Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைக்கால தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல்

1/25/2008 12:25:32 AM

வீரகேசரி இணையம் - அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வு யோசனையானது வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற வெற்றுக்காசோலைக்கு சமனானது. இதனால் மேலும் பிரச்சினைகளே அதிகரிக்கும் என்று ஜே.வி. பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் முப்படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தளத்தை தாக்கியழித்துள்ள இத்தருணத்தில் பிரிவினைவாத சக்திகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலமைந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்திருப்பதிலிருந்து ஜனாதிபதியின் அடிமட்டமான முட்டாள் தனம் வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தொழில் பெற்றுக்கொண்ட பட்டதாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது தேசிய மாநாடு மஹரகமையிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம். பி . இதனைத்தெரிவித்தார்.

நியாயமான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கும் நாட்டை கட்டியெழுப்ப ஆற்றல் உள்ள உழைக்கும் சக்திகளான பட்டதாரிகளை அணிதிரட்டும் வகையில் அமைந்த இம்மாநாட்டில் ஜே.வி.பியின் எம்.பி லால் காந்தவும் கலந்து கொண்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச மேலும் கூறியதாவது எமது நாடு சதந்திரமடைந்து 60 ஆண்டுகளையும் பூர்த்தி செய்ய இருக்கின்ற நிலையில் நாட்டில் அபிவிருத்தி மட்டும் மந்த கதியிலேயே உள்ளது காரணம் வெள்ளைகாரன் காட்டி விட்ட வழிகளிலிருந்து இன்னும் விடுபடாமைதான். இன்று வரையிலும் வெளிநாட்டுக் கொள்கைகள் நமது நாட்டுக்குள் புகுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. இன்னொருபக்கம் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் இந்த யுத்தத்துக்கு முழுமுதல் காரணமே பிரிவினை வாதமாகும். இந்த பிரிவினை வாத்திற்கு துணைபுரிகின்ற ஐக்கிய தேசிக் கட்சி புலிகளுக்கும் புலி ஆதாரவாளர்களுக்கும் ஏற்ற விதத்திலேயே நடந்து கொள்கின்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் இது இடம்பெற்றதாலேயே அதனை தடுத்து நிறுத்தினோம்.

ஆனால் இன்று நடந்திருப்பது என்ன? அதிகாரப்பரவலாக்கம் என்ற யோசனைத்தீர்வுத்திட்டம் மஹிந்த அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விதாரணவினால் முன்வைக்கப்பட்டிருந்த இந்த திட்டமானது வங்கிகளில் வழங்கப்படுகின்ற வெற்றுக் காசோலைக்கு ஒப்பானதாகும். யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் அதனை நிரப்பிக் கொள்ளமுடியும். இதனால் மேலும் மேலும் பிரச்சினைகளே ஊருவாக வழிவகுக்கும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவினதும் வெளிநாடுகளினதும் தாளத்துக்கு ஏற்றாற்போல் ஆடிக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் தற்போது பயங்கரவõதத்துக்கு இராணுவ ரீதியிலான தீர்வு என்றும் நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரப்பரவலாக்கல் மூலம் தீர்வு என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்கு சாதகமாக நடந்து கொள்ளும் பிரிவினைவாத சக்திகளின் கரங்களே அதிகாரப்பரவலாக்கல் மூலம் நன்மையடையப்போகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாயே இது வெற்று காசோலை தான். காசு தொகையும் போடவில்லை. கையெழுத்தும் போடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எங்கேயோ இப்படிக்காசோலையைக்குடுத்து ஏமாந்திருக்கிறார்போல

அதுதான் இப்படி அலறுகிறார்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.