Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயரும் ஆபத்து நேரலாம்! இப்படி ஐ.நா. மதிப்பீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில்

இடம்பெயரும் ஆபத்து நேரலாம்!

இப்படி ஐ.நா. மதிப்பீடு

இலங்கையின் தற்போதைய மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது இவ்வருடம் மேலும் மூன்று லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தயார்ப் படுத்தியும் வருகின்றது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கைக்கான பொதுவான மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டம் குறித்த அறிக்கையிலேயே இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008இல் இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் மோசமடையலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலும் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

இலங்கையில் வன்முறைகள் முடிவிற்கு வரும், யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படும், புதிய இடம்பெயர்வுகள் இடம்பெறா என்றெல்லாம் கருதுவது யதார்த்தத்திற்கு மாறான சாத்தியக்கூறுகள் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு மிதமான வேகத்தில் முன்னெடுக்கப்படும் யுத்தம் மற்றும் கடும் மோதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய களநிலையைக் கணக்கெடுக்கும்போது யாழ். மாவட்டத்தில் ஐம்பதாயிரம் பேரும், வன்னிப் பகுதியில் ஒரு லட்சம் பேரும் அந்தந்தப் பகுதிக்குள் இடம்பெயர்வர் என்றும்

மேலும் வன்னியின் பிற பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு ஒரு லட்சம் பேரும், மன்னாருக்கு ஐம்பதாயிரம் பேரும் இடம்பெயர்வர் என்றும் ஐ.நாவின் உத்தேச மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

இலங்கையில் பாதுகாப்புச் சூழல் தொடர்ந்தும் கவலைக்குரியதாகக் காணப்படுவதுடன், வடபகுதியில் மோதல் தீவிரமடைய இது மேலும் பாதிப்படையலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

மோதல் நடைபெறும் பகுதிகளிலும் அதற்கு வெளியேயும் மேலும் இடம்பெயர்வுகள் ஏற்படலாம்.

வன்முறைகள், கிளைமோர்த் தாக்குதல், விமானக்குண்டுவீச்சுகளுடன் கூடிய இடம்பெயர்வு போன்றன சமூகங்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அச்சம், அழுத்தம், நம்பிக்கையின்மை போன்றவற்றை ஏற்படுத்தும்.

2007 இன் பிற்பகுதியில் மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் மக்கள் மீளக்குடியேறினர். இந்தப் பகுதிகளில் சமூக உட்கட்டுமானம் காணப்படாததுடன் இவ்வாறு மீளக்குடியமர்ந்த பலர் உரிய ஆவணங்கள் இல்லாததால்மனிதாபிமான உதவிகளைப் பெற முடியாத நிலையிலுமுள்ளனர்.

மேலும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட 2,52,000 சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் அவற்றின் படையணிகளில் சேர்க்கப்படும் அபாயமும் உள்ளது.

இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும்.

பாதுகாப்புக் குறித்த பல கரிசனைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த உறுதியான நம்பத்தகுந்த தகவல்களைக் கண்காணித்துப் பதிவு செய்யவேண்டும்.

2008 இல் யாழ்ப்பாணத்திலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளிலும் உணவு நெருக்கடி மேலும் மோசமடையலாம். மோதல் தீவிரமடைந்து இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்படும்போது இத்தகைய சூழ்நிலை உருவாகும்.

இராணுவ நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளின் மீது நேரடியான மற்றும் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மோதல் நடைபெறும் பகுதிகளிலும், அதற்கு வெளியேயும் உள்ள மனிதாபிமானப் பணியாளர்களின் நிலை ஆபத்திற்குள்ளாகலாம்.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மற்றுமொரு முன்னுரிமை பெறவேண்டிய விடயமாக மருத்துவ, அவசர சுகாதார சேவைகள் காணப்படுகின்றன. சோதனைச் சாவடிகளும் போக்குவரத்துத் தடைகளும் அவசரமான சூழ்நிலைகளில் மருத்துவமனைகள் அம்புலன்ஸ்களைப் பயன்படுத்துவதைக் கடினமாக்கியுள்ளன.

