Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் 12 ஆண்டுகள் தேவைப்படும்- ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஜெய்லி

Featured Replies

வடக்கில் முன்னெடுக்கபட்டகின்ற யுத்தம் தொடர்பான உண்மையான நிலைமைகள் மற்றும் யுத்த கள தகவல்களை தெற்கு மக்கள் தெரிந்து கொள்வதை அரசு தடுத்தது வருகின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தல் இருப்பதாக தெரிவிக்கின்ற கிளிநொச்சியை பைப்பற்றி பிரபாகரனை அழிதொழிப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கோணல் ஜெய்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.

வடக்கில் நான்கு திசைகளிலும் நிலை கொண்டிருக்கின்ற படையினர் இராணுவகட்டுப்பாடற்ற பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் தங்களது பழைய நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றனர். இவ்வாறான நோக்கமில்லாத யுத்தத்தின் மூலம் கிளிநொச்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்னும் 12 ஆண்டுகள் தேவைப்படும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களுடன் நடத்தபட்ட சிநேகபூhவமான ஒன்று கூடலில் வடக்கில் இடம் பெறும் யுத்தம் என்ற தொனிப்பொருளில் கலந்து கொண்டு நிலைமைகளை விளக்கி உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

மேலும் நான் யுத்த களத்திலிருந்தவன் என்பதனால் யுத்தம் பயங்கரமானது என்பது மட்டுமல்ல யுத்த களத்தில் வெற்றி தோல்வி இரண்டுமே கலந்திருக்கின்றது. கிழக்கில மாவிலாறு அணை மூடப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரை கொண்டு அந்த அணையைத் திறந்த அரசு மனிதாபிமான நடவடிக்கை;காகவே இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர் என தெரிவித்தது. அதன் பின்னர் கிழக்கில் பல பிரதேசங்களை கைப்பற்றிய இராணுவம் தொப்பிகலையையும் கைப்பற்றியது.

தொப்பிக்கல்லை இராணுவத்தினர் கைப்பற்றிய போது அடர்ந்த காட்டு பிரதேசமான தொப்பிக்கலையை கைப்பற்றப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தமையினால் நாட்டில் பெரும் குழப்பமான நிலைமையே ஏற்பட்டது. எனினும் 40 கிலோ மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட தொப்பிக்கல் மக்கள் வாழக்கூடிய அல்லது நகரங்களை கொண்ட பிரதேசமல்ல அது அடர்ந்த காட்டு பிரதேசமாகும்.

இராணுவம் தொப்பிக்கலையை கைப்பற்றியதன் மூலமாக புலிகளை தொப்பிகலை காட்டிற்குள் நுழையவிடாது இராணுவத்தினர் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தை பாதுகாத்தக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

கிழக்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள போதிலும் அங்கிருந்து நூற்றுக்கு நூறுவீதம் பயங்கரவாதம் விரட்டியடிக்கப்பட்டதாக கூற முடியாது.வடக்கில் பல வழிகளில் யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்த நடவடிக்கையின் போது சத்தம் முக்கியமானது எனினும் வடக்கில் யுத்தத்தை விடவும் தெற்கின் சத்தமே அதிகரித்து காணப்படுகின்றது. யுத்தம் தொடர்பான தெற்கின் சத்தம் வடக்கில் இடம் பெறுகின்ற யுத்தம் தொடர்பான உண்மையான தகவல்களை தெற்கு மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற அரசின் தந்திரோபாய நடவடிக்கையாகும். வடக்கு யுத்தத்தைப் பொறுத்த மட்டில் நான்கு புறங்களிலும் இராணுவத்தினரை அனுப்பியுள்ள அரசு ஒரு கொள்கையில்லாது போர் நடவடிகன்கைகளை முன்னெடுத்து வருகிறது.

மணலாறு, முகமாலை ஆகிய முன்னரங்க பகுதிகளில நிலைகொண்டிருக்கின்ற படையினர் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு சென்று தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு பழைய நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றனர்.

ஓமந்தையிலிருந்து பல கிலோ மீற்றருக்கு அப்பால் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்க, கிளிநொச்சி கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதாகவும் 2008 ஆம் ஆண்டிற்குள் கிளியை கைப்பற்றிவிடுவதாகவும் தெற்கு மக்களை அரசு ஏமாற்றி வருகின்றது. சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலிருக்கின்ற கிளியை இவ்வாண்டிற்குள் கைப்பற்ற முடியாது.

