Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டு மக்களையும் சர்வதே சமூகத்தையும் ஏமாற்ற முயற்சித்து அரசு இறுதியில் ஏமாறக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மக்களையும் சர்வதே சமூகத்தையும் ஏமாற்ற முயற்சித்து அரசு இறுதியில் ஏமாறக் கூடாது

[20 - February - 2008]

வ. திருநாவுக்கரசு

உலகின் 193 ஆவது நாடாக சென்ற வாரம் கொசோவோ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் யூகொஸ்லாவிய சமஷ்டி ஆட்சி அமைப்பிலிருந்து 1991 முதல் பிரிந்து சென்றுள்ள ஆறாவது நாடாக கொசோவோ அமையப்போகின்றது. ஏற்கனவே சுலோவீனியா, குறோசியா, மசிடோனியா, பொஸ்னியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகியவையே பிரிந்து சென்றுள்ள பிராந்தியங்களாகும். இன்று, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனேயே கொசோவோ தனிநாடாக பிரசவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சேர்பியா, மற்றும் இலங்கை அரசாங்கங்களே குறித்த தனிநாட்டுப் பிரகடனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேவேளை, அப்பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென ரஷ்யா மற்றும் சேர்பியா ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது இவ்விடயம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படுகிறது. இதனிடையில், சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக எதுவித எதிர்நடவடிக்கைகள் மேற்கொள்வதையோ அறிக்கைகள் விடுவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும், அது கொசோவோவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

வெளிநாட்டமைச்சின் அறிக்கை

மேற்படி சுதந்திரப் பிரகடனம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு விடுத்த அறிக்கையில் இப்பிரகடனம் சேர்பிய பெரும்பான்மை மக்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதென சாடப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு பேணப்பட வேண்டுமெனக் கூறும் ஐ.நா. சாசனம் மட்டுமல்லாமல், போல்க்கன்ஸ் பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளினதும் `இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படுமென மீள் உறுதி செய்யப்பட்டதும் 1999 ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்டதுமான 1244 இலக்கங்கொண்ட ஐ.நா.பாதுகாப்புச் சபையின் பிரேரணையும் மீறப்பட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

88% அல்பேனிய முஸ்லிம் மக்கள் மற்றும் சேர்பிய (6%) பொஸ்னிய (3%) ருமேனிய (2%) கோரானிய (1%) மக்கட் பிரிவினரைக் கொண்ட கொசோவோ சேர்பியப் படைகளின் கண்மூடித்தனமானதும் இனப்படுகொலையுடன் கூடியதுமான ஆக்கிரமிப்புக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் "நேற்றோ" படைகள் களமிறங்கி சேர்பிய படைகள் அகற்றப்பட்ட பின்னர் கொசோவோவின் தனிநாட்டுப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு பிரிந்து சென்ற 5 பிராந்தியங்களில் குறிப்பாக குறோசியா மற்றும் பொஸ்னியா மீதும் சேர்பிய மேலாதிக்க ஏதேச்சிகார ஆட்சியாளர் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தமை உலகறிந்த விடயமாகும்.

கொசோவோ பிரிவு - வரலாற்றுப் பின்னணியை இலங்கை அரசு ஆராயட்டும்

எனவே, இன்றைய கொசோவோ பிரகடனம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளிப்படுத்துவதைத் தவிர அதற்கு வேறு எந்த தெரிவும் இல்லை என்பது எவ்வித ஆச்சரியத்துக்கும் உரியதல்ல. அது ஒருவேளை இலங்கையிலும் பிரிவினைக் கோரிக்கைக்கு வலுவூட்டும் எனும் ஆதங்கம் இருப்பது போல் தெரிகிறது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு எனும் நிலைப்பாட்டிலேயே குறிப்பாக இந்தியா அடங்கலாக சர்வதேச சமூகம் இருக்கின்ற படியால் இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்பு பாரதூரமானதாயிருக்க வேண்டியதில்லை எனலாம். ஆனால், இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விடயமொன்று உண்டு. அதாவது, அன்று நீண்ட நெடுங்காலமாக முன்னாள் ஜனாதிபதி மார்ஷல் ரிட்டோவின் தலைமையில் கட்டிக்காக்கப்பட்டு வந்த யூகொஸ்லாவிய சமஷ்டி ஆட்சி அமைப்பானது அவரின் மறைவுக்குப் பின் சிதறுண்டு போனதற்கான வரலாற்றுக் காரணிகளை நிதானமாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடப்பாடாகும். அதுவே, ஐ.நா. சாசனத்தையும் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் பிரேரணைகளையும் மேற்கோள் காட்டுவதை விட பிரதானமானதாகும்.

மார்ஷல் ரிட்டோவின் மறைவுக்குப் பின், சில சதி முயற்சிகளை மேற்கொண்டு ஆட்சி பீடத்தினை தனதாக்கிக் கொண்டவர் தான் ஸ்லோப்டன் மிலோசெவிக். மிலோசெவிக் ஒரு கம்யூனிஸ்ட் வாதியாகவே தனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருந்தவர். எவ்வாறாயினும், காலப்போக்கில் சேர்பிய இனத்தைச் சேர்ந்த அவர் சேர்பிய பேரினவாதத்தினால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டார். அதன் பயனாக அவர் குறிப்பாக "போல்க்கன்ஸ்" பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களை அடுக்கி ஒடுக்குவதிலும் அழித்தொழிப்பதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். சொல்லும் தரமற்ற முறையில் முஸ்லிம்கள் வதைக்கப்பட்டனர். அதன் காரணமாகவே யூகொஸ்லாவியாவின் சமஷ்டி ஆட்சி அமைப்பு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.