Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jan 12 9:40:00 2008

.மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம்

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இருக்கும்போதே கழற்ற வைத்த சம்பவம் தொடர்பாக உடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மகேஸ்வரனின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

மகேஸ்வரன் எம்.பியின் நெருங்கிய உறவினர்கள் இனறைய நிகழ்வுகளை அவதானிப்பதற்கு இங்கு மிகவும் கஷ்டப்பட்டே வந்துள்ளனர்.

அவர்கள் கடும் பாதுகாப்புக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டு ஒருவாறு பார்வையாளர் கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பாதுகாப்புப் பிரிவினர் கழற்றுமாறு உத்தரவிட்டனர்.

அவர் முடியாது என்று கூறியபோதும் இறுதியில் கழற்ற வைத்துவிட்டனர். இந்து சமயப்படி தாலி மிகப் புனிதமாக மதிக்கப்படுகின்றது.

கணவன் மரணித்தால் மாத்திரமே தாலியைக் கழற்ற முடியும். அப்படியான புனிதமான தாலியைக் கழற்ற வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். என்றார். (சி)

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இங்கையுமா :lol: எப்படியோ நான் கறுப்பிக்கு கொடுத்த பதவி மிகவும் பொருத்தமானதுதான் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் சகோதரன் மனைவியின் தாலி கழற்றப்பட்டதற்கு மன்னிப்பு கோரினார் டிலான்

[14 - January - 2008]

பாராளுமன்றத்துக்குள் உட்பிரவேசிக்கும் போது மகேஸ்வரன் எம்.பி.யின் சகோதரரின் மனைவியினது தாலி கழற்றப்பட்டமை தொடர்பாக நீதியமைச்சர் டிலான் பெரேரா வெள்ளிக்கிழமை சபையில் மன்னிப்பு கோரினார்.

"மகேஸ்வரன் எம்.பி.யின் சகோதரரின் மனைவியினது தாலி தெரிந்தோ தெரியாமலோ பாதுகாப்பு காரணங்களுகாக கழற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாலி என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசார வெளிப்பாடாகும். அதை கழற்றியமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அச்சம்பவத்திற்காக சபை சார்பாக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்" என்று டிலான் பெரேரா கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற, படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி.யின் அனுதாபப் பிரேரணையில் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"மகேஸ்வரன் சபையில் ஆவேசமாக செயற்பட்ட போது அதை சபாநாயகருக்கு கூட கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. மகேஸ்வரன் அதை போலியாக செய்ததில்லை. தன்னை நம்பியவர்களுக்காக உண்மையாக செயற்பட்டவர் அவர் அங்கம் வகிக்கும் கட்சியின் தீர்மானங்களின் போது கூட தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் செயற்பட்டார்.

மகேஸ்வரன் எப்போதுமே சந்தர்ப்பவாதியாக செயற்பட்டதில்லை யாரை விமர்சிப்பதென்றாலும் அதை நேரடியாகவே செய்தார். முகத்துக்கு ஒன்றை கூறி போனதன் பின்னர் இன்னொன்றை கூறியவரல்ல மகேஸ்வரன். அவர் தான் நம்பியதற்காக எப்போதுமே நிலையாக நின்றவர்.

சபைக்குள் மகேஸ்வரனுடன் நானே வாக்குவதப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எனினும், சபைக்குள் வாக்குவாதம் முடிந்து வெளியேறிய அடுத்த நிமிடம் அனைவருடன் நட்பாக பழகும் பண்பைக் கொண்டிருந்தவர் அவர்.

மகேஸ்வரன் அணுவளவும் சந்தர்ப்பவாதமாக செயற்படாமல் தனது மக்களுக்காக முன்னின்றவர்.

மகேஸ்வரனின் அனுதாப பிரேரணையில் பேசும் அதேநேரம், எமது சக உறுப்பினரான அமைச்சர் தஸநாயக்கவின் இறுதி கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும், எத்தனை பேர் கொல்லப்பட்டு இங்கு அனுதாப பிரேரணையில் பேசப் போகிறோமென்று தெரியவில்லை.

