Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் உயர் பதவிகளில் இல்லை ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உயர் பதவிகளில் இல்லை ஏன்?

ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை மாணவர்களை விட மாணவிகளே சிறந்த முறையில் படிக்கின்றனர்.

பொதுத் தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேறுகின்றனர்.

மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் உள்ளனர்.

இவை எல்லாம் மகிழ்ச்சி அடைய கூடியவைகள் தான்.

இந்த திறமைகள், புத்திசாலித்தனம் எங்கு சென்று அடைக்கலம் ஆகின்றன.

பெண்கள் ஏன் தொழில் வர்த்த நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதில்லை.

நாம் ஏற்றுக் கொண்டாலும், மறுத்தாலும் அத்தி பூத்தார் போல் 3.3 விழுக்காடு பெண்களே உயர் பதவிகளில் உள்ளனர்.

இது பெண்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது கற்பனையான தகவல் அல்ல.

அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு நடத்திய ஆய்வில் இருந்து தெரிந்த தகவல்தான்.

இந்த அமைப்பு “ கல்வியில் உயர்நிலையில் உள்ள பெண்கள் ஏன் உயர் பதவிகளில் இல்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வு மொத்தம் 1053 பெண்களிடம் நடத்தப்பட்டது. அதில் 222 பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். 333 பேர் நகரங்களையும்,468 பேர் பெரு நகரங்கலையும் சேர்ந்தவர்கள்.

இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து பணிக்கு செல்லும் பெண்களில் 78.9 விழுக்காட்டினர், அவர்கள் ஓய்வு பெறும் வரை கீழ் நிலை பதவிகளிலேயே உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. குடும்ப பொறுப்புகளால் சிறந்த முறையில் பணியிடத்தில் பொறுப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை என்று ஆய்வில் பங்கேற்ற 73 விழுக்காடு பெண்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பெண்கள் நடுத்தர பதவிகளில் அல்லது உயர் பதவிகளில் இருந்தாலும், அவர்கள் கூறும் ஆலோசனை, புதிய முயற்சிகளுக்கு இயக்குநர், மேலாண்மை இயக்குநர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் உரிய அனுமதி கொடுப்பதில்லை. இந்த ஆலோசனைகள், அதே பதவிகளில் உள்ள ஆண்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட சிறந்ததாக இருந்தாலும் கூட, பெண்களின் முயற்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை.

நிறுவனங்களில் பெண்கள் சிறப்பாக பணியாற்றினாலும், அவர்கள் ஆண்களாக உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து குறைந்த அளவு அங்கீகாரமே பெறுகின்றனர். அத்துடன் பெண்களுக்கு பதவி உயர்வும் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என ஆய்வின் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் இருந்து பணியில் உள்ள பெண்கள் உற்சாகம் இல்லாமல், மனச்சோர்வு அடைகின்றனர். நிர்வாக முறைகள் பெண்களை முன்னேற விடாமல்,தடைகற்களை ஏற்படுத்தும் அமைப்புகளாக இருக்கின்றன என பணியில் உள்ள பெண்கள் கருதுவதாக தெரியவந்துள்ளது.

இதே மாதிரியான முடிவே, மற்றொரு அமைப்பு நடத்திய ஆய்வில் இருந்தும் தெரியவந்துள்ளது.

“ இந்திய நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு பற்றிய ஆய்வறிக்கையில்” இருந்து, இந்தியாவில் தொழில் வர்த்தக நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு போன்ற உயர் அதிகார அமைப்புகளில் பெண்கள் குறைந்த அளவிலேயே பங்கேற்றுள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில்,90 விழுக்காடு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களே உள்ளனர்.

நிறுவனங்களின் இயக்குநர் குழுவில், இரு பாலரும் இடம் பெற்று இருப்பது நிர்வகிப்பதற்கு மிக அவசியம்.

இந்திய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெற்று இருப்பவர்களில்,

மிக குறைந்த அளவே பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர். ஆண் இயக்குநர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆண்களுக்கு இணையாக பெண்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று பல துறைகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கடுமையாக உழைப்பதுடன், பல இக்கட்டான தருணங்களில் பதட்டப்படாமல், தெளிவான முடிவு எடுக்கும் ஆற்றலும் படைத்தவர்கள்தான்.

பல நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, ஸ்கான்டிநேவியா பிரதேச நாடுகளில் அரசின் உயர் மட்டத்தில் மட்டுமல்லாமல், தனியார் வர்த்தக தொழில் நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளில் பெண்கள் பங்கேற்று உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் நிலைமை திருப்திகரமாக இல்லை என்பது ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆரம்ப பள்ளி முதல் கல்வியில் சிறந்து விளங்கும் பெண்கள், அதற்கு பிறகு சிகரங்களை எட்ட முடியாமல், எங்கோ ஓரமாக ஓதுங்கி போவது ஏன்?

# இதற்கு காரணம் பெண்களா

# குடும்ப பொறுப்புகளா

# வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதா

பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மற்றவர்களின் கருணையால் இடஒதுக்கீட்டின் கீழ் தான் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் வர முடியமா

இதற்கு காரணம் சமூகத்தின் சரி பாதிக்கும் அதிகமாக உள்ள பெண்கள் அவர்களின் சக்தியை உணராமல் இருப்பது தான் காரணமா ?

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

thanks webulagam.

  • 4 weeks later...

இந்தியாவில என்னமாதிரியோ தெரியாது...

இஞ்ச போற வாற இடமெல்லாம் பெண்கள் ஆட்சி தாரளமா நடக்கிது. தமிழ் ஆக்கள் (பெண்கள்) உயர்பதவிக்கு வரமுடியாததற்கு ஒரு காரணம் அவர்கள் கலியாணமாகி இருந்தால் பெரும்பாலும் புருசன்மாருக்கு தங்களவிட மனுசு எழும்பிறது பெரிய ஆளா வாறது விருப்பம் இருக்காது. இதை சுயநலம் அல்லது தாழ்வு மனப்பான்மை எண்டு சொல்ல ஏலாது, ஆனா பலர் மனைவி மீது அதிக அன்பு வச்சு இருக்கிறதாலதான் இதுக்கு பயப்படுறீனம். தங்கட மனுசிய யாராவது கொத்திக்கொண்டு போயிடுவாங்கள் எண்டுற பயம் அடிமனதில. இத சந்தேக புத்தி எண்டும் சொல்ல ஏலாது. அளவுக்கு மிஞ்சின அன்பு எண்டு சிலது சொல்லலாமோ தெரியாது.

பல வீடுகளில நானே பார்த்து இருக்கிறன் மனுசி யாராவது ஆம்பளைகளோட தொடர்பு கொள்ளுறது சும்மா போனில கதைக்கிறதே பல புருசன்மாருக்கு வயித்தில புளியக் கரைச்சு ஊத்திறமாதிரி இருக்கும். இதை விரும்ப மாட்டார்கள். இந்தநிலமையில உயர்பதவிய எல்லாம் பெண்கள் நினைச்சுப் பார்க்க முடியுமா?

புருசன்மார் புரிந்துணர்வு, அண்டஸ்டாண்டிங்க் உள்ள ஆக்களாக இருந்தால் அப்படியான பெண்களுக்கு பிரச்சனை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
:lol::):)

பள்ளிக்காலத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை படிப்பது பெற்றோருக்காகா (சமுதாயத்திற்காக), பின்னர் உயர் பதவியை அடையாமல் இருப்பதும் அதே சமுதாயத்திற்காக என சொல்லலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.