Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்

3/3/2008 11:33:55 AM

வீரகேசரி இணையம் - ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஜெனீவா சென்றுள்ளனர்.

இன்று ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத்தொடரில் இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகளும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்குமென அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான விசேட கண்காணிப்பாளர் மன்வேர் நொவாக்கின் அறிக்கை முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுமெனக் கூறப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல்போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் போன்றவற்றை நொவாக்கின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டும் எனத் தெரியவருகிறது.

அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நொவாக்கின் அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொலிஸார், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்று ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத்தொடரில் கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரியவருகிறது. அண்மையில் பிரித்தானியாவிலுள்ள மனித உரிமை அமைப்புக்களை சந்தித்த பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மலோக் பிரவுண், இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா கூட்டத்தொடரில் வலியுறுத்த இருப்பதாகக் கூறியிருந்தார்.

எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் மறுப்பார்கள் எனவே அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இன்று தொடங்கும் மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை

[03 - March - 2008]

ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையில் வடக்கு- கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல், கைதுகள், தடுத்துவைப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் குறித்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் கடுமையான அறிக்கைகளையும் கண்டன அறிக்கைகளையும் வெளியிடவுள்ளன.

இலங்கையில் நிலைமைகள் மிக மோசமடைந்து வருவது தொடர்பாக சித்திரவதைகள் மற்றும் ஆட்கள் காணாமல்போதல் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மல்பிரட் நொவாக் நீண்ட விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கெதிராக பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேசக் கூட்டணிகளால் கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிறவுண் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு அலுவலகமொன்றை அமைக்க வேண்டுமென்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் சிபாரிசை ஆதரிக்கும் வகையிலும் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் நாடுகளும் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மலோக் பிறவுண் கூறியுள்ளார்.

இதேநேரம், இந்தக் கூட்டத்தொடருக்காக இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளும் நேற்று ஜெனீவா சென்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தொடரில் இவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்குமென வும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2008/3/3/i...s_page46891.htm

கூடி கூடி கலைவதுதான் வாழ்க்கை.

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு தெரிவிச்சா பிறகு கைவிடுவதெண்டா பிறகு எதற்கு குற்றத்தை சுமத்துவான்.. இலங்கை தானா வந்து உண்மையை சொல்லுமெண்டா பிறகேன் மனித உரிமை அதிகாரிகள் அங்கபோய் ஆராய்ந்து திரிவான்..

பிறகு அந்த அறிக்கையை இலங்கை மருக்கும்... உது எல்லாம் வெறும் வெடிதான் போலகிடக்கு

சுவிஸின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 7வது கூட்டத் தொடர் எதிர் வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் போது இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்னளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வருட இறுதியில் இலங்ககைகு விஜயம் செய்த ஐ.நா.வின் சித்திரவதைகள் தொடர்பான விஷேட பிரதிநி மான்பிரெட் நொவெக் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது. இதே வேளை இலங்கையில் மனித உரிமை மீறல்க்ள தொடர்பில ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பிரித்தானியாவின் விஷேட பிரேரணை ஒன்றை கொண்டுவரும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உரிமை, கண்காணிப்பு அமைப்பான ஹியுமன் றைட்ஸ் வோச், சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, ஆசிய சட்டவள நிலையம் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.

நன்றி : வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.