Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை என்ற விபச்சார விடுதியின் நாணயமான கஸ்ரமராம் யப்பான்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் ஒவ்வொரு இனத்துக்கென்றும் ஒவ்வொரு சிறப்பான விடயங்கள் இருக்கின்றது. அதுபோல் சிங்கள இனத்தின் புரிதல் திறனுக்கு நெருப்புபோல் இருக்கின்ற ஒருவிடயம் விபச்சாரம். இதை உதாரணத்துக்கு கொண்டுவராத ஒரு உதாரணம் இல்லை அவர்களுக்கு என்று சொல்லலாம்!

இணைத்தலைமையிலிருந்து ஜப்பானை வெளியேற்ற மேற்குநாடுகள் சதி?

[19 - January - 2008] [Font Size - A - A - A]

ஷ்ரீலங்கா இனப் பிரச்சினையை சமாதான அணுகுமுறை மூலம் தீர்த்துவைப்பதற்கான ஆலோசனை, ஆதரவு, தூண்டுதல்களை வழங்கும் நோக்கத்தில் சர்வதேச சமூகத்தில் முன்னணியிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை அமைப்பில் வேறுபட்ட நிலைப்பாடுகளும் போட்டி மனப்பான்மையும் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது சம்பந்தமாக அண்மையில் சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி இணைத்தலைமை நாடுகளிடையே ஷ்ரீலங்கா இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டிய இணைத்தலைமை நாடுகள் பற்றி உட்பூசலும் கருத்து வேறுபாடுகளும் தீவிரமடைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இணைத்தலைமை நாடுகளிடையே இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் கருத்து மோதல் நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் ஆயினும் அது இணைத்தலைமை நாடுகளின் செயற்பாடுகளைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்கவில்லை. ஆனால், கடந்த வாரம் இணைத்தலைமை நாடுகளின் அமைப்பு சார்ந்த சில வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களில் மேற்படி, கருத்து மோதல் வலுவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மோதலைத் தீர்க்க புறப்பட்ட நாடுகளிடையே கருத்து மோதல் நிகழ்வதாகக் கூறப்படுவது துரதிஷ்டவசமானது எனவும் மேற்படி தகவல்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி கடந்தவாரம் கிடைத்துள்ள தகவல்களில் இவ்வாறு இணைத்தலைமை நாடுகளிடையே குறிப்பிட்ட எந்த நாடுகள் சம்பந்தமாக இவ்வாறு உட்பூசல் எழுந்துள்ளது என்பது பற்றியும் விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களுக்கேற்ப இணைத்தலைமையிலிருந்து ஜப்பானை வெளியேற்றுவதற்காக ஏனைய சில இணைத்தலைமை நாடுகள் சதி செய்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இணைத்தலைமை அமைப்பில் இணைந்துள்ள நாடுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுமாகும். இதற்கேற்ப இணைத்தலைமையிலுள்ள ஒரே ஒரு ஆசிய நாடு ஜப்பான் ஆகும். ஏனைய அனைத்தும் வல்லரசு ஸ்தானத்திலுள்ள மேற்கத்திய நாடுகளாகும். அபிவிருத்தியடைந்த ஆசிய நாடு என்ற ரீதியில் மேற்கு நாடுகளிடையே ஜப்பானுக்கு விசேட மதிப்பு உண்டு. ஷ்ரீலங்கா சமாதான முயற்சிகளில் விசேட பங்களிப்பைச் செய்துவரும் நாடுகள் நோர்வேயும் ஜப்பானும் ஆகும்.

