Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓர் ஐயம்..

Featured Replies

...ஓர் ஐயம்....

-கிப்பிர பிரசாத்-

தமிழகத்துத் தமிழ்ப் படித்த பேராசிரியன்மார்பலர், தமிழின் பெருமையை மேல் நாடுகள் சென்று பரப்பிய பேராசிரியரும் அவருள் உண்டு. மற்றையவர்களிலும் அவர் மேல் போலும், ஆயினும் அவர் இலக்கிய அறிவு ஒன்றே உடையர். அது தனி மொழிஅறிவு மட்டுந்தான். ஆனால் சமய அறிவு எத்தனை மொழிகளில் பரந்து கிடக்கின்றதோ அத்தனை மொழிகளிலும் தேர்ச்சி இருப்பதோடு தெளிவும் வேண்டும். மொழி விதிகளை அவ்வம் மொழித் தேர்ச்சி யொன்றானே தெளிவுபடுத்த இயலும், சமய விதிகளைத் தெளிவாகக் காட்ட அச்சமய பிரமாண நூல்கள் எவ்வெம் மொழிகளில் உள்ளனவோ அவ்வம்மொழிகளில் தேர்ச்சி பெறுதலோடு சமய பிரமாண நூல்கள் அவற்றிற்குரிய கருவி நூல்கள் முதலியவற்றினும் தேர்ச்சி, தெளிவு இருப்பது இன்றியமையாதது.

தமிழ்ப் படித்த தற்காலப் பேராசிரியன்மார் பலர்க்குள்ள சமய அறிவை அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தவர்கள் உணர்வார்கள். தமிழ் மொழியில் சைவ வைஷ்ண பிரமாண நூல்கள் உள. அவற்றை அப்பேராசிரியன்மார் நாவல்களைப் போல் படிக்கின்றனரேயன்றி அவ்வச் சமயக்கண் கொண்டு கற்றிலர்; ஆகலான் அவ்வச் சமய உண்மைகளைக் காணும் நல்லூழும் வாய்க்கப் பெற்றிலர். ஆனால் சைவத்திரு மடங்கள் (வைஷ்ணவ மடங்கள் அல்ல) இப்படிப்பட்ட பேராசிரியன்மார்களைப் - பொறுக்கிப் பேசச் செய்து பணமும் தருகின்றன. ; இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சைவ சமய லாபம் என்ன?

பரிணாம வாதத்தைச் சாங்கியரும் சைவரும் கொள்வர். விவர்த்தவாதம் ஸ்ரீ சங்கராச்சாரியார் கொள்கை. சைவாசிரியன்மார் அதனைக் கொள்ளார்.

"காரியப்பாட்டிற்கு...பேய்த்த

ேரானாய நீர்த்தோற்றம் போல மாயாவாதிகள் கூறும் விவர்த்த வாதமும் சித்தாந்தத்திற்கு ஏலாமையின்" என்று திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். ஆகலான் விவர்த்த வாதம் சைவ சமயத்திற்கு முற்றிலும் விரோதம். அதனைப் பிரவர்த்திக்கிறார் புத்தகப் பேராசிரியர். அவருக்கு நமது சைவ மடங்கள் பொன்னாடை போர்த்துகின்றன, பொற்கிழி நல்குகின்றன. தாம் கூட்டும் சைவ மாநாடுகளுக்கு தலைமை வகிக்கச் செய்கின்றன. பொருந்துமா இது என்பதே எமது "ஓர் ஐயம்"

வைஷ்ணவ மடங்களில் வைஷ்ணவ சமய நூல் தேர்ச்சியுடையார்க்கே பேச இடங் கிடைக்கிறது. ஸ்ரீ சங்கராச்சாரியார் மடத்தில் அவர் மதம் பேசுவார்க்கே இடம் அல்லது அவ்வலையில் வீழ்ந்த பிற சமயிகளுக்கும் இடம் உண்டு. ஆனால் சைவ மடங்களில் மட்டும் சைவ சமய பிரதிகூலம் பேசும் பேராசிரியன்மாருக்கு சைவ மூதாதையர் தம் அரும் உழைப்பால் சேர்த்து வைத்த பணம் அளவின்றித் தரப்படுகிறது. ம.பொ.சி, தெ.பொ.மீ. முதலியோரை சைவ மடங்கள் தவிர வைஷ்ணவ மாயாவாதமடங்கள் அழைத்துப் பேசச் செய்கின்றனவா? சமீபத்தில் சங்கராச்சாரியார் கூட்டிய வித்வத் சதஸில் இவர்களுள் யாருக்கு இடங்கள் கிடைத்தது? இவர்கள் சைவ சமயிகளா? ஆம் எனின் எமக்கு 'ஓர் ஐயம்' நிகழ்கிறது. அதனை இங்கே காட்டுவாம்.

