Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேசிப்பேசி ஏமாற்றும் வித்தையோ.........

Featured Replies

13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது தமிழ் மக்கள் எவரும் மாகாணசபை நிர்வாகத்தை கோரவில்லை என்கிறது ஜே.வி.பி.

நிர்வாக ரீதியிலான சம உரிமை கொண்ட அதிகார பரவலாக்கமே நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் தேவையாகும் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவான மாகாண சபை அதிகாரங்கள் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்தை எட்டிப் பிடிக்க முடியாதவர்களுக்குமே மாகாண சபை அதிகாரங்கள் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் எம்முடன் பேசவிருக்கின்றது என்றும் கூறினார். ஆனாலும்இ அவ்வாறான மக்களை ஏமாற்றி பிழைக்கும் பேச்சுக்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஜே.வி.பி.க்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

எமது தாய் நாடான இலங்கையில் ஒரு சிறந்ததும் நேர்மைத் தன்மையானதுமான நிர்வாக சீரமைப்பு இல்லாததன் காரணத்தினாலேயே இன்று பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. இன்று வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றமை ஜே.வி.பி. க்கு நன்றாகவே தெரியும்.

அதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப் போவதாக கூறிக்கொண்டு மாகாணசபை அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்போகிறோம் என்று கூறுவது ஒரு பொய் நாடகமே அத்தோடு ஏமாற்று நடவடிக்கையும் கூட. தமிழ் மக்கள் எவரும் மாகாணசபை அதிகாரத்தை கோரி நிற்கவில்லை. அவர்களின் கோரிக்கைகள் என்னவெனில் நேர்மையான நிர்வாகத்தின் கீழ் சம உரிமையுடைய அதிகாரப் பரவலாக்கமே ஆகும்.

தமிழில் பதிலில்லை அரச நிறுவனங்களுக்கோ அல்லது ஜனாதிபதி காரியாலயத்திற்கு தமிழ் மகன் ஒருவர் தமிழில் கடிதம் எழுதியிருந்தால் அதற்கான பதில் கடிதம் சிங்களம் அல்லது ஆங்கில மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றது. இங்கு தமிழ் மகனுக்கான மொழி உரிமை மறுக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கு வரவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்நிலை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அந்தந்த பிரதேசங்களில் இல்லாமை ஒரு பிரச்சினையாகும்.

இதனைப் போலவே வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதானால் நாரஹென்பிட்டிக்குச் செல்ல வேண்டும்.

தமிழ் செனலில் கிரிக்கெட்

அரச தொலைக்காட்சி சேவையாக இதுவரை ஐ.ரி.என். ரூபவாஹினி என இரண்டு அலைவரிசைகளே இருந்தன. இந்த இரண்டு சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் அடிமட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன.

அண்மையில் தேசிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சேவையில் கிரிக்கெட் விளையாட்டுக்களையும் அரசாங்கத்தின் நிகழ்வுகளையும் அத்துடன் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புமே அதிகமாக இருக்கின்றன.

தமிழர்களுக்கென்று தொடங்கப்பட்ட தொலைக்காட்சியிலும் கூட அரசாங்கத்தின் சித்து விளையாட்டுக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இப்படி எல்லா வகையிலும் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகளே முக்கிய காரணமாகும்.

ஏமாற்றும் வேலை

நிர்வாகத்தில் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அதன் மூலமாக ஏற்பட்ட இந்த நாட்டினதும் விஷேடமாக தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கபோகின்றோம் என்று அரசாங்கம் தம்பட்டம் அடிப்பது இந்நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் எவரும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தியுள்ள திருத்த யோசனைகளை கோரவில்லை. அதன் மூலம் அமுல்படுத்தப்படவுள்ள மாகாண சபை அதிகாரங்களை விரும்பி நிற்கவில்லை.

அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமை தமக்கும் வேண்டும் என்பதேயாகும்.

டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒரு சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் பாராளுமன்றத்தை எட்டிக்கூடப்பார்க்க முடியாதுள்ளவர்களுக்குமே இந்த மாகாணசபை அதிகாரங்கள் தேவைப்படுகின்றன.

ஸ்திரப்படுத்தும் நோக்கம்

டக்ளஸைப் பொறுத்தவரை அவர் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. மாறாக தமது அரசியல் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே உள்ளது.

மேலும் தந்தைமார் பாராளுமன்றத்தில் தனயன்மார் மாகாண சபைகளில் என்ற கலாசாரம் இருந்து வருகின்ற நிலையில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் மாகாணசபைகளை ஒரு பயிற்சிக் கல்லூரியாகவே ஆக்கவும் நினைக்கின்றனர்.

இப்படிப்பட்ட போலித்தன்மையானதும் அநாகரிகமானதுமான அரசியலையே ஜே.வி.பி. வெறுக்கின்றது. அதன் காரணத்தினாலேயே 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்.

ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாம் நன்கு அறிவோம். இந்த நாட்டில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் அரசாங்கத்தின் நிர்வாகத்தன்மையை சீர் செய்ய வேண்டும். அதனூடாக மூவின மக்களுக்கான சகல அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும். அரசாங்கம் நினைப்பது போல் மாகாண சபை அதிகாரங்களைப் பரவலாக்குவதன் மூலம் இந்நாட்டில் எதனையும் சாதித்து விட ஜனாதிபதி மஹிந்தவால் முடியவே முடியாது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான சிக்கல்கள் அரசாங்கத்துக்கு தோன்றியுள்ளது. இதன் காரணமாக ஜே.வி.பி.யுடன் அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நன்மையில்லை 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்நாட்டின் பிரச்சினைக்கான தீர்வாகாது என நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். இதன் மூலம் தமிழ் மக்கள் எந்தவித நன்மையையும் அடையப்போவதில்லை என்பதையும் உறுதிபட தெளிவுபடுத்தியிருந்தோம்.

அப்படியிருந்தும் அரசாங்கம் எம்மோடு பேச்சு நடத்த விரும்பினால் அது விரும்பிக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான அவசியம் ஜே.வி.பி.க்கு இல்லை.

ஆதாரம் வீரகேசரி

ஒற்றையாட்சிக்குள் சமவுரிமை சாத்தியமில்லையே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.