Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் பலம் குறித்து முரண்பாடான பிரசாரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் பலம் குறித்து முரண்பாடான பிரசாரங்கள்

2/17/2008 9:57:14 AM

வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் குறித்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ போன்றோரும் அண்மையில் ஊடகங்களுக்கு தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

போர்முனையில் விடுதலைப் புலிகள் பாரியவலிந்த தாக்குதல்களைத்தவிர்த்து வருவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புலிகளை அழிப்பது தொடர்பான காலக்கெடுக்களும் இவர்களால் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கெடுவை விதிப்பது ஒருபுறம் நிகழ, இன்னொரு புறத்தில் முன்னுக்குப்பின் முரணான தரவுக ளையும் காலக் கெடுக்களையும் அரச மற்றும் படைத்தலைமை என்பன கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த ஜனவரி மாத முற்பகு தியில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு செய்தியாளர்களுக்கு வழங்கிய விருந்துபசாரத்தில் பேசும்போது "இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்துக்குள் புலிகளைத் தோற்கடித்து விடுவேன். அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் பிரச்சினையை விட்டுச் செல்லமாட்டேன்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடந்தவாரம் சிங்கள நாளிதழான "லக்பிம'வுக்கு இராணுவத்தளபதி வழங்கிய பேட்டியின் போது, "புலிகளைத் தோற்கடிப்பதற்கான காலஎல்லையை வகுக்க முடியாது. புலிகள் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு படை. அவர்களிடம் போர் தொடர்பான நிறைந்த பட்டறிவு இருக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து விடப் போவதாக கூறிய இராணுவத் தளபதி தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்த பின்வாங்குகிறார் போலத் தெரிகிறது. அதேவேளை "இந்தியா ருடே' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, "புலிகளை இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் முற்றாக ஒழித்துக்கட்ட முடியும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோன்றே ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷவும், புலிகளை தோற்கடிக்க ஒன்றரை வருட காலஅவகாசம் கொடுத்திருக்கிறார். அதுவரையில் பொருளாதார பின்னடைவுகள் தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் "லங்காதீப' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "புலிகளைத் தோற்கடிப்பதற்கு கால எல்லையை வகுக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கு 5 ஜனாதிபதிகள் முயன்றும் அது நடைபெறவில்லை. புலிகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது' எனக் கூறியிருந்தார். அதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சில வாரங்களுக்கு முன்னர் பூஸா கடற்படைத் தளத்தில் உரையாற்றிய போது "இந்த வருடத் துக்குள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடு வார்கள்' என்று சூளுரைத்திருந்தார்.

இங்கே புலிகளை அழிப்பது அல்லது தோற்கடிப்பதற்கு காலக்கெடுக்களை அறிவித்த அனைவருமே யுத்தத்தை நடத்துவதில் முன் னின்று செயற்படுபவர்களாவர். ஆனால் இவர்களுக்குள் யுத்தத்தின் போக்கு தொடர்பாகவும் தற்போதைய நிலைவரம் தொடர்பாகவும் ஒத்த கருத்து நிலவவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அத்துடன் புலிகளுக்கெதிரான போர் வெறும் இராணுவ தந்திரோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் மயப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணரமுடிகிறது. அதாவது, இராணுவத் தளபதிகள் சொல்வதற்கேற்ப அரசியல் தலைமைகள் முடிவுகளை எடுக்கின்ற வகையில்தான் தற்போதைய யுத்தம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

புலிகளுக்கு எதிரான யுத்தமானது வெறுமனே இராணுவ மயப்பட்டதொன்றாக மட்டும் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும் என்று தெரியவில்லை. ஏனெனில் புலிகளின் போர், அரசாங்கம் குறிப்பிடுவது போன்று ஒரு பயங்கரவாதப் போராட்டம் அல்ல. அரசியல் மயப்படுத் தப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை வெறும் இராணுவ உத்திகளுடனான திட்டமிடல் மூலம் தோற்கடித்துவிட முடியும் என்று நம்புவது முட்டாள்தனமானது.

முன்னர் நாடகம் ஒன்றில் இராணுவ ஜெனரலாக நடித்ததைத் தவிர தமக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எதுவும் தெரியாöதன்றும் அதனால் போரை வழிநடத்தும் பொறுப்பு படைத் தளபதிகளிடத்தில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவு

யாராலும் புலிகளை புரிந்து கொள்ளவோ அவர்களின் பலம் பலவீனத்தை அளவீடு செய்யவோ முடியாது.அதுதான் புலிகளின் பலம்.தற்காப்புதாக்குதல் தற்போது நடத்தபடுகின்றன என்பதற்காக வலிந்த தாக்குதல் நடத்தபடாது என அரசாங்கம் நினைக்குமானால் அது எவ்வளவு முட்டாள்தனம் என சந்திரிக்காவையும் அனுரத்தவத்தையையும் கேட்டால் புரியும் ஆனால் போர் என்பது லேசான விடயம் அல்ல அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகம் இராணுவம் இவ்வளவு கொல்லப்பட்டு விட்டது என சொல்லும் நாங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் தமது உயிர்களை குருதிகளை செலவளித்த எமதருமை சகோதர சகோதரிகளின் தியாகங்களையும் சற்று சிந்திப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.