Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு அளித்த இந்திய ரேடார்களை வாபஸ் பெறுக:வைகோ

Featured Replies

சென்னை : இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு தனது தாக்குதல்களை தொடருவதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், ராணுவ தளவாட பொருட்களையும் வழங்கி உள்ளது என்றும், இந்த செயல்பாடு, அணுகுமுறை அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும் விதைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு செய்யும் எந்தவிதமான ராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ள வைகோ, இலங்கை கடற்படையின் தவறான தகவல்களையும், பொய்யான அறிக்கைகளையும் ஆமோதித்து இந்திய கடற்படை அதிகாரிகள் அடிக்கடி செய்தி வெளியிடுவதாக சாடியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது நடந்த பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இலங்கை கடலோரத்தில், இலங்கை நீர்பரப்பில் நடந்தவை என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது தனக்கு பெரும் மன வேதனையை அளிக்கிறது என்று கூறிய அவர், பெரும்பாலான தாக்குதல்கள் சர்வதேச நீர்பரப்பில் நடைபெற்றனவே தவிரஇ இலங்கை நீர்பரப்புப்பகுதியில் நடந்தவை அல்ல என்றும், அண்மையில் கச்சத்தீவு அருகே ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது; கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி அந்த இடத்தில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்கள் கவனக் குறைவால் இலங்கை நீர்பரப்புக்கு உள்ளே சென்று விட்டாலும் அவர்களை சுட்டுக் கொல்ல இலங்கை கடற்படைக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையிலிருந்து இந்திய அரசு தவறி இருப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும் அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதை குறிப்பிட்டு 9.12.2007, 18.12.2007, 25.1.2008 ஆகிய தேதிகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதி இருந்தார்.

அதற்கு 5.3.2008-ம் தேதியிட்ட கடிதத்தில் வைகோவுக்கு பிரதமர் பதில் அனுப்பி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பதில் அளித்து பிரதமருக்கு இந்தக் கடித்ததை வைகோ எழுதியுள்ளார்.

நன்றி யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

அண்ணா வைகோ!

அதை மண்வெட்டியாக்கி, இப்ப என்னவாகியிருக்கோ தெரியவில்லை.

கொடுக்க முன் தடுக்க முடியவில்லை கொடுத்தை வாங்க சொல்கிறார்கள்

கேவலம் ஆகிவிட்டார்கள் ஈழத்தமிழர் இவர்களுக்கு.....

கொடுக்க முன் தடுக்க முடியவில்லை கொடுத்தை வாங்க சொல்கிறார்கள்

கேவலம் ஆகிவிட்டார்கள் ஈழத்தமிழர் இவர்களுக்கு.....

ஈழத்தமிழருக்காக எந்த பலனையும் எதிர்பார்க்காது குரல் கொடுப்பவர்கள், ஆண்டுக் கணக்கில் சிறைக் கூண்டிற்குள் வாழ்ந்தவர்கள் எல்லாம் கேவலமாகப் போய்விட்டார்கள் இந்த தாயகப் பற்றாளர்களிற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.