Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிவின் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிவின் ஆரம்பம்

[25 - January - 2008] [Font Size - A - A - A]

இலங்கையில் இதுகாலவரையான எந்தவொரு சர்வகட்சி மகாநாடுமே பயனுறுதியுடைய விளைபயன்களைக் காண்பதற்கான நோக்கத்துடன் கூட்டப்பட்டதில்லை. சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழ் மக்களுக்கு சாத்தியமான அளவுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்கு அல்லது தேசிய இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே சர்வகட்சி மகாநாடுகளை காலங்காலமாக கொழும்பு அரசாங்கங்கள் பயன்படுத்திவந்திருக்கின்றன. எமது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மகாநாட்டின் செயற்பாடுகளின் விளைவாக இலங்கையின் சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய நம்பகமான அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை வகுக்க முடியும் என்று எமது நெருக்கடியில் அக்கறை காண்பித்துவரும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் நம்பிக்கை வெளியிட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ்மக்கள் பெற்றுக்கொண்ட சரித்திரப் படிப்பினைகளை மறுதலையாக்கக் கூடியதாக இலங்கையில் அரசியல் அதிசயம் எதுவும் நடந்துவிட முடியுமென்று உலகம் எதிர்பார்ப்பது விவேகமானதல்ல என்று நாம் சுட்டி வந்திருக்கிறோம்.

2006 நடுப்பகுதியில் ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடு தேசிய இனநெருக்கடிக்கான தீர்வுக்கு அடிப்படையாக அமையக் கூடிய ஒரு தொகுதி யோசனைகளைத் தயாரிப்பதற்காக விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்தது. கடந்த ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்திய இந்த சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறது. ` சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்கவிருக்கும் யோசனைகளுக்கு முன்னோடியாக தற்போதைய அரசியலமைப்பின் பொருத்தமான ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை' என்ற தலைப்பில் அமைந்த இந்த இடைக்கால அறிக்கை ஐந்து பக்கங்களைக் கொண்டது. ஜனாதிபதியிடம் மிகவும் அண்மைய எதிர்காலத்தில் கையளிக்கப்படவிருக்கும் முழுமையான இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்படவிருக்கும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதுடன் சில பிரிவுகளுக்கு சர்வஜனவாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டியது அவசியம் என்பதால் ஒரு குறுகியகால செயற்றிட்டத்துக்கான முன்மொழிவுகளையே இடைக்கால அறிக்கையில் செய்திருப்பதாக பிரதிநிதிகள் குழு தெரிவித்திருக்கிறது.

முழுமையான தீர்வு யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு காலமெடுக்கும் என்பதால் தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் குறுகிய காலத்தில் மாகாணங்களுக்கு கூடுதல் பட்சமானதும் பயனுறுதியுடையதுமான அதிகாரப்பரவலாக்கலைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இனங்கண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதிகள் குழு இந்த நடவடிக்கைகளை தற்போதைய அரசியலமைப்பு வரையறைகளுக்குள் செய்ய முடியுமென்று விதந்துரைத்திருக்கிறது. இதற்காக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தக் கூடிய சூழ் நிலை இருப்பதால் அங்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வடக்கில் அண்மைய எதிர்காலத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் இடைக்கால நிருவாக சபையொன்றை நிறுவவேண்டும் என்றும் அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கிறது.

1987 ஜூலை 29 இல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கொழும்பில் கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதே 1978 அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமாகும். அதன் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட சபைகள் வடக்கு-கிழக்கைத் தவிர நாட்டின் ஏனைய 7 மாகாணங்களிலும் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகின்றன. உரிய காலத்துக்கு கிரமமாக தேர்தல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் அதிகாரப் பரவலாக்கல் எந்தப் பிரதேசங்களுக்குத் தேவையோ அங்கெல்லாம் மாகாண சபைகள் இயங்க முடியாமல் இருந்த அதேவேளை, ஒரு போதுமே அதிகாரப் பரவலாக்கலைக் கோராத தென்னிலங்கை, மாகாண சபைகளை வீணே சுமந்துகொண்டிருக்கிறது. இது இலங்கையின் அரசியல் விநோதங்களில் ஒன்று. 20 வருடங்களாக செயற்பட்டுவரும் இந்த மாகாண சபைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தென்னிலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை கோரிக்கை விடுத்ததேயில்லை. அந்த முழுமையான அதிகாரங்களைப் பற்றி முதலமைச்சர்கள் கூட அக்கறை காட்டியதில்லை.

இத்தகையதொரு பின்புலத்திலேதான் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கை மீதும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீதும் பிறந்த திடீர் பாசத்தை நோக்கவேண்டியிருக்கிறது. உண்மையிலேயே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குவதற்கோ அல்லது வடக்கில் இடைக்கால நிருவாக சபையொன்றை ஏற்படுத்துவதற்கோ தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு எந்தப் பிரச்சினையுமே கிடையாது. அவர் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்க முடியும். அதற்காக சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையொன்றுக்கு எந்தவிதமான தேவையும் இல்லை. அத்துடன், ஒன்றரை வருடங்களாகக் கூடி ஆராய்ந்த அக் குழு இடைக்கால அறிக்கையொன்றைத் தயாரிக்க வேண்டிய அவசியம் எழுந்தால் கூட இதுகாலவரை ஆராயப்பட்ட புதிய யோசனைகளின் அடிப்படையிலான இடைக்காலச் செயற்றிட்டமொன்றை முன்மொழிவதே பொருத்தமானதாகும். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற முன்மொழிவைச் செய்வதற்கு ஒரு சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதிகள் குழு தேவையில்லை.

சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் செயற்பாடுகள் மூலமாக உருப்படியான ஏதாவது அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை வகுக்க முடியுமென்று நம்பிய சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளிடமிருந்து அண்மைக் காலமாக பெரும் நெருக்குதல்களுக்குள்ளாகிவந

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.