Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது

- நக்கீரன் - ரொறன்ரோ

கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் உடபட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை இராணுவ பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதும் இரங்கல் தெரிவிப்பதும் சனநாயக உரிமையாகும். ஆனால் தடையைக் காரணம் காட்டி இரங்கல் தெரிவிக்க கூடாது என்று சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஆவேசப்படுவது வேடிக்கையாக உள்ளது. இது சனநாயகத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரான போக்கு என விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன் மாநாட்டில் பேசினார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த மாநாடு தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பகைவர்கள் மத்தியில் அச்சத்தையும் எரிச்சலையும் உருவாக்கியுள்ளது. மாநாட்டின் எதிரொலி தமிழக சட்டமன்றத்திலும் ஒலித்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கிருஷ்ணசாமி முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அன்னை இந்திரா காந்தி மகனும் எங்கள் தலைவி அன்னை சோனியா காந்தியின் கணவருமான எங்கள் தலைவர் இராசீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை நாடு என்றென்றும் மறவாது எனவும் தடைசெய்யப்பட்டுள்ள வி.புலிகள் இயக்கத்தை எந்த உரூபத்தில் யார் ஆதரித்தாலும் அதை அனுமதிக்கக் கூடாது எனவும் மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதே கிருஷ்ணசாமி அன்னை இந்திராவைக் சுட்டுக் கொன்ற சீக்கிய மதத்தைச் சார்ந்தவரை தலைமை அமைச்சராக்கி காங்கிரஸ் அழகு பார்ப்பதை வசதியாக மறந்துவிட்டார். அல்லது அவர்களுக்கு மாவீரர் பட்டம் கொடுத்து பொற்கோயிலில் வைத்து வழிபாடு செய்வதை மறந்துவிட்டார்.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திரு. தொல். திருமாவளவன் போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் அது போன்ற கூட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியதோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாக வெளிநடப்புச் செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்பை மேற்கொள் காட்டிப் பேசிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநதி வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமா இல்லையா என்பதை ஆராய ஒரு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் அதற்கான தடைச் சட்டம் கொண்டுவரப் படும் என்றும் தெரிவித்தார்.

வெள்ளைக்காரன் காலத்தில் அந்நிய துணிகளைக் கொளுத்தியும் வரிகொடா இயக்கம் நடத்தியும் சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய காங்கிரஸ் கட்சி இன்று வாய்மொழி ஆதரவு கொடுப்பது சட்டத்துக்கு முரணானது என வாதிடுவது சற்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது.

கருத்துச் சுதந்தரம் என்பது குடிமக்களது அடிப்படைச் சுதந்திரம். அதனைச் சாதாரண சட்டங்கள் கட்டுப்படுத்த முடியாது.

கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது, எழுதுவது, மாவீரர்கள் நாள் கொண்டாடுவது, தமிழீழ தேசியக் கொடியைப் பொது இடங்களில் ஏற்றுவது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. இங்குள்ள தமிழ்வானொலிகள், வானொளிகள் வி. புலிகளை ஆதரித்துச் செய்திகள் வெளியிடுகின்றன. காரணம் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூட்டம் கூட்டும் சுதந்திரம் கனடிய யாப்பில் அடிப்படை சுதந்திரங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. வி. புலிகளுக்கு ஆயுதம் வாங்க நிதியுதவி செய்வது மட்டுமே குற்றமாகக் கருதப்படுகிறது. போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்படுவது தடை செய்யப்படவில்லை. அப்படியான அமைப்புக்களுக்கும் தடை இல்லை.

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆவேசப்படும் காங்கிரஸ்காரர்கள் இந்திய அமைதிப்படை கொன்று குவித்த 3,000 க்கும் மேலான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். வி. புலிகள் தலைவரைச் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ தளபதிக்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்ஷித் மூலம் ஆணை பிறப்பித்த இராசீவ் காந்தியை நினைத்துப் பார்க்க வேணடும். அனைத்துலகக் கடலில் பயணம் செய்த வி.புலிகளின் கப்பலை மடக்கிப் பிடித்து அதில் பயணம் செய்த தளபதி கிட்டு உட்பட பத்து வி.புலிகளின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்திய கடற்படையை நினைத்துப் பார்க்க வேண்டும். இராசீவ் காந்தியின் உயிர்தான் வெல்லம் மற்றவர்களது உயிர் கிள்ளுக் கீரை என வாதிடுவது அல்லது நினைப்பது தவறானதாகும். அழுவதாக இருந்தால் எல்லோருக்கும் சேர்த்து அழுவோம்.

இந்தியா உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு எனக் கூறப்படுகிறது. அப்படியானால் மக்களாட்சியின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக அது நடந்து கொள்ளவேண்டும். "கருத்துரிமை மீட்பு" மாநாடுகள் நடத்த வேண்டிய அவலத்துக்கு இடம் வைக்கக் கூடாது. கனடா போன்ற நாடுகளைப் பார்த்தாவது மக்களாட்சி மாண்புகளைப் படித்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரிமை மீட்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய திரு. தொல். திருமாவளவன் தலையை எடுக்கத் துடிக்கும் சனனாயக விரோத சக்திகளான காங்கிரஸ் கட்சியையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- தமிழ் கனேடியன்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.