நோர்வே, ஜப்பான் இரு நாடுகளிலும் ஜப்பான் நீண்டகாலமாகவே ஷ்ரீலங்காவுக்கு உதவி வழங்கும் நாடாக இருந்துவந்துள்ளது. இணைத்தலைமை நாடுகள் ஷ்ரீலங்காவுக்கான நிதி உதவிகளை நிறுத்துதல், ஷ்ரீலங்கா அரசுக்கு எதிரான அறிக்கைகளை விடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவிருந்தபோதெல்லாம் ஜப்பான் அவற்றுக்கு எதிராக இருந்ததாலேயே மேற்படி முயற்சிகளை இணைத்தலைமை அமைப்பு செய்யவில்லை. இதற்குக் காரணம் ஜப்பானை இணைத்தலைமையில் ஓரங்கட்டிவிட்டு செயற்பாட்டுச் சுக்கானை தமது கைகளில் எடுத்துக்கொள்ள மேற்கத்திய வல்லரசுகள் முயற்சி மேற்கொண்டு வருவதான ஒரு நிலைமை இருந்ததாலேயே.

மேற்படி தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. ஆயினும், இணைத்தலைமை அமைப்பில் இவ்வாறான ஒரு கருத்துமோதல் நிலைமை இருந்துவருவது அறியக்கூடியதாக உள்ளது. மேற்கத்திய நாடுகள் இவ்வாறு ஜப்பானை இணைத்தலைமையிலிருந்து ஓரங்கட்டி வருவதற்குக் காரணம் அவுஸ்திரேலியாவையும் கனடாவையும் இணைத்தலைமையில் இணைத்துக் கொள்வதற்கும் ஜப்பானை விலக்கிவிட்டு பதிலாக இந்தியாவை இணைத்தலைமையில் சேர்த்துக்கொள்வதற்கும் விரும்பிவருவதே எனவும் குறித்த தகவல்களிலிருந்து தெரியவருகிறது. எவ்வாறாயினும் ஷ்ரீலங்கா இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா விரும்பாமலே இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்தியாவை இணைத்தலைமையில் சேர்த்துக்கொண்டாலும் அது ஷ்ரீலங்கா விடயத்தில் தீவிர தலையீட்டைச் செய்யப்போவதில்லை. இப்படியான நிலைமையில் மேற்கு நாடுகள் ஷ்ரீலங்காவில் தீவிர பங்காற்றவோ அல்லது விரும்பும் தீர்மானத்தை செய்துகொள்ளவோ முடியும். ஆனால், தற்போது ஜப்பான் மேற்கு நாடுகளின் போக்குக்கு எதிராக இருப்பதால் அவற்றால் விரும்பிய வகையில் செயற்பட முடியவில்லை. ஜப்பான் இணைத்தலைமையில் இருப்பதாலேயே இவ்வாறு மேற்கு நாடுகள் சுயாதீனமாக இயங்கமுடியாமல் உள்ளன. எனவே, இந்த நிலை காரணமாகவே ஜப்பானை இணைத்தலைமையிலிருந்து ஓரங்கட்டி அகற்றுவதற்கு மேற்கு நாடுகள் சதி செய்துவருவதாக மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் சில தகவல்களும் கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன. இணைத்தலைமையில் ஜப்பான் மட்டுமே ஆசிய நாடாக உள்ளது. ஏனைய மேற்கத்திய நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், நோர்வே அனைத்துமே அபிவிருத்தியடைந்த நாடுகள் தரப்பில் உள்ளன. ஆனால், ஆசிய நாடுகள் அண்மையிலேயே அபிவிருத்தியடைய ஆரம்பித்துள்ளன. அவ்வாறே அரசியல், ராஜதந்திரம் என்ற வகையில் ஆசிய நாடுகள் முன்னணி ஆபிரிக்க நாடுகளையும் விட முன்னேற்றமடையாத நிலையிலேயே உள்ளன எனலாம். எவ்வாறாயினும் ஆபிரிக்காவில் நாடுகளிடையே மோதல்கள், பிரச்சினைகள் தோன்றும்போது அவற்றில் மத்தியஸ்தம் வகிப்பதற்கோ அல்லது தீர்த்துவைக்கவோ ஆபிரிக்க நாடுகள் மட்டுமே அங்கம்வகிக்கும் ஆபிரிக்க ஒத்துழைப்புச் சங்க அமைப்பு உண்டு. மேலும், ஆபிரிக்க நாடு ஒன்றில் பிரச்சினை எழுந்த சந்தர்ப்பங்களில் அதன் அயல் நாடுகளே முன்னின்று அதைத் தீர்த்துவைக்க முயல்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இன்னொரு ஆபிரிக்க அயல் நாட்டின் படைகளே ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், ஷ்ரீலங்காவைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவை மேற்கத்திய நாடுகளே ஆகும்.

