Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க

Featured Replies

இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க

வடக்கில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபை மக்களின் தேவைக்காக அமைக்கப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகவே இனவாத அடிப்படையில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது. இடைக்கால நிர்வாக சபையினை அமைக்க ஒருபோதும் இடமளியோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

தேசப்பற்றுள்ள சகல சக்திகளையும் இணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம். இன்று ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்பதை மறந்து சுதந்திரக் கட்சியின் தøலவராகவே செயற்படுகின்றார் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள "சத்சிறிபாய" மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே சோமவன்ச அமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

சர்வ கட்சி பிரதிநிதிகள் குறித்து முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக சபையை ஏற்க முடியாது. இது உண்மையில் சர்வகட்சி குழு அல்ல அரசாங்க கட்சி குழு. இதில் அங்கம் வகிக்கும் 14 கட்சிகளும் மக்கள் அடித்தளமில்லாத கட்சிகளாகும். குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள தீர்வு யோசனைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களின் எதிர்பார்ப்புக்களை தேர்தலை நடத்துவதன் மூலமே தீர்த்து வைக்க முடியும். அதை விடுத்து இனவாத அடிப்படையில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபையால் முடியாது. இது எமது நாட்டு மக்களின் தேவைக்காக அல்ல ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காக அமைக்கப்படவுள்ளது.

இதற்கு ஒருபோதும் இடமளியோம். நாட்டின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளையும் ஒன்றிணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை படையினர் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கின்றனர்.

மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குகின்னர். ஆனால் அரசாங்கம் எவ்விதமான அர்ப்பணிப்புக்களையும் செய்யாது வெறுமனே இனவாதப் போக்கையும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் யோசனைகளை முன்வைக்கின்றது.

13ஆவது திருத்தச் சட்டம்

இந்தியாவின் தேவைக்காக அதன் அடிமைத்தனத்திற்கு தலைசாய்த்து, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு எமது கடல் எல்லைகளில் இந்திய பீரங்கிப் படகுகள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு 140 பேரை பலிகொண்டதன் மூலம் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் இதுவே 13ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்தது.

இதனால் உருவான மாகாண சபைகளால் எதுவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. வடகிழக்கிற்கென ஏற்படுத்தப்பட்டு இன்று ஏனைய பிரதேசங்களிலும் மாகாண சபைகள் செயல்படுகின்றன.

அன்று சிறிமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்து அதனை மீறியும் நிறைவேற்றப்பட்டு புதைகுழியிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்க முனைவது நாட்டை பிரிக்கும் செயற்பாடõகும்.

ஜனநாயக விரோத செயல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தலைவர் என்பதை மறந்து அரசாங்கத்தினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே செயல்படுகிறார்.

அத்தோடு 1981இல் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி ஜனநாயக விரோதமாக மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை மேற்கொள்ள முனைவது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

அமைச்சர் திஸ்ஸ விதாரண ஜே.வி.பி.யினரை அடிப்படைவாதிகளென குற்றம் சுமத்துகிறார்.

நான் ஒன்øறக் கூற விரும்புகிறேன். அன்று சிங்கள மொழியை அரச கரும மொழியாக்கியபோது அதற்கு உடந்தையாயிருந்தவர் அவர்களின் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவாகும்.

ஆனால் நாம் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மும்மொழிகளையும் அரச கரும மொழியாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தோம்.

ஏகாதிபத்தியத்தை அன்று எதிர்த்த சம சமாஜகட்சி இன்று அவர்களின் காவலர்களாக மாறியுள்ளது.

ஜனாதிபதி நியமிக்கும் இடைக்கால சபை வட பகுதிக்கான இடைக்காலச் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியாலேயே நியமிக்கப்படவுள்ளனர். இது முற்றிலும் மக்களின் தேவைக்கான சபையாக இருக்காது. தமது அரசியல் ஆதரவாளர்களை தாலாட்டும் சபையாகவே அமையும்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தேர்தலே தேவை. அதனைவிடுத்து உறுப்பினர்களை தெரிவு செய்வது தவறானது.

நாட்டிற்கு இது தேவை. ஆனால் சமாதானமான சூழ்நிலையிலேயே உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலம் முடியும்போது நிறைவேற்று அதிகாரத்தையும் இல்லாதொழிக்க வேண்டும்.

தேசிய பிரச்சினையும்

ஜே.வி.பி.யின் தீர்வும்

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு ஜே.வி.பி.யின் தீர்வுதான் என்ன என பலர் கேட்கின்றனர். எம்மிடம் தெளிவான தீர்வு இருக்கின்றது. முதலில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முழுமையாக தோல்வியடையச் செய்யவேண்டும். அடுத்த கணமே வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்திகளை துரிதப்படுத்த வேண்டும்.

இது காலவரையும் மறுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும் ஆரம்பிக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து இனக் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கவேண்டும்.

பிரிவினைவாத கருத்துக்களை முழுமையாக இல்லாதொழித்து இனவாதத்தை வேரோடழிக்க வேண்டும். அதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறான சமாதான சூழ்நிலை உருவானதன் பின்பே அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக மக்கள் மத்தியிலான பரந்தளவிலான விவாதத்தை மேற்கொண்டு கருத்துக்கள் கண்டறியப்பட வேண்டும். முக்கியமான விடயம் வட, கிழக்கு உட்பட நாடு முழுவதும் குடிசன மதிப்பீடு நடத்தப்பட்டு அதன் பின்னர் காணி உரிமைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

ஒற்றையாட்சியின் கீழ் நிர்வாகத்தை கிராமம் வரை பரவலாக்க வேண்டும். அதன்போது நிதியையும் வழங்கவேண்டும். இன, மத, மொழி பேதம் மற்றும் சம அந்தஸ்தும் நீதியின் முன் அனைவரும் ஒரே நிலையாக கருதப்பட வேண்டும். பிரபாகரன் கொலை

செய்யப்படவேண்டும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்படவேண்டும் அல்லது எமது நாட்டின் சட்டங்களுக்கமைய சிறை வைக்கப்படவேண்டும்.

அதைவிடுத்து வெளிநாட்டிலும் கையளிக்கப்பட வேண்டியதோ சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய கடப்பாடோ எமக்கு கிடையாது.

ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் முதலில் ஈராக்கில் மனித உரிமைகள் மீறல்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷையே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான விஜித ஹேரத், இராமலிங்கம் சந்திரசேகரன், முஸ்ஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilwin.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.