அம்புலன்ஸ்களால் சேவையை வழங்க முடியாத சூழ்நிலைகள் மரணத்திற்கு வழிவகுக்கின்றன.

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மருத்துவ உதவியாளர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்; அம்புலன்ஸ்கள் வழங்கவேண்டும்.

இலங்கையில் புதிய இடம்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன.

2007 இன் இறுதிப்பகுதியில் மன்னாரின் முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,27,477 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, யாழ். குடாநாட்டின் எழுபதாயிரம் குடும்பங்கள் மிகவும் மோசமான தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்கின்றன. இவர்கள் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மீளக் குடியேறியவர்கள் மத்தியில்இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு, அதற்கு முன்னர் அரசு சாராத செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிரட்டல், துன்புறுத்தல் போன்றவற்றிற்குத் தீர்வு காணவேண்டும்.

பாதுகாப்புக் கரிசனைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், எரிபொருட்கள் மட்டுப்படுத்தப்பட்டமை போன்றவற்றால் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களின் எதிர்மறையான செய்திகள் காரணமாக ஐக்கிய நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளிற்கு எதிரான உணர்வலைகளும் அதிகரித்துள்ளன.

மனிதாபிமான அமைப்புகளின் நம்பிக்கைத் தன்மையை நியாயப்படுத்த முடியாத விதத்தில் இவை பாதித்துள்ளதுடன், சில பகுதிகளில் பணியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் துன்புறுத்துவதற்கும் பணம் பறிப்பதற்குமான கடத்தல்கள் என்பன தொடர்கின்றன.

கிழக்கிலிருந்து மோதல் மேற்கிற்கு நகர்ந்து தற்போது வன்னியின் வடபகுதியில் மையம் கொண்டுள்ளது. தொடரும் மோதல்கள் காரணமாக மக்கள் தமது பாரம்பரிய பகுதிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும், அரச கட்டடங்களிலும், உறவினர்களின் குடும்பங்களுடனும் தங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மோதல்கள் குறித்து எதிர்வு கூறமுடியாத நிலையும், மோதல் அரங்குகள் அடிக்கடி மாறுவதும், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளன. பணியாளர்களையும், வளங்களையும் பல பகுதிகளுக்கும் இவை விஸ்தரிக்கவேண்டியுள்ளன. உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இதனால் பாதிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்த சிமெந்து, இரும்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்ற சந்தேகத்தில் அவற்றின் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவையும் ஏனைய நெருக்கடிகளும் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதைப் பெரும் இக்கட்டில் ஆழ்த்தியுள்ளன.

யாழ். குடாநாட்டிற்கு தற்போது கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக மாத்திரமே செல்ல முடியுமென்பதால் ஐ.நாவின் நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கின்றன.

சிறுவர்களின் உயிர்கள் மற்றும் அவர்களது வளர்ச்சி மீது இந்தமோதல்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மூன்று லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன; சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன; ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இடம்பெயர்வுகள், மீன்பிடித்தடை, விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாமை போன்றவற்றால் மக்கள் நிவாரண உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைஅ திகரித்துள்ளது.

வன்னியில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் உணவு நிவாரணத்தையே நம்பியுள்ளனர்.

மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிட்டளவு தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரிகள் மாத்திரமேயுள்ளமையும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

யுத்தம், மக்கள் மீது செலுத்தும் தாக்கம் அதிகமாகவுள்ளது. அதிகளவு மனநோய் காணப்படுகின்றது.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sudaroli.com/pages/news/today/01.htm

ஓமோம் இப்படி நேரத்துடனே திட்டத்தைப் போடுங்கோ. நடக்கவிருக்கிறதைத் தடுக்காதேயுங்கோ. நல்லா ஆயுதங்களையும் கொடுங்கோ. திருப்பி அடிக்கும்போது சமாதானத்தைப்பற்றிக் கதையுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.