Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் படையினர் சுற்றிவளைப்பு; 2,000 பொதுமக்கள் வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Feb 19 10:25:00 2008

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் படையினர் சுற்றிவளைப்பு; 2,000 பொதுமக்கள் வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியை நேற்று மாலை திடீரெனச் சுற்றிவளைத்த விசேட அதிர டிப்படையினர் சுமார் இரண்டாயிரம் பொது மக்களை வளைத்துப் பிடித்து பாடசாலை ஒன்றுக்கு கூட்டிச் சென்று விசாரணைக் குட்படுத்தினர்.

அக்கரைப்பற்றில் நேற்று அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடை யாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல் லப்பட்ட சம்பவத்தை அடுத்தே விசேட அதிரடிப்படையினர் பெருமெடுப்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற் கொண்டனர் என்று ஒரு தகவல் தெரிவித் தது.

ஆலையடிவேம்புப் பகுதிக்கு வந்த பெரும் எண்ணிக்கையான படையினர் அப் பகுதியைச் சுற்றிவளைத்து பெரும் தேடு தல் நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

இரண்டாயிரம் பேர்வரையிலான பொது மக்களை விசாரணைக்காக கோளாவில் பாடசாலைக்கு கூட்டிச் சென்றனர்.

அங்குவைத்து அனைவரும் தனித்தனியே தீவிர விசாரணைக்குட்படுத்தப் பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மக்கள் கைது செய்யப்பட்டனரா இல்லையா என்பது பற்றிய தகவல்கள் உட னடியாகக் கிடைக்கவில்லை.

விசேட அதிரடிப்படையினரின் இந்த நட வடிக்கையினால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. (சி)

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரைப்பற்றில் சுற்றிவளைப்புத்தேடுதல்

நேற்றைய தினம் அதாவது (19-02-200) செவ்வாய்க்கிழமை அன்று அம்பாறை மாவட்டம் அக்;கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ்க்கிராமங்கள் சில விசேட அதிரடிப்படையினரின் பாரிய சுற்றிவளைப்புத்தேடுதலுக்கு உட்பட்டுள்ளது. கோளாவில், பனங்காடு, ஆலையடிவேம்பு, மற்றும் அக்கரைப்பற்றின் 7ம்,8ம் பிரிவுகள் இத்த தேடுதல் வேட்டைக்கு உட்பட்டுள்ளது. நேற்றுக்காலையில் வீடுவீடாகச் சென்ற படையினர் வீடுகளைச்சோதனையிட்டதுடன் கோளாவில் பாடசாலைக்கு வயது வேறுபாடின்று ஆண்களை அழைத்துச் சென்றனர். அங்கு தனித்தனியாக புகைப்படமும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்த இரண்டு தலையாட்டிகள் முன்நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளார்கள். தலையாட்டிகள் அடையாளம் காட்டியதில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இன்னும் சிலரின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு பின்னர் வருமாறு கூறப்பட்டுள்ளது. நேற்றுகாலை 8மணியளவில் துவங்கிய இந்த நடவடிக்கையின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இரவு 8மணியளவிலே வீடுதிரும்பியதாகவும் தெரியவருகின்றது. இந்த நடவடிக்கையில் அரச அலுவலர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை. அவர்களும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி வெளியீடு : கிழக்கு- தமிழ் செய்தி நிறுவனம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.