பிரபாகரனை அழிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கதிற்காக, திட்டமிடாமல் முன்னெடுக்கப்படுகின்ற யுத்த நடவடிக்கiயின் மூலமாக கியை கைப்பற்ற வேண்டுமாயின் அதற்கு ஆகக் குறைந்த 12 ஆண்டுகள் தேவைப்படும்

விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து பிரபாகரனை கொன்றொழிப்பதன் மூலமாக மட்டும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரமுடியாது. அரசினால் முன்னெடுக்கபடுகின்ற இந்த யுத்தத்தின் மூலமாக நாளோன்றிற்கு ஆகக் குறைந்து 10 புலிகள் கொல்லப்படவார்களாயின் நாளோன்றிற்கு 10 பேர், புலிகளின் இயக்கத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

யாழ். குடாநாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போதும் அங்கு வாழ்கின்ற சுமார் ஐந்து, ஆறு இலட்சம் மக்கள் அரசுடன் இல்லை. ஏ-9 வீதி மூடபட்டதன் பின்னர் அம்மக்கள் பசி பட்டினியில் வாடுகின்றனர். புலிகளை முற்றாக அழிப்பதற்கான யுத்தம் என்று கூறப்படுகின்ற போதிலும் இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமாகும். புலிகள் மாவிலாறு அணையை மூடிய போது மனிதாபிமான நடவடிக்கையின் மூலமாக அதனைத் திறந்த இராணுவத்தினர், புலிகள் ஏ-9 வீதியை மூடிய போது அதனை ஏன் திறக்கவில்லை? மக்கள் மனதை வென்றெடுக்காமல் ஒருபோதும் யுத்தத்தை வென்றெடுக்க முடியாது.

துட்ட கைமுனு வரலாற்றை பேசிக் கொண்டிருக்கின்ற சிங்ளவர்கள் யுத்தத்தை விரும்புகின்றனர். அதற்கு பிரிவினை வாதிகள் துணை போகின்றனர். பிரபாகரனின் கால் அகற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியை அடுத்து தெற்கில் பட்டாசு கொளுத்தப்பட்டது. அவ்வாறான பிரிவினைவாத மன நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

இனப் பிரச்சினை இல்ல என்று கூறப்படுவதில் எவ்விதமான உண்மையுமில்லை. கிராமங்களிலுள்ள பெட்டிக்கடையில் தேநீர் பருகிக் கொண்டிருக்கின்ற இளைஞர்கள் அரசிற்கு எதிராக துப்பாக்கி தூக்குவோம் என்று சிந்திக்கமாட்டார்கள் அதே போல் பயங்கரவாதிகள் வெறுமனமே உருவாகமாட்டார்கள். ஒரு மக்கள் பிரிவினருக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அது புரட்சியாக உருவாகி பின்னர் யுத்தமாக மாறும் என்பதனால் நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்பது முற்றிலும் தவறானதாகும். யுத்ததின் மூலமாக புலிகளை தோற்கடிக்க முடியாது என்றில்லை, எனினும் யுத்தத்திலிடுபட்டிருக்கின்

அடிரா சக்கை !!

12 ஆண்டுகள் சண்டைபிச்சிங்களெண்டால், நாங்களுமில்ல, நீங்களுமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஆண்டுகளை நிர்ணயித்து திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 12 வருடங்களுக்கு சண்டை பிடிக்கிறமாதிரி சரத் பொன்சேகா திட்டம் போடவில்லை. அவருடைய பதிவிக்காலம் முடியமுன்னர் புலிகளை ஒடுக்க முடியும் என்று சொல்லியிருந்தார். சிலவேளை அவர் இன்னும் 12 ஆண்டுகள் இராணுவத் தளபதியாக இருக்கிற திட்டமோ தெரியவில்லை! :D

தொப்பிக்கலவைப் பிடித்தது வீண் விரயமல்லவென்றும் அங்குதான் காட்டுப் பகுதிச் சண்டைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் இக்பால் அத்தாஸ் எழுதியிருந்தாரே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.