Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் ஆதரவு புலிகளுக்குக் கிடைப்பதை தடுக்கவே தமிழப் பத்திரிகைகள் மீது பாய்ச்சல் - எல்லைகளற்ற நிருபர் அமைப்பு

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பதைத் தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் தமிழ்ப் பத்திரிகைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனப் பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் "எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயங்கரமான இடமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தனது 2007 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை அரசும் இராணுவமும் விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசியமென்றால் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு மத்தியிலும் கிளர்ச்சியை நசுக்குவதற்கு உறுதிபூண்டுள்ளார்.

பாதுகாப்புப் படையினர் ஆயுதக் குழுக்களின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் அச்சத்தை விதைத்து வருகின்றனர்.மேலும் சட்டவிரோதப் படுகொலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும், தனது மோசமான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் காட்டி அதனை அரசு நியாயப்படுத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பதைத் தடுக்கும் அரசின் தந்திரோபாயத்தினால் தமிழ்ப் பத்திரிகைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் கடும் போக்குத் தேசியவாதிகளைத் தனது சகாக்களாகக் கொண்ட அரசு, சுதந்திர ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தது.

இவ்வருடம் முழுவதும் அரசுத் தரப்பினரும் அதன் சகாக்களும் தமிழ் மக்களிற்கு சுயாதீனத் தகவல்கள் சென்றடைவதைத் தடுக்க முயன்றனர்.

இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் யாழ்ப்பாணம், பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக விளங்குகின்றது.

கொலைகள், கடத்தல், மிரட்டல் மற்றும் செய்தித் தணிக்கை காரணமாக யாழ்ப்பாணம், பத்திரிகையாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான இடமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் காணாமல்போன இரண்டு பத்திரிகையாளர்கள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. அரசு இதற்கான உறுதிமொழியை வழங்கியிருந்தபோதிலும் அது சரிவர நடக்கவில்லை.

2006 இல் "உதயன்' பத்திரிகை அலவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் குறித்தும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

தமிழ்க் குழுவொன்றைச் சேர்ந்த வள்ளுவன் என்பவரே இத்தாக்குதலின் சூத்திரதாரி என்பது அடையாளம் காணப்பட்ட போதிலும் அந்த நபர் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றார்.

"உதயன்' அலுவலகப் பணியாளர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஒருவருட காலமாக அலுவலகத்திலேயே தங்கிப் பணிபுரிகின்றார். அவர் வெளியே வரவில்லை.

நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை ஐம்பதிலிருந்து ஐந்தாகக் குறைந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பலர் அச்சத்தின் காரணமாக வெளியேறியுள்ளனர்.

யாழ். குடாநாட்டிலிருந்து பல வெளிநாட்டு செய்திச் சேவைகளும் வெளியேறியுள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் யாழ். குடாநாட்டின் பத்திரிகைகள் தமது பிரசாரத்திற்குத் தேவையான பொருட்களைப் பெறுவதிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்தன.

இப்படி இலங்கைப் பத்திரிகைகள் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.