Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கான சினிமாவைக் கண்டடைதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கான சினிமாவைக் கண்டடைதல்: 'கல்லூரியின்" அழகியலை முன்வைத்து சில அவதானங்கள் - 1

-பரணி கிருஸ்ணரஜனி-

இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள 'கல்லூரி" திரைப்படத்தை, கடந்த இரு வாரங்களுக்கு முன் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

அந்தக் கணத்திலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை 'கல்லூரி" என் மன ஆழத்தில் மீண்டும் மீண்டும் வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களால் என் மன நிம்மதியைத் தொலைத்து விட்டிருக்கிறேன்.

இந்தப் புதிரான மனநிலையிலிருந்து விடுபடுவதாக எண்ணி- சலிப்பேற்படுத்தும் பொருட்டு 'கல்லூரி"யை 100 தடவைக்கும் மேல் திரும்பத் திரும்ப பார்த்தும் என் மன ஆழத்தில் அது கீறல்களும் கிறுக்கல்களுமாய் புதிது புதிதாய் சித்திரங்களை வரைந்தபடியே இருக்கிறதேயொழிய என்னை விட்டு அகன்றபாடில்லை.

ஒரு சமூகத்தில் கலைஞனின் - படைப்பாளியின் இடம் விசாலமானது. வேறு யாருக்கும் இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை. தான் சந்தித்த - கிரகித்த, தன்னைப் பாதித்த கருத்துக்களின் சுமையை தனது படைப்பினூடாக தான் வாழும் சமூகத்திற்குள் இறக்கி வைத்து விடுகிறான் அவன். அதன் வழி அவன் ஒரு மனநிறைவைப் பெறுகிறான்.

பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி" ஒரு வகையில் மேற்குறிப்பிட்ட வாய்ப்பாட்டுக்குள் பொருந்துகி;றதென்பது மட்டுமல்ல, இந்த விமர்சனக் கட்டுரையும் அதன் நிமித்தமாகவே வரையப்படுகிறது.

ஒரு தனிமனிதனாக "கல்லூரி" எனக்குள் வரைந்த அழகியற் கோலங்களை, போராடும் இனம் என்ற வகையில் (ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கலைகளும் போராட்ட வடிவம் என்ற அடிப்படையில்) ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவிற்குள் இடம் மாற்ற விரும்புகிறேன். இது ஒரு வகையில் என்மன அதிர்வுகளைக் கடத்தும் - அதிலிருந்து தப்புவிக்கும் முயற்சியும்கூட...

'கல்லூரி" கற்றுத்தரும் அழகியலுக்குள் நுழைவதற்கு முன்பாக இரு வேறுபட்ட முன் குறிப்புக்களை வரைவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் தற்போதைய ஈழ அரசியற் கள நிலவரங்களின் முரண்பாட்டிற்கு மத்தியில் ஒரு சினிமா விமர்சனம் வரைவதிலுள்ள நேர்மையையும் அறத்தையும் முன்மொழிவதற்கு அவ்விரு முன்குறிப்புக்களும் காலத்தின் அதி தேவையாகின்றன...

முன்குறிப்பு 01.

இந்த முதற்குறிப்பு ஆச்சர்யத்திற்குரியது என்பது மட்டுமல்ல என்னளவில் விபரீதமானதும் கூட. கடந்த வருடம் முதற்பகுதி என்று நினைக்கிறேன் எனது 'வெயில்" திரைப்படத்திற்கான விமர்சனத்தைப் பார்த்து விட்டு (பார்க்க - http://www.appaal-tamil.com/index.php?opti...&Itemid=60) எனது மாற்றுச் சினிமாவிற்கான தேடலையும் - எனது படைப்பாக்க முயற்சிகள் சிலவற்றையும் அறிந்து தமிழகத்திலுள்ள முன்னணி இயக்குனர் ஒருவர் தனது அடுத்த திரைப்படத்திற்காக ஈழச்சூழலை முன்னிறுத்திய ஒரு திரைக்கதை ஒன்றை தயார் செய்து தரும்படி, எனது தமிழக நண்பர் ஒருவர் மூலம் என்னை அணுகினார்.

நீண்ட நாட்களாக என் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி நாவலாக எழுத என்று நினைத்திருந்த ஒரு கதையை திரைக்கதை வடிமாக்கி அவருக்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து 'கிடைத்தது" என்பதைத் தவிர இந்த இடைப்பட்ட காலத்தில் வேறு எந்தப் பதிலும் இல்லை. அவருக்கு அந்தத் திரைக்கதை பிடிக்கவில்லைப் போலும் என்று நினைத்தது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் அதை முழுவதுமாக மறந்தும் விட்டிருந்தேன்.

நான்கு மாதங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு தொலைபேசி உரையாடலில் தமிழக சினிமாத்துறையைச் சேர்ந்த மேற்படி நண்பர் கூறிய தகவலின் அடிப்படையில் எனது திரைக்கதையை வேறு ஒரு இயக்குனர் இயக்க விரும்புவதாகவும் பிரதான பாத்திரத்தில் நடிகை 'தமன்னா"வை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். எனக்கு அந்த செய்தி ஏமாற்றம் மட்டுமல்ல ஒரு விதமான சலிப்பாகவும் இருந்தது.

ஏனென்றால் எனது திரைக்கதை ஒரு பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்டது. அந்தப் பெண்ணின் தனிவாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்ற போதிலும் - ஒரு படைப்பாளியாக எனது சமூகப் பாத்திரத்தை உணர்ந்து - மூன்று தசாப்த காலமாக நீண்டு தொடரும் எமது போராட்டத்தின் வலியையும் வேதனையையும் அந்தப் பெண் பாத்திரத்தினூடாக வெளிப்படும் படி ஒட்டுமொத்த ஈழத்தமிழ் பெண்களின் குறியீடாகவே அந்தப் பாத்திரத்தை உருவாக்கியிருந்தேன். வலி, துயரம், இயலாமை, அவமானம், புறக்கணிப்பு, மெல்லிய காதல், சிறு புன்னகை, பேரன்பு, பெருஞ் சோகம், தார்மீகக்கோபம், அறச்சீற்றம,; விடுதலை என்று அந்தப் பாத்திரப்படைப்பு பெரும் உழைப்பைக் கோரி நிற்கிறது.

அதை முழுமையாக வெளிப்படுத்தக் கூடிய தமிழ்நடிகை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் அடையாளங் காணப்படவில்லை. கதாநாயகிகள் 'பொம்மைகளாகவும்" கதாநாயகனின் நிழலை பின்தொடர்பவர்களாவும் உலாவித் திரியும் தமிழ்ச்சினிமா சூழலில் அந்த இயக்குனர் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே எனது திரைக்கதையை உருவாக்கி அனுப்பியிருந்தேன்.

கொஞ்சம் அயர்ந்தாலும் 'டொக்குமென்டரி"யாக மாறிவிடும் அபாயமுள்ள திரைக்கதை என்பது மட்டுமல்ல, இந்திய சினிமாத் தணிக்கை விதிகளின் கத்திரிக்கு இரையாகும் வாய்ப்புக்களையும் கொண்டது. (எந்த அரசியலும் பேசப்படவில்லை ஆனாலும் ஈழச்சூழலை மையப்படுத்தி கதை நகர்வதால் அதீத கவனத்தைக் கோரும் திரைக்கதை)

அது மேற்படி இயக்குனரிடமிருந்து கை மாறியது மட்டுமல்ல நடிகை 'தமன்னாவை" அதில் நடிக்க வைக்க முயற்சி என்ற செய்தி ஒருவித சினத்தையே உருவாக்கியது. தமன்னா நடித்து வெளிவந்த இரு தமிழ் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். உடலமைப்பில் நான் சிந்தித்து செதுக்கிய எனது பாத்திரத்திற்கு எந்த வகையிலும் அவர் பொருத்தமில்லாதவர் என்பதுமட்டுமல்ல அந்த இரு படங்களிலும் 'நடிப்பு என்றால் கிலோ என்ன விலை?" என்பது போன்றே நடமாடித்திரிந்தவர் தமன்னா.

இந்தத் தமன்னாதான் 'கல்லூரி"யின் நாயகி. ஏன் எனது திரைக்கதைக்கு தமன்னாவை தெரிவாக்கினார்கள் என்ற எனது சந்தேகத்தை 'கல்லூரி"யின் ஒவ்வவொரு காட்சிப்படுத்தல்களும் உடைத்து சுக்கு நூறாக்கிக் கொண்டேயிருக்கிறது. பெருங் குற்றவுணர்வுக்குள்ளாகியிரு

Edited by இளங்கோ

எமக்கான சினிமாவைக் கண்டடைதல்: 'கல்லூரியின்" அழகியலை முன்வைத்து சில அவதானங்கள் - 1

-பரணி கிருஸ்ணரஜனி-

எனது வாழ்க்கைச் சூழலின் நெருக்கடி காரணமாக "வெய்யில்", "கல்லூரி" ஆகிய இரண்டு படங்களையுமே என்னால் இதுவரை பார்க்கமுடியவில்லை. ஆனால் அவை பற்றிய உங்கள் கருத்தாக்கம் என்னை வளைத்துப் போட்டிருக்கிறது. தெளிவான, சிக்கலற்ற நடையில் எழுதப்பட்ட (அப்பால் தமிழிலும், தமிழ் நாதத்திலும்) இரண்டு கட்டுரைகளுமே அருமை. படங்களைப் பார்த்துவிட்டு பின்னர் எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.