அம்மடத்துக்கு வந்து போகிற ஒரு பேராசிரியர்தாம் எழுதிய 'தமிழ் மணம்' என்ற புத்தகம் பக்கம் 77ல் "இரண்டாய்ப் பலவாய்ப் படிப்படியாய் அந்நாளைய பரிணாமக் கொள்கைப்படியும், விவர்த்தம் என்ற இந் நாளையக் கொள்கைப் படியும் 'நீலமேனி வாலிழை பாகத்தொருவன் இருதாள் நிழற்கீழ் மூவகையுலகும் முகிழ்த்தன முறையே' எனப் பாடுகின்றார் பெருந்தேவனார்" என்கிறார்.

ஸ்ரீ சிவபிரானின் திருவடி நிழற்கீழ் மூன்று வகைப்பட்ட உலகங்களும் முறையே முகிழ்த்தன என்பது அப்பாடற் கருத்து. அப்பாடலில் இரண்டு கொள்கைகள் இருப்பதாகக் கண்டார் அப்புத்தக ஆசிரியர். ஒன்று "அந்நாளைய பரிணாமக் கொள்கை" பிறிதொன்று "இந்நாளைய விவர்த்தம்" அந்நாளையது பரிணாமக் கொள்கையாயின் பாடல் ஆசிரியர்க்கு அதுவன்றி மற்றது தெரியாது. ஆகலான் அவர்க்கு அதுவே கொள்கையாவதில் ஐயமின்று. ஏனெனில் இந்நாளைய விவர்த்தம் அந்நாளில் இருத்தற்கு ஏதுவில்லை. "இந்நாளைய" என்ற அடையால் அது தெளிவு.

ஆனால் பாடல் இயற்றிய ஆசிரியர் கொள்கையாகிய பரிணாமத்தோடு புத்தக ஆசிரியர் இந்நாளைய விவர்த்தம் என்ற கொள்கையைக் காணுவதற்கு அப்பாடலிற் காரணம் வேண்டும். விவர்த்தக் கொள்கையை யறியாத பெருந்தேவனார் பாடலில் விவர்த்தக் கொள்கை காணப்பட்டதாயின் அது புத்தக ஆசிரியர் கொள்கையாம் என்பது ஒருதலை. புத்தக ஆசிரியர் விவர்த்தக் கொள்கையினர் என்பது முடிவாயிற்று.

இனி, காரணத்திலிருந்து காரியம் தோன்றும் போது காரணம் காரியமாக மாறி விடுகின்றது. மண் பானையாக மாறுவதும், பால் தயிராக மாறுவதும் இதற்கு உதாரணங்கள். இதற்குப் பரிணாம வாதம் என்று பெயர்.

விவர்த்த வாதத்தின்படி காரணம் காரியமாக மாறுவதில்லை. கயிற்றிலிருந்து பாம்பு தோன்றுகின்றது. கயிறு காரணம்; பாம்பு காரியம். கயிறு பாம்பாகத் தோன்றுகின்றதே யொழிய உண்மையில் பாம்பாக மாறிவிடவில்லை. இது போலவே பிரமமும் உலகாகத் தோன்றுகிறதே யொழிய உண்மையில் உலகாக மாறுதலடைய வில்லை. இது விவர்த்த வாதம்.

கயிற்றிலிருந்து பாம்பு தோன்றுகின்றது. கயிறு காரணம்; பாம்பு காரியம். கயிறு பாம்பாகத் தோன்றுகின்றதே யொழிய உண்மையில் பாம்பாக மாறிவிடவில்லை

:):)

  • கருத்துக்கள உறவுகள்

விவர்த்த வாதத்தின்படி காரணம் காரியமாக மாறுவதில்லை. கயிற்றிலிருந்து பாம்பு தோன்றுகின்றது. கயிறு காரணம்; பாம்பு காரியம். கயிறு பாம்பாகத் தோன்றுகின்றதே யொழிய உண்மையில் பாம்பாக மாறிவிடவில்லை. இது போலவே பிரமமும் உலகாகத் தோன்றுகிறதே யொழிய உண்மையில் உலகாக மாறுதலடைய வில்லை. இது விவர்த்த வாதம்.

கயிறு என்பதை அறிவென்னும் அகல் கொண்டு அறியும்முன், அதை முற்றிலும் பாம்பாகவே எண்ணி உடலும் மனமும் பதறியது உண்மையே.

விவர்த்தவாதமென அத்வைதத்தையே குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். இனைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்

நம்றி ஐயா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.