Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு! 4 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கு கையிருப்பில்

[sunday January 13 2008 07:39:20 AM GMT] [யாழினி]

குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற் கென கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றப்படும் பொருள்களில் பெரும்பகுதி காணாமல் போய்விடுகின்றது. அதனால் யாழ். வர்த்தகர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர்.

* அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறுமின்றி அவை எடுத்துவரப்படுகின்றன. சுமார் நான்கு மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் உள்ளன.

யாழ்.வணிகர் கழகப் பிரதிநிதிகள் இந்தத் தகவல்களை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர். குடாநாட்டுக்குப் பொருள்களை ஏற்றிவரும் முகவர்களும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

குடாநாட்டுக்குப் பொருள்களைக் கொண்டுவருவதில் வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந் துரையாடுவதற்காக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய சந்திப்பில் வர்த்தகர்கள் மேலும் தெரிவித்ததாவது:

குடாநாட்டுக்குக் கப்பல் மூலம் எடுத்து வரப்படும் பொருள்களில் சுமார் 15 வீதத் திற்கும் கூடுதலான பொருள்கள் காணா மற் போகின்றன. இவை கொழும்புத் துறை முகத்திலேயே மாயமாக மறைந்து விடு கின்றன.

வர்த்தகர்கள் தமது பொருள்களை உரிய வாறு பொதி செய்து கப்பலில் ஏற்றுவதற் காக துறைமுகத்தில் ஒப்படைகின்றார்கள். பின்னர் அவை கப்பலில் ஏற்றப்படுகின் றன. யாழ்ப்பாணத்தில் பொருள்கள் இறக் கப்படும்போது ஏற்றிய பொருள்களில் 15 வீதத்துக்கும் கூடுதலான அதிகமானவை குறைந்து வந்து சேருகின்றன காணாமல் போய்விடுகின்றன. காங்கேசன்துறை துறை முகத் தில் பொருள்கள் இறக்கப்பட்டதும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் அவை வர்த்தகர்களிடம் விரைவில் ஒப் படைக்கப்படுகின்றன. இதற்கு யாழ்.அரச அதிபரும்,படைத்தரப்பினரும் போதிய உதவிகளை வழங்கிவருகின்றார்கள்.

ஏற்றப்படும் பொருள்கள் கொழும்புத் துறைமுகத்திலேயே மாயமாக மறைந்து விடுகின்றன. இதனைத்தடுப்பதற்கு எது வும் செய்யமுடியாத நிலையில் வர்தகர்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பெரு மளவான நட்டம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போகும் பொருள்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

எனவே இந்த விடயத்தில் அத்தியா வசிய சேவைகள் ஆணையாளர் கூடிய கவனம் எடுத்துக் குடாநாட்டு வர்த்தகர்கள் சுமுகமான முறையில் பொருள்களை ஏற்றி யிறக்குவதற்கான வசதிகளை செய்து தர வேண்டும்.

கப்பல் கட்டணம்

அத்துடன் பொருள்களுக்கான கப்பல் கட்டணமும் மிகவும் அதிகரித்த நிலை யிலேயே உள்ளது. ஒரு மெற்றிக் தொன் அல்லது ஒரு சி.பி.எம்(இ.ஆ.M) பொருள் களை கப்பலில் கொண்டு வருவதற்கு 75 டொலர் கட்டணமாக அறவிடப்படுகின் றது. இதனைக் குறைப்பதற்கும் வழிசெய் யப்படவேண்டும்.

4 மாதங்களுக்குத் தேவையான

பொருள்கள் கையிருப்பில் குடாநாட்டுக்கான பொருள்களை ஏற்றி இறக்கும் பணியில் போதியளவு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதனால் எந்த விதமான தடையுமின்றி அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து வரப்படுகின்றன. தற்போது குடாநாட்டில் எந்தவொரு அத்தியா வசியப்பொருள்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. குடாநாட்டு வர்த்தகர்களிடம் தற் போது சுமார் 4 மாதங்களுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருள்கள் கையி ருப்பில் உள்ளன. எனவே பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பொதுமக்கள் அஞ்ச வேண்டியதில்லை. அவ்வாறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வேளைகளில் அவற்றை உரியவகையில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை வணிகர் கழகம் மேற்கொள்ளும்.

சில பொருள்கள் கொழும்பு விலையிலும் குறைவான விலைக்கு யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணமாக "கப்டன்" மீன்ரின் ஒன்றின் கொழும்பு சில்லறை விலை 125 ரூபா. எனினும் அது யாழ்ப்பாணத்தில் 105 ரூபாவாக சில்லறைக்கு விற்கப்படுகின்றது.

"பென்ரோச்' பற்றறிகளுக்கு மட்டுமே யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனைத்தனியார் வர்த்தகர்களாகிய நாம் எடுத்து வருவதற்குத் தடை உள்ளது.எனவே வர்த்தகர்களாகிய நாம் பொருள் களைக் கொண்டுவருவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அனைவரும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

10 வீதம் புகழ் பசில் ராஜபக்சா, தனது உடமை வசூலிப்பை 15 வீதம் ஆக்கி விட்டாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.