை இந்க்டிய உபகண்டத்தில் அதிகம் ஆனால் இதையே உபகண்டத்தில் தனி மனித வாழ்கையை அவுட்டாக்கும் அரச அம்பயர்களை பற்றி விமர்சிக்கவோ அல்லது அந்த அரசுகளின் மீது கோபபடும்,ஆத்திரபடும் நடுதர வர்க்கத்தினரனின் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப ரொம்ப குறைவுங்கோ.

புத்து மாமா மூத்த பிரஜைகள் பாவம் சாகப்போற நேரத்தில கொஞ்சமாவது தங்கட உறவுகளோட கதைச்சு சுதந்திரமா சந்தோசமா இருந்திட்டு போகட்டுமே. ஏன் அதுகள நக்கல் அடிக்கிறீங்கள். எத்தனையோ மூத்த பிரஜைகள் கதைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் வெளிநாடுகளில ஏராளம் உளவியல் நெருக்கடிகளுக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறீனம். முகத்தில ஒரு சிரிப்பு சந்தோசம் இல்லை. தெரிஞ்ச ஆட்களோட கதைச்சு இப்படியாவது கடைசிக்காலத்தில சந்தோசமா இருக்கட்டும். அவைய அவபாட்டில விட்டுடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.