Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்க முன்னதாக நிலமையை ஆராய்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

எங்களுடைய இணையத்தளங்களிலேயே தமிழ்படும்பாடு !

இலங்கையில் சிறுபாண்மை இனங்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது - அமெரிக்கா

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் அமெரிக்கா இராஜாங்க செயலகம்...

இலங்கையின் நடைபெறும் யுத்த சூழல் காரணமாக மனித உரிமைகளை மீறல்கள் அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அரசியற் படுகொலைகள்இ காணாமல் போதல்கள் மூலம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீறப்படுகின்றன.

அத்துடன் சிறுபாண்மை இனங்கள் மீது தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம் சிறார்களை படையணிகளில் இணைப்பதை விடுதலைப் புலிகள் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்தவருடம் தொடக்கம் 18 அகவைக்கு மேற்பட்டோரை விடுதலைப் புலிகள் அமைப்பில் விடுதலைப் புலிகள் இணைந்து வருதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை யுனிசெவ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பதிவு.கொம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிர்கால உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வந்துள்ளது.

3/13/2008 10:39:41 AM

வீரகேசரி இணையம் - இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கைக்கான உதவிகள் மற்றும் ஏற்றுமதி சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமைகளை அவதானிப்பதற்கு என மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

அலெக்சாண்டர் புளோகஸ் தலைமையிலான இந்த குழு கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இக் குழு ஒரு மாத காலம் இலங்கையில் தங்கியிருந்து நிலமையை ஆராயவுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் மற்றும் ஏற்றுமதிச் சலுகைகள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் பொருட்டு நாட்டின் நிலமைகளை ஆராய்ந்து வருகின்றோம் என அலெக்சாண்டர் புளோகஸ் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் பயன்படுத்தப்பட்டன என்பது தொடர்பாக தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிவதே எமது நோக்கம். எமது குழுவினர் வர்த்த திணைக்களம், ஏற்றுமதித் திணைக்களம், தொழிற்சாலை வர்த்தக அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இலங்கைக்கான ஜிஎஸ்பி ஏற்றுமதி சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வழங்காது விடலாம் என்ற கருத்துக்கள் வலுவாக தோன்றியிருந்தன.எனினும் இந்த சலுகைகளை மேலும் 3 வருடங்களுக்கு புதுப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் தீர்மானித்திருந்தது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சலுகைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏற்றுமதிகள் மூலம் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இலங்கை 2.9 பில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் ஐ.நாவின் மனித உரிமை சபை கூட்டத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டங்களிலும் ஏற்பட்டு வருவதுடன், இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் முயற்சித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகதுறை ஆணையாளர் பீற்றர் மன்டேல்சனுடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி சலுகைகளை நீடிப்பது குறித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

[ வியாழக்கிழமை, 13 மார்ச் 2008, 03:17.44 AM GMT +05:30 ]

இலங்கைக்கான உதவிகள் மற்றும் ஏற்றுமதி சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமைகளை அவதானிப்பதற்கு என மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

அலெக்சாண்டர் புளோகஸ் தலைமையிலான இந்த குழு கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இக் குழு ஒரு மாத காலம் இலங்கையில் தங்கியிருந்து நிலமையை ஆராயவுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் மற்றும் ஏற்றுமதிச் சலுகைகள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் பொருட்டு நாட்டின் நிலமைகளை ஆராய்ந்து வருகின்றோம் என அலெக்சாண்டர் புளோகஸ் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் பயன்படுத்தப்பட்டன என்பது தொடர்பாக தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிவதே எமது நோக்கம். எமது குழுவினர் வர்த்த திணைக்களம், ஏற்றுமதித் திணைக்களம், தொழிற்சாலை வர்த்தக அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இலங்கைக்கான ஜிஎஸ்பி ஏற்றுமதி சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வழங்காது விடலாம் என்ற கருத்துக்கள் வலுவாக தோன்றியிருந்தன.எனினும் இந்த சலுகைகளை மேலும் 3 வருடங்களுக்கு புதுப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் தீர்மானித்திருந்தது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சலுகைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏற்றுமதிகள் மூலம் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இலங்கை 2.9 பில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் ஐ.நாவின் மனித உரிமை சபை கூட்டத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டங்களிலும் ஏற்பட்டு வருவதுடன், இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் முயற்சித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகதுறை ஆணையாளர் பீற்றர் மன்டேல்சனுடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி சலுகைகளை நீடிப்பது குறித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.