Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உறவுகளும் பெண்களை புரிந்து கொள்ள...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். படித்து தெரிந்து.. புரிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் ஆண்களே...

* பெண்களுக்குப் பிடிக்காதவைகளில் முக்கியமாக முதலிடத்தைப் பிடிப்பது ஆண்களின் அருவறுக்கத்தக்க பார்வை. சில ஆண்கள், பெண்களை பார்க்கும் பார்வையே புது மாதிரி யாக இருக்கும்.

அதாவது ஏதோ வேறு உலகில் இருந்து வந்தவர்கள் போல்... பெண்களை அப்பத் தான் புதியதாக பார்ப்பது போல்... பார்ப்பார் கள். சிலரோ... பெண்களின் அங்கங் களையே உற்று உற்று பார்ப்பார்கள். இப்படி யான `பார்வையாளர்களை` கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாகிவிடும்.

ஷாப்பிங், ஆபீஸ், வீட்டுக்கு அருகில், பொது இடத்தில் இந்த பார்வை பார்ப் பவர்களை பார்த்தவுடன் தெரிந்து அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார்கள் பெண் கள்.

அதேபோல், கையில்லாத ஜாக்கெட் (ஸ்லீவ் லெஸ்) போட்டிருக்கும் பெண்கள், எதை யாவது வாங்கும்போதோ... கையில் இருக் கும் பையை வேறு கைக்கு மாற்றும் போதோ... `அந்த` இடத்தை பார்ப்பதை ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மேலே... அதாவது உயர்ந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே செல்லும் பெண்களைப் பார்ப்பது... கீழே உட்கார்ந்திருக்கும் பெண்களை பார்ப்பது என்பது பெண்களுக்கு பிடிக் கவே பிடிக்காது.

சில சிறுமிகளுக்கு உடல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இவர்களையும் சிலர் விட்டு வைப்பதில்லை. அவர்களையே உற்று நோக்கும் `கண்ணியவான்`களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே அவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

என்னதான் புடவை என்றாலும், கவர்ச்சி... அழகு என்று எல்லாவற்றிலும் சேலைக்கு முக்கிய பங்குண்டு. 20 வயதில் புடவை கட்ட ஆரம்பிக்கும் பெண்கள் கூட... சில ஆண்களின் அருவருப்பு பார்வை பொறுக்காமல் மீண்டும் சுடிதாருக்கு மாறி விட்டார்கள் என்று தெரிவிக்கிறது ஒரு சர்வே!

இதில் சில ஆண்கள் வேறுமாதிரி. சிலரை தொந்தரவு செய்வதாக நினைத்து பின் தொடர்ந்து சென்று பார்ப்பார்கள். இப்படிப்பட்ட அருவறுப்பு பார்வை கொண்ட ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது என்பதை புரிந்து கொள்ளும் ஆண்களே... இனியாவது இப்படி பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

* அடுத்து... பெண்களை உரசுவது, தட்டுவது... இடிப்பது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடும் ஆண்களை, 88 சதவீத பெண்களுக்கு பிடிப்பதில்லை! பஸ், ரயில், தியேட்டர், திருவிழா போன்ற கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பெண்களை உரசும் ஆண்களை சுத்தமாக பிடிக்காது.

சமீபத்தில் கூட விமானத்தில் அருகில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரி ஒருவர் மாட்டிக் கொண்டார். பஸ்சில் செல்லும் போது சிலர் வேண்டுமென்றே அதற்கான சூழலை உருவாக்கி பெண்களை இடிப்பார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் இப்படிப் பட்ட அனுபவங்களை பெறாத பெண்களே இருக்க முடியாது! அந்தளவிற்கு இடிமன்னர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறுகிறது, ஒரு ரகசிய சர்வே!

