Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை எதிர்கொள்ள ஒத்துழைப்பு நல்குங்கள்!-கடற்படைத் தளபதி புதுடில்லியில் தெரிவிப்பு

Featured Replies

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடில்லியில் வியாழக்கிழமை ஆரம்பமான இந்து சமுத்திர கடற்படை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்படைத் தளபதி, அங்கு செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்தார்.

சேது சமுத்திரத் திட்டம் இந்திய, இலங்கைக் கடற் பகுதிகளை சிறப்பாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும் எனக் குறிப்பிட்டு அத்திட்டத்தையும் அவர் வரவேற்றார்.

விடுதலைப் புலிகள் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்த அச்சுறுத்தலை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் அவர்கள் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறுவர் என வசந்த கரணாகொட குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்கு இந்திய இலங்கைக் கடற்படைகள் மத்தியிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைக் கடற்படைத் தளபதி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் பாதுகாப்புச் சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கும் கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய மாநாடுகள் முக்கியமானவை என்றும் வசந்த கரணாகொட குறிப்பிட்டுள்ளார்.

சேது சமுத்திரத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் அதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படாது என்றும் இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தத் திட்டம் இந்திய இலங்கை கடற்பகுதிகளை சிறப்பாக கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் பாதுகாப்புப் பிரச்சினைகள் உருவாகா எனக் கருதுகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரத்திட்டம் பூர்த்தியானதும் இந்தியக் கடற்படையும் எல்லைக்காவல் படையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும். மேலும் இது தொடர்பாக உருவாகக்கூடிய அச்சறுத்தல் எதனையும் எதிர்கொள்ள இலங்கையும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம், கடத்தல், கடற்கொள்ளை, ஆட்களை சட்டவிரோதமாக நாடுகளுக்குக் கடத்துதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக் கடற்படையும் இந்தியாவும் தத்தமது பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படைத் தளபதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியஇந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் கடற்படையினரின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளhர்.

பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், கடற்கொள்ளை போன்றவை கடல் வர்த்தகத்திற்கு மாத்திரமின்றி அப்பாவி மீனவர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் ஆபத்தானவையாக மாறியுள்ளன என இந்தியப் பிரதமர் அங்கு தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் கடற்பாதைகள் உலகின் முக்கிய தொடர்பாடல் மார்க்கங்களாகவும் மாறியுள்ளன. கொழும்பு, மும்பாய், மலேசியா போன்ற துறைமுகங்களில் ஏற்றியிறக்கப்படும் கொள்கலன்களின் அளவு பல மடங்குகளாக அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஸ்திரத்தன்மையும், அமை தியும் நிலவும் இந்துசமுத்திரம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது. நாடுகளின் கடற்பகுதிகளைப் பாதுகாக்க உதவுவதற்கு அது தயார் என்றும் இந்திய பிரதமர் அங்கு தெரிவித்தார்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.