Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் முட்டாள்த்தனமான வார்த்தைப் பிரயோகம்: ஐ.நா. கண்காணிப்பகம் கவலை

Featured Replies

இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை முட்டாள்த்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரச பிரதிநிதி விமர்சித்திருப்பது கவலை தருகின்றது என்று சுவிஸ் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நாவின் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

ஆர்பர் அம்மையார் தகுதி இல்லாதவரா? ஐ.நா சீற்றம்

இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்தியுள்ள பிணக்குக் குறித்து அவதானித்து அறிக்கையிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தகுதியற்றவர் என்ற விதத்தில் இலங்கையின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி தயான் ஜெயதிலக தெரிவித்த கருத்துகளுக்கு, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது சட்டரீதியானது எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் குறிப்பிட்ட அமைப்பு, அதே வேளை ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் துணைத் தலைவவராகவும் உள்ள தயான் ஜெயதிலக, அந்தச் சபையில் தலைவரின் முக்கிய பணியை நிராகரிப்பது குறித்து ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் கிலெல் நியுயெர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தயான் ஜெயதிலக பயன்படுத்திய மொழி மற்றும் இலங்கை நிலைவரத்தைக் கண்காணிப்தற்கு ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரமில்லை என்ற சாரப்பட அவர் தெரிவித்த கருத்துகள் ஆகியன குறித்து தாம் கவலை அடைகிறார் எனவும் நியுயெர் குறிப்பட்டர்.

ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு எதிரான இலங்கையின் கருத்து, ஒடுக்கு முறை அரசுகள் சகல வகையான சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்புகளையும் அகற்ற முயல்வதைப் புலப்படுத்தியுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளன.

சீனா, ஈரான், சூடான் போனற் நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திறகுப் பணியாளர்களை பூகோள அடிப்படையிலேயே தெரிவு செய்ய வேண்டும், தகுதி அடிப்படையில் அல்ல எனத் தெரிவிக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியமையையும், அவை அதன் மூலம் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயன்றமையையும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.

.இலங்கையில் மனித உரிமை நிலைவரத்தைக் கண்காணிப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தகுதியற்றதாக உள்ளது என்பதை லூயிஸ் ஆர்பரின் கருத்து புலப்படுத்துவதாகத் தயான் ஜெயதிலக கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார் என்பது தெரிந்ததே.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.