ஷ்ரீலங்கா இனப்பிரச்சினை விடயத்தில் ஜப்பானைத் தவிர ஏனைய நாடுகள் அலட்சியமான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஒரு தடவை தலையிட்டு சூடுபட்டுக்கொண்ட பின் மீண்டும் தலையிடுவதற்குத் தயக்கம் காட்டிவருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு இலங்கை இனப் பிரச்சினையில் தலையிடும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆசியாவிலோ ஆபிரிக்காவிலோ அல்லது லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலோ உள்ள நாடுகள், நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு மேற்கு நாடுகளுக்குக் கிடைத்த வாய்ப்பைக் காட்டிலும் மிக இலகுவான வாய்ப்பு ஷ்ரீலங்காவில் மேற்கத்திய நாடுகளுக்குக் கிடைத்துள்ளது.

தற்போது ஷ்ரீலங்கா பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இணைத்தலைமை என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன. உலகில் ஏனைய பல நாடுகளிலும் இவ்வாறு உள்நாட்டு மோதல் பிரச்சினைகள் இருந்தபோதும் அப்படியான எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு மேற்கு நாடுகள் இணைத்தலைமை என்று கூறிக்கொண்டு அவர்களின் இஷ்டத்துக்கு செயற்பட முடியவில்லை. ஆனால், ஆசியாவைப் பொறுத்தவரை குறிப்பாக ஷ்ரீலங்காவைப் பொறுத்தவரை வெளிநாடுகள் இஷ்டத்துக்கு வந்துபோய் இஷ்டத்துக்குச் செயற்படக்கூடிய முறையில் ஒரு விபச்சாரிகள் மடம் போல் ஆகிவிட்டது.

மேற்படி குறிப்பிட்ட இணைத்தலைமை நாடுகள் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களுக்கேற்ப அமெரிக்க தூதுவர் இவ்வாறு ஜப்பானுக்கு எதிரான ஒரு சதி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான கூற்று உண்மையானால் இது மேலே கூறியதுபோலான ஒரு விபச்சாரிகள் விடுதிக்கு வரும் ஒரு "கஸ்ரமர்" வாடிக்கையாளர் மற்றொரு கஸ்ரமருக்கு எதிராகச் சதி செய்வது போன்ற மோதல் நிலைமையாகும். அவ்வாறு விடுதியில் கூடுதல் மதிப்பைப் பெற்ற ஒரு கஸ்ரமருக்கு எதிராக ஏனைய அனைத்துக் கஸ்ரமர்களும் சதி செய்வதாகவும் இதனைக் கருதலாம்.

திவயின விமர்சனப் பகுதி: 14/01/2008

நன்றி தினக்குரல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஒரு தடவை தலையிட்டு சூடுபட்டுக்கொண்ட பின் மீண்டும் தலையிடுவதற்குத் தயக்கம் காட்டிவருகிறது.

முழுப் பூசனிக்காய சோற்றுல மறைக்கிறாங்க :(

இந்திராகாந்திய சுட்ட சீக்கிய இனத்தவர் இந்திய பிரதமராகலாம் என்ற நிலை இருக்கும் போது...........(TR)

Edited by tamillinux

நம்பக்கூடிட மாறில்லை, இலைங்கை என்ற விபச்சாரிக்காக யப்பான் என்னும் காதலியை இழப்பார்கள் என்பது சற்று ஓவர் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.