பெரும்பாலும் இப்படி சில்மிஷங்களில் ஈடுபடும் ஆண்களை பெண்கள் தட்டிக் கேட்ப தில்லை. இதனாலும் இந்த கொடுமை அதிகரித்து வருகிறது. பொதுவாகவே இப்படிப்பட்ட `சில்மிஷ` ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

* மூன்றாவதாக... சில பெண்களைப் பார்த்து... நீங்கள் அந்த மாதிரியான பெண்ணா? என்று அணுகும் ஆண்களை பெண்களுக்குப் பிடிப்பதில்லை.

அலுவலகத்தில், வேலை பார்க்கும் இடத்தில் அதிகமான வேலைகளால் தாமதமாகி பஸ் நிறுத்தம், ரயில் நிலையங்களில் தனியாக நிற்கும் பெண்களை கூர்ந்து பார்ப்பது... அவர்கள் இயல்பாக திரும்பிப் பார்த்துவிட்டால் போதும்... பக்கத்தில் வந்து நிற்பது... வழிந்து பேசுவது... சிரிப்பது என சிக்னல் கொடுப்பது... இறுதியில் அந்தரங்கமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

அந்த காலத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகத் தான், இருட்டு வதற்கு முன்பே வீட்டுக்கு வந்து விடு என்பார்கள்.

தனியாக பெண்கள் வசிக்க முடியாத சூழலும் உண்டு. எங்கேயாவது வெளிïருக்கு சென்றாலும் லாட்ஜில் ரூம் போட முடியாது. அங்கும் பிரச்சினைகள் ஏராளம். தனியாக நிற்கும் பெண்களிடம் தவறாக அணுகும் ஆண்களை, 90 சதவீத பெண்களுக்கு பிடிப்ப தில்லை.

* நான்காவதாக... மொபைல் போன் மூலம் தொந் தரவு செய்யும் ஆண்களை பிடிப்பதில்லை. கேமரா செல்போனில் படம் பிடிப்பது, மிஸ்டு கால் கொடுத்து பெண்கள் பேசினால் வழிவது... தெரிந்த பெண்ணிடம் மிஸ்டுகால் என்று கூறி ஜொள்ளு வடிவது... திடீர்னு ஏதாவது ஒரு நம்பரில் பேசி, பெண் என்றால் பெயர் சொல்லாமல் பேசுவது... பின்னர் பழகுவது போல் பாசாங்கு செய்வது என்று செயல்படும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிப்பதில்லை. இப்படி அடிக்கடி செல்போனில் பதில் கூறும் பெண்கள், தங்களது பெற்றோருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்!

ரெயில்களில் செல்லும்போது கீழே உட்கார்ந்திருக் கும், படுத்திருக்கும் பெண்களை செல்போனில் படம் பிடிப்பது என சில ஆண்கள் ஈடுபடுவதால்... இப்போதெல்லாம் கேமரா செல்போன் என்றாலே பெண்கள் அலறுகிறார்கள்.

* ஐந்தாவதாக... பெண்களிடம் நேரடியாக பேசும்போது ரொம்பவும் மரியாதையாக பேசும் ஆண்களில் சிலர், முதுகுக்குப் பின்னால் கண்டபடி பேசுவது பெரும்பாலான பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

பெண்கள், சில ஆண்களிடம் நெருக்கமாக பேசுவார்கள், பழகுவார்கள். அவர்களிடம் மட் டும் மனம் திறந்து பேசுவார்கள். ஆனால் இதை ஆண்கள் ரகசியமாக பாதுகாக்க மாட்டார்கள்.

இவர்கள் அடுத்தவரிடம் தம்பட்டம் அடிக்க... அந்த விஷயத்துக்கு கண், காது, மூக்கு வைத்து வேறு மாதிரியாக பேசப்படும். சில நேரங்களில் ரொம்ப திறமையான பெண்களை மனதளவில் நோகடிக்க இப்படி சில வழிகளை கையாளுவார்கள், சில ஆண்கள்.

இந்த மாதிரியான ஐந்து செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு செக்ஸ் ஊனம் இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். அருவறுப்பாக பார்ப்பது, முகம் தெரியாத பெண்களிடம் ஜொள்ளு வடிப்பது, தனியாக இருக்கும் பெண்களை ஒரு மாதிரியாக நினைப்பது, மொபைல் போனில் படம் எடுப்பது, முதுகுக்குப் பின்னால் முரணாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை, பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

எனவே ஆண்களே இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பழக்கமாக இருந்தாலும், உடனே விட்டு விடுவதுதான் உங்களுக்கும் நல்லது... உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது!

Brought u by SNS News Service

Thanks to thanthi.com

இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லிறீங்கள் சுண்டல்? நீங்கள் சொல்லிறதுக்கள வாசிக்க ஒண்டுமா விளங்க இல்ல.

இப்படி இப்படி செய்யக்கூடாது எண்டு ஐடியாக்கள் சொல்லுறீங்களா? இல்லாட்டி இப்படி இப்படி செய்யலாம் எண்டு ஐடியாக்கள் சொல்லுறீங்களா?

இது சொல்லப்பட்டது தமிழ்நாட்டு ஆண்களுக்கா? இல்லாட்டி அனைவருக்குமா? கனடாவில இருக்கிற வெள்ளை, கறுப்புகளுக்கும் இது பொருந்துமா?

முதலில யாழில இருக்கிற பெண்கள் சுண்டல் சொன்னதுகளில எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் எண்டு சொல்லுங்கோ. மிச்சம் பிறகு பார்க்கலாம்.

இதமாதிரி ஆண்களுக்கு பிடிக்காத விசயங்கள் பற்றி ஒருத்தரும் ஆராய்ச்சி ஒண்டும் செய்ய இல்லையோ? நெடுக்காலபோவான் யாராச்சும் செய்யலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரின்சு இது எல்லா ஆண்களுக்கும் பொறுந்தும் பட் இப்ப

இப்படிலாம் சென்ஞா தான் பொண்ணுங்க ரசிக்கிறாங்க சோ மாப்பி நீங்க ஒருக்கா ட்ரை பன்னி பாத்திட்டு சொல்லாமே...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். படித்து தெரிந்து.. புரிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் ஆண்களே...

* பெண்களுக்குப் பிடிக்காதவைகளில் முக்கியமாக முதலிடத்தைப் பிடிப்பது ஆண்களின் அருவறுக்கத்தக்க பார்வை. சில ஆண்கள், பெண்களை பார்க்கும் பார்வையே புது மாதிரி யாக இருக்கும்.

அதாவது ஏதோ வேறு உலகில் இருந்து வந்தவர்கள் போல்... பெண்களை அப்பத் தான் புதியதாக பார்ப்பது போல்... பார்ப்பார் கள். சிலரோ... பெண்களின் அங்கங் களையே உற்று உற்று பார்ப்பார்கள். இப்படி யான `பார்வையாளர்களை` கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாகிவிடும்.

ஷாப்பிங், ஆபீஸ், வீட்டுக்கு அருகில், பொது இடத்தில் இந்த பார்வை பார்ப் பவர்களை பார்த்தவுடன் தெரிந்து அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார்கள் பெண் கள்.

அதேபோல், கையில்லாத ஜாக்கெட் (ஸ்லீவ் லெஸ்) போட்டிருக்கும் பெண்கள், எதை யாவது வாங்கும்போதோ... கையில் இருக் கும் பையை வேறு கைக்கு மாற்றும் போதோ... `அந்த` இடத்தை பார்ப்பதை ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மேலே... அதாவது உயர்ந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே செல்லும் பெண்களைப் பார்ப்பது... கீழே உட்கார்ந்திருக்கும் பெண்களை பார்ப்பது என்பது பெண்களுக்கு பிடிக் கவே பிடிக்காது.

சில சிறுமிகளுக்கு உடல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இவர்களையும் சிலர் விட்டு வைப்பதில்லை. அவர்களையே உற்று நோக்கும் `கண்ணியவான்`களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே அவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

என்னதான் புடவை என்றாலும், கவர்ச்சி... அழகு என்று எல்