இவ்வாறான கொலைகளை கொண்டு அரசியல் இலாபம் பெறுவதை விடுத்து அவற்றை தடுத்து நிறுத்துவது பற்றி நாம் அணுவளவேனும் சிந்தித்ததில்லை.

இன்று மகேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பாக ஐ.தே.க. அரசின் மீது குற்றச்சாட்டுகிறது. பொலிஸார் புலிகள் தான் செய்ததாக கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஊடகவியலாளர் ஒருவர் மீதும் குற்றஞ் சாட்டப்படுவதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கியும் விரல் நீட்டுகின்றனர்.

இதில் சரியான விசாரணைகள் நடைபெற்று உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டியது அவசியம். யார் என்ன தான் கூறினாலும் மகேஸ்வரன் படுகொலையுடன் ஜனாதிபதிக்கு சம்பந்தம் இருக்கிறதா என்று அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் இல்லையென்றே கூறுவர். நானும் இதில் ஜனாதிபதிக்கு தொடர்பில்லை என்றே கூறுவேன். ஏனெனில், ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் அவ்வளவு தூரம் நட்புறவு இருந்தது.

நடுநிலையாக செயற்படும் அரசியல் தலைவர்கள் கொல்லப்படுவதன் மூலம் அதில் உண்மையான இலாபம் புலிகளுக்கே கிடைக்கிறது. ஏனெனில், நடுநிலையாக சிந்திக்கும் மிதவாத அரசியல்வாதிகள் இருப்பதை புலிகள் விரும்பியதில்லை.

மகேஸ்வரனை கொலை செய்தது விடுதலைப் புலிகள் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஷ்ரீகாந்தா எம்.பி. கூறினாலும் நீலன் திருச்செல்வம் போன்றவர்களை புலிகள் கொல்லவில்லையென அவரால் கூற முடியாது.

மகேஸ்வரன் ஒவ்வாத கருத்துகளை கொண்டிருந்தவராக இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அவர் பெரும்பாலும் முரண்பட்ட கருத்துகளை கொண்டிருந்ததில்லை. அதிகார பகிர்வினூடான அரசியல் தீர்வொன்றையே அவர் நிலைப்பாடாக கொண்டிருந்தார்.

இந்த நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் முயற்சித்துப் பார்க்க வேண்டும். அதற்காக செயற்பட வேண்டும்.

இதேநேரம், இந்த அனுதாப பிரேரணையை பார்வையிட வந்தபோது மகேஸ்வரனின் சகோதரனான பரமேஸ்வரனின் மனைவி தமிழ் பாரம்பரிய முறையாக அணிந்துவந்த தாலிக் கொடியை பாதுகாப்புக் காரணங்களுக்காக கழற்ற வேண்டி ஏற்பட்டதாக கூறப்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ அப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதுகுறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், அந்த சம்பவத்திற்காக மகேஸ்வரனின் சகோதரனின் மனைவியான சுதர்ஷனியிடம் இந்த சபை சார்பாக மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

இதேநேரம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிந்தோ தெரியாமலோ மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக ஊடகமொன்றை நோக்கி விரல் நீட்டிவிட்டார். இவ்வாறான விடயங்களில் ஊடகங்களை நோக்கியோ ஊடகவியலாளர்களை நோக்கியோ விரல் நீட்டக்கூடாது. இது மகேஸ்வரனுக்கு செய்யும் அவமதிப்பாக போய் விடும்.

நீதி அமைச்சர் என்ற வகையில் மகேஸ்வரனின் கொலை விசாரணையை மூடிமறைக்க இடமளிக்க மாட்டேன். அத்துடன், இந்த விசாரணைகளில் அரசாங்கம் எந்த தலையீடுகளையும் மேற்கொள்ளாமல் விசாரணைகள் சுயாதீனமாக நடைபெறுகின்றன என்றார்.

http://www.thinakkural.com/news/2008/1/14/...s_page44080.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.