Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை

[24 - February - 2008]

விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் சூளுரையுடன் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் தசாப்தகாலமாக தொடரும் மோதல்களின் இறுதி முடிவு தொடர்பாக முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அரசியல்வாதிகளும் `பயங்கரவாதிகளை' அழித்தொழிக்கப் போவதாக உறுதியளித்திருக்கும் அதேசமயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் வாபஸ் பெற்ற பின் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும், புலிகளை அழித்தொழிப்பது தொடர்பான இராணுவத்தின் வீரப் பேச்சுகளில் இப்போது தணிவேற்பட்டுள்ளது. `நாம் வெற்றிகண்டு வருகிறோம் என்பதை திட்டவட்டமாக கூற முடியும். ஆனால், அவர்களை முழுமையாக அழித்து விடுவோம் என்று ஒரு போதும் கூறவில்லை. நாம் ஒரு போதும் காலவரையறையை குறிப்பிடவில்லை. நாம் பயங்கரவாத அமைப்பொன்றுடனேயே போரிடுகிறோம். மரபு ரீதியான யுத்தத்ததை நடத்தவில்லை.' என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஏ.எவ்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றிய இராணுவம் வடக்கில் கடந்த வருடம் சண்டையை ஆரம்பித்தது. அங்கு மும்முனைகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற போதிலும் முன்னேற்றம் காண்பதில் தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

`எம்மால் அவர்களைப் பலவீனமாக்க முடியும். அதிகளவுக்கு அவர்களைப் பலவீனமாக்கியுள்ளோம். பின்னர் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள் அவர்களை முழுமையாக இல்லாதொழிப்பது சாத்திய மற்றது' என்று பிரிகேடியர் கூறியுள்ளார்.

எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் இல்லையென இந்த மாதம் அரசாங்கம் நிராகரித்திருந்ததுடன் ஒரு தலைப்பட்சமான தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருந்தது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முன்னரிலும் பார்க்க குறைவான அளவுக்கு தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

`காலக்கெடு, காலவரையறை என்பதை பார்த்துக் கொண்டு நான் யுத்தத்தை நடத்த வில்லை. 25 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் யுத்தத்தை மார்ச்சில் முடிவுக்கு கொண்டு வர முடியுமா?' என்று இராணுவத் தளபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், முன்னர் சரத் பொன்சேகா மீண்டும் மீண்டும் பலதடவைகள் காலவரையறைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார் 2008 நடுப்பகுதியில் யுத்தத்தில் வெற்றி பெற முடியுமென முன்னர் குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரன் விரைவில் மரணமடைந்து விடுவாரென சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர். இழப்புகள் தொடர்பான எண்ணிக்கை தொடர்பாகவும் குழப்பமான நிலைமை உள்ளது.

பாதுகாப்பு அமைச்சு தினமும் இறந்தோரின் எண்ணிகை தொடர்பாக அறிக்கை விடுகின்றதுடன் இராணுவம் வெற்றிநடை போடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், புலிகளின் உடல்கள் தொடர்பான சான்றுகள் வழமையாக காணாமல் போய் விடுகின்றன.

ஆயிரக்கணக்கில் புலிகள் கடந்த இரண்டு வருடங்களில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை புலி உறுப்பினர்களின் மொத்தத் தொகைக்கு சமனானதாகும்.

கடந்த பெப்ரவரி 10 இல் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக திருத்தத்தை சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் அல்லது மேலதிகமாக 2 ஆயிரமாக இருக்கலாமென தெரிவித்துள்ளார். டிசம்பரில் அவர் தெரிவித்திருந்த எண்ணிக்கையிலும் பார்க்க இது அதிகமானதாகும்.

1972 இற்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய யுத்தத்தால் களைப்படைந்திருந்த மக்களை இலக்குவைத்த பிரசாரப் போரின் அங்கமாக இது இருக்கக்கூடும். ஆய்வாளர்கள் மத்தியில் இது தொடர்பான சந்தேகங்கள் நிச்சயமாக உள்ளன. போர்முனையில் என்ன நடைபெறுகின்றது என்பது அரசாங்கத்தின் மூலமே அறியவருகிறது. திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அதிக எண்ணிக்கையான புலிகள் இறந்துவிட்டதாக இராணுவம் அறிவித்து வருகிறது. ஆனால், களத்தில் அத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு விடுவதாகவும் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும்போது இராணுவம் பின்வாங்கி விடுவதாகவும் இராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மும்முனைகளிலும் வெற்றி கொள்ள முடியாத எதிர்ப்பை புலிகள் கொடுக்கின்றனர் என்று பாதுகாப்பு விவகார ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.

புலிகள் வடக்கில் எதிர்த் தாக்குதலை மேற்கொள்வதுடன் தெற்கிலும் அவ்வப்போது கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்குமுனையில் அழுத்தங்களை குறைப்பதற்காக குண்டுத் தாக்குதல்களை புலிகள் கடந்த காலத்தில் நடத்தியமை குறித்தும் சுட்டிக்காட்டப்படுகிறது.

`நிலைமை மிக மிக நிச்சயமற்றதொன்றாக உள்ளது. இந்த மாதிரியான அரசாங்கமொன்றை நாம் ஒருபோதும் பார்த்ததில்லை. அரசாங்கத்தின் பிரசாரத்தை மட்டுமே சிங்களப் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. மக்கள் அதிகளவில் இராணுவத் தீர்விலேயே நம்பிக்கை கொண்டுள்ளனர்' என்று மாற்றுக்கொள்கை நிலையத்தின் பணிப்பாளரான சுனந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். `இது அரசியல் குருட்டுத்தனமான அரசாங்கம். இது சமாதானத்திற்கு போக முடியாது. இதற்கு வெற்றிகளே தேவை' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளை பலவீனப்படுத்தி அரசியல் தீர்வை அமுல்படுத்த முடியுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார்.

`இது நடக்குமென நான் நினைக்கிறேன். முதற்தடவையாக இதனை நான் நம்புகிறேன். இராணுவம் போரிடுவதில் தீவிரமாக உள்ளது' என்று முன்னாள் எம்.பி.யான சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். அத்துடன், அடுத்த மூன்று நான்கு மாதங்கள் இலங்கைக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ்வன்னிக் காட்டுக்குள் ஒரு மாவட்டத்திற்குள் மட்டும் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டால் இணக்கப்பாட்டை எட்டமுடியும். தமிழ் மக்களுக்கு நியாயமான முறையில் வழங்கப்பட்டதாக தீர்வு அமைய வேண்டியது அவசியம்' என்றும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

இதேவேளை, பேச்சுவார்த்தை மட்டுமே ஒரேவழியென்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ. எம்மால் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியுமென அரசாங்கம் நினைக்கிறது. இது மடமைத்தனம். புலிகளும் போரில் வெற்றியடைய முடியுமென நினைக்கிறார்கள் அதுவும் மடமைத்தனம் என்று கூறும் ஒஸ்ரின் பெர்னாண்டோ 2009 இலும் இராணுவம் போரை முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

`யுத்தமே வழிமுறையென நான் ஒருபோதும் நம்பவில்லை. முடிவில் இருதரப்புமே பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டியிருக்கும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2008/2/24/...s_page46442.htm

வடபோர் முனைகளில் 3 மாத காலமாக முன்னேற முயற்சித்தும் சிறிலங்கா இராணுவத்தினரால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என்று அனைத்துலக ஊடக நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.