Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் அரச களஞ்சியங்களின் கையிருப்பை யாழ் அரச அதிபர் வெளியிட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அரச களஞ்சியங்களின் கையிருப்பை யாழ் அரச அதிபர் வெளியிட்டுள்ளார்

1/19/2008 12:15:01 PM

வீரகேசரி இணையம் -

யாழ் குடா நாட்டு மக்களிடையே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தப்பெண்ணத்தைப் போக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் அரச களங்சியங்களில் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களின் விபரம் வெளியிடபட்டுள்ளது.

கடந்த 16ம் திகதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தன தொடர்ந்து யாழ் குடா நாட்டு மக்களிடையே பலத்த ஊகல்கள் நிலவி வருகின்றது.இந் நிலைமையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எ9 பாதை திடீரென மூடப்பட்டமையால் சில காலம் யாழ் குடா நாட்டு மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கி தவித்தார்கல்

அந்த அனுபத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ள நிலையில் உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற ஊகத்தில் பொது மக்களிடையே பொருட் கொள்வனவு அறிந்துள்ள நிலையில் அரசாங்க அதிபர் அரச களஞ்சியசாலை உள்ள உணவு பொருட்களின் கையிருப்பை வெளியிட்டுள்ளார்.

நாவற்குழி ,கோண்டாவில் அரச களஞ்சியர்களில் 23இலட்சத்து 24 ஆயிரத்தி 32 கிலோ நாட்டரிசியும், 5லட்சத்து 6 ஆயிரத்து 991 கிலோ தீட்டல் அரிசியும், 8 லட்சத்து 40 ஆயிரத்து 898 கிலோ சீனியும் காணப்படுவதாகவும் மற்றும் பொருட்களும் இருப்பில் உள்ள தாகவும் அறிவிக்கப்பட்ட்டுள்ளது

யாழ் வணிகர் கழகமும் யாழ் குடா நாட்டு வர்த்தகர்களிடம் 4 மாதங்களுக்கு போதுமான பொருட்கள் கையிருப்பில் உள்ள தாகவும் மேலும் தேவையான பொருட்கள் கப்பல்கள் எடுத்து வரப்பட்டவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள் என்பது சுட்டிக் காட்டக் கூடிய தாகும்.

யாழ் குடா நாட்டுக்கு வேண்டிய அத்தியவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வர யாழ் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை வடுத்துள்ளார்கள் .

அண்மைக்காலமாக பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் யாழ் செயலகத்தில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களையும் மற்றும் சில பொருட்களை தனியார் வர்த்தகர்களிடம் இருந்து பெற்றுமே பொது மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள் .

இந் நிலையில் பொது மக்களுக்கு முழுமையான சேவையை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் வழங்க முடியாத நிலமையில் தற்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம், கொழும்பில் இருந்து பொருட்களை யாழ் குடா நாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வேண்டிய கப்பல் வசதி மற்றும் கடன் வசதிகளை செய்து தரும்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துடன் நேரில் சந்தித்து உரையாடி பல் நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளதாக பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் அரச களங்சியங்களில் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களின் விபரம் வெளியிடபட்டுள்ளது.

[saturday January 19 2008 08:45:14 AM GMT] [யாழ் வாணன்]

யாழ் குடா நாட்டு மக்களிடையே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தப்பெண்ணத்தைப் போக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் அரச களங்சியங்களில் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களின் விபரம் வெளியிடபட்டுள்ளது.

கடந்த 16ம் திகதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தன தொடர்ந்து யாழ் குடா நாட்டு மக்களிடையே பலத்த ஊகல்கள் நிலவி வருகின்றது.இந் நிலைமையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எ9 பாதை திடீரென மூடப்பட்டமையால் சில காலம் யாழ் குடா நாட்டு மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கி தவித்தார்கல்

அந்த அனுபத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ள நிலையில் உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற ஊகத்தில் பொது மக்களிடையே பொருட் கொள்வனவு அறிந்துள்ள நிலையில் அரசாங்க அதிபர் அரச களஞ்சியசாலை உள்ள உணவு பொருட்களின் கையிருப்பை வெளியிட்டுள்ளார்.

நாவற்குழி ,கோண்டாவில் அரச களஞ்சியர்களில் 23இலட்சத்து 24 ஆயிரத்தி 32 கிலோ நாட்டரிசியும், 5லட்சத்து 6 ஆயிரத்து 991 கிலோ தீட்டல் அரிசியும், 8 லட்சத்து 40 ஆயிரத்து 898 கிலோ சீனியும் காணப்படுவதாகவும் மற்றும் பொருட்களும் இருப்பில் உள்ள தாகவும் அறிவிக்கப்பட்ட்டுள்ளது

யாழ் வணிகர் கழகமும் யாழ் குடா நாட்டு வர்த்தகர்களிடம் 4 மாதங்களுக்கு போதுமான பொருட்கள் கையிருப்பில் உள்ள தாகவும் மேலும் தேவையான பொருட்கள் கப்பல்கள் எடுத்து வரப்பட்டவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள் என்பது சுட்டிக் காட்டக் கூடிய தாகும்.

யாழ் குடா நாட்டுக்கு வேண்டிய அத்தியவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வர யாழ் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை வடுத்துள்ளார்கள் .

அண்மைக்காலமாக பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் யாழ் செயலகத்தில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களையும் மற்றும் சில பொருட்களை தனியார் வர்த்தகர்களிடம் இருந்து பெற்றுமே பொது மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள் .

இந் நிலையில் பொது மக்களுக்கு முழுமையான சேவையை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் வழங்க முடியாத நிலமையில் தற்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம், கொழும்பில் இருந்து பொருட்களை யாழ் குடா நாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வேண்டிய கப்பல் வசதி மற்றும் கடன் வசதிகளை செய்து தரும்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துடன் நேரில் சந்தித்து உரையாடி பல் நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளதாக பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.