Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட அதிரடிப்படை முகாம்கள் மாற்றம் பிள்ளையான் குழுவின் அழுத்தம்தினால் அல்ல - பொலிஸ் மா அதிபர்.

Featured Replies

பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடி எடுக்கபட்ட முடிவினை அடுத்தே கிழக்கிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அமைக்கபட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்;களை அகற்றுமாறு யாருமே அழுத்தங்களைக்; கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் பிள்ளையான் குழுவின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :

சில கட்சிகள் கூறுவசது போல பிள்ளையான் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே விசேட அதிரடிப் படையினரின் முகாம்கள் மாற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாகவே மறுக்கின்றேன். பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்தாலோசித்ததன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவினையடுத்தே முகாம்கள் இடம் மாற்றப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கை என்பதுடன் பாதுகாப்புப் படைகள் தொடர்பான தகவல்களை வெளியிடும் சூழ்ச்சியான முயற்சியுமாகும்.

எதிர்கால நடவடிக்கை தொடர்பான தூர நோக்கின் அடிப்படையில் பாதுகாப்பு படை நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது பாதுகாப்பு முக்கியஸ்தர்களின் கடப்பாடாகும். அதனடிப்படையிலலேயே அதிரடிப்படை முகாம்கள் மாற்றப்டுகின்றன.

கிழக்கிலிருந்து அகற்றப்படுகின்ற அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த அதிரடிப்படையினரில் 25 சத வீதமானோர் வெலிக்கந்தை, யக்கவௌ, பதவிய ஆகிய பிரதேசங்களிலுள்ள முன்னரங்க நிலைகளிலும் கெப்பத்திகொல்லாவை பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறினார்.

நன்றி வீரகேசரி

பிள்ளையான் ஒரு "ஜோக்கர்"

அம்புட்டுத்தா எங்கிய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர் குத்தினால் என்ன அரிசி ஆனால் சரி தானே.

Edited by samiyar

நாளைக்குத்தான் தெரியும் திருக்கோவில் நிலவரம்

:wub::):D:lol::(

  • கருத்துக்கள உறவுகள்

:lol: வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு தான் எதிர் இல்லை என்றும், கிழக்கு மாகாண மக்களுக்காக தான் பாடுபடப்போவதாகவும், அவ்வாறு கிழக்கு மக்களுக்கு துன்பம் விளைவித்து வந்த சில முகாம்கள தாம் அழுத்தம் கொடுத்து மூடியதாகவும் பில்லையான் குழு தெரிவித்திருக்கிறது.

அரச படைகளுக்கு தலையாட்டி வேலை பார்த்த இவர்களின் சொல் கேட்டு அரசு படை முகாம்களை மூடுவதென்பது கனவு. அம்பாறையிலும், கொக்கட்டிச்சோலையிலும் அடிவாங்கும் தனது தாக்குதல் பயிற்சி பெற்ற பொலீசு படையை காப்பாற்றும் நோக்குடன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி ராணுவத்தை அப்பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த அதிரடிப்படை வீரர்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதியான மணலாற்றில் காவல் கடமைகள் கொடுக்கப்பட்டிருக்கு. அங்கும் அடி வாங்கினால் இனிக் கொழும்புதான் !!!!!

  • தொடங்கியவர்

வீரகேசரி நாளேடு - வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றவோ அங்கு தேர்தலொன்றை நடத்துவதற்கோ அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை அரசாங்கம் வாக்குகளை கொள்ளையடிக்க போகின்றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதம் தோற்கடிப்பதற்கு முன்னரே அதிகார பகிர்வினை முன்வைத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மாகாண சபையை ஏற்படுத்துவதற்கு முற்சிப்பது அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவாகும். அவ்வாறான நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இது பிரிவினை வாதத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பி அரசியல் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை. சர்வ கட்சி ஆலோசனை குழுவின் யோசனைகளின் பிரகாரமும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அமைவாகவும் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அபாயகரமானது மட்டுமல்லாது பிழையான அரசியல் முடிவாகும் இவ்வாறான முடிவினால் இறுதியில் பிரிவினைவாதிகள் சக்தியடைவதே பெறுபேறாக அமையும். தேசப்பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏமாந்து அரசாங்கம் மாகாண சபையை ஏற்படுத்துமாயின் அதற்கெதிராக மாகாண சபைக்குள்ளேயே பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்காக போராடவேண்டி ஏற்படும். அதனால்தான் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடவுள்ளது. மாகாண சபைக்குள்ளேயே சென்று பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலில் பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் அரசாங்கம் போட்டியிட்டதுடன் மாநகரசபையிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கம் மாகாண சபையில் போட்டியிடுமாயின் அதிகாரத்திருக்கு வருவதற்காக அதிகளவான சாத்தியகூறுகள் பிரிவினைவாதிகளுக்கே இருக்கின்றன.

புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றியது முதல் வன்முறைகளற்ற உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்திமுடிக்கப்பட்டமை வரை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பங்கு அளப்பறியதாகும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு படையினர் தங்களது உயிர்களை இழந்துள்ளரே தவிர அமைச்சர் பிரதியமைச்சர்கள் இழக்கவில்லை.

ஜே.வி.பி நீதிமன்றம் சென்றதன் மூலமாகவே ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் 1987 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்கப்பட்டது. அதற்கு பின்னரே கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டது இவ்விரண்டுமே மஹிந்தவின் நிர்வாகத்தில் செயற்பாட்டின் மூலமாக ஏற்படுத்தப்பட்டதல்ல,ஜே.வி.பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.