Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடும்பி மலையில் சுதந்திர தினத்தன்று திடீரேன முளைத்த 16 அடி புத்தர் சிலை.

Featured Replies

சுதந்திர தினத்தன்று குடும்பிமலையில 16 அடி புத்தர் சிலை திடீரென முளைத்ததன் மூலம் சிங்களப் பேரனவாதம் தமிழர் தாயகத்தை அபகரிக்பப் போவது நிரூபணமாகியுள்ளதாக மட்டு. மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

60 வருடத்திற்கு முன்னர் இரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று இரத்தம் சிந்தப்படுகின்றது.

குடும்பிமலையில் சுதந்திர தினத்தன்று 16 அடி புத்தர் சிலை முளைத்தள்ளது. இதன் மூலம் தமிழர் தாயகத்தை சிங்களப் பேரினவாதம் அபகரிககப் போவது நிரூபணமாகியுள்ளது. கிழக்கின் உதயம் என்ற போர்வையிலேயே இவை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தமிழர் சக்தியை ஸ்ரீலங்கா அரசினால் இலகுவில் அழித்து விட முடியாது என்றார்.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

றெடி மேட்டாக புத்தர் சிலையை வைத்துக்கொண்டு மகிந்த குழு அலைகிறது எங்கே தமிழர் பகுதியில் வைக்கலாம் என்று.

அது தான்தோன்றிப் புத்தர்சிலை.

"60 வருடத்திற்கு முன்னர் இரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று இரத்தம் சிந்தப்படுகின்றது." - இப்படியான மனநிலை நோக்கித்தான் சிங்கள தேசம் நகர்கிறது.

கொரிலா தாக்குதல்கள் மூலம் எதிர்ப்பை கிளர்ச்சியை தெரிவிப்பவர்களாக தொடங்கி உள்நாட்டு யுத்தமாகி சில மரபு வழி யுத்தங்களை சிறீலங்கா படைகளிற்கு எதிராக நடத்துமளவிற்கு தமிழ்த் தேசியம் வழர்ச்சி கண்டது. மரபு வழி அரசபடைகள் என்று இவற்றை எதிர் கொள்ள ஆரம்பித்த சிறீலங்கா தரப்பு கொரிலா யுக்த்திகளையும் படிப்படியாக சேர்க்கத் தொடங்கியிருந்தது. சிறீலங்காவின் இந்த அணுகுமுறை மாற்றத்தின் கணிசமான தாக்கத்தை சந்திரிக்கா காலத்தில் காணக் கூடியதாக இருந்தது. இன்று சிறீலங்கா தரப்பு அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதற்கும் அப்பால் சென்று தன்னையும் ஒரு (சிங்கள) தேசியமாக முன்னிறுத்தி இயங்குகிறது தயார்ப்படுத்தல்களை செய்கிறது. ஈழப்போர் 4 இல் ஒரு கட்டத்தில் இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் முழு அளவில் மோதத் தொடங்கும் நிலையை காலனித்துவத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் முறை அடையும். அது பின்னர் இறுதித் தீர்விற்கான உடன்பாடு எட்டப்பட்டும் வரை தொடரும்.

இரண்டு தேசியத்திற்கு இடையிலான முழு அளவிலான யுத்தம் என்ற நிலைக்கு பிரச்சனை வழர்ந்து விடக் கூடாது என்பதில் தான் இந்தியா உட்பட்ட சர்வதேசத் தரப்புகள் கவனம் செலுத்தின. அவர்களது தவறான வழி நடத்தல்களால் அணுகுமுறைகளால் இன்று அந்த நிலைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. இந்த தீவிரம் அடைந்த அடுத்த கட்டம் (fully polarized as 2 nations) தான் கடந்த சமாதான முயற்சியைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்திற்கு கிடைத்த பெரும் தோல்வி.

Edited by kurukaalapoovan

"60 வருடத்திற்கு முன்னர் இரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று இரத்தம் சிந்தப்படுகின்றது." - இப்படியான மனநிலை நோக்கித்தான் சிங்கள தேசம் நகர்கிறது.

. ஈழப்போர் 4 இல் ஒரு கட்டத்தில் இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் முழு அளவில் மோதத் தொடங்கும் நிலையை அடையும். அது பின்னர் இறுதித் தீர்விற்கான உடன்பாடு எட்டப்பட்டும் வரை தொடரும்.

இது பொருத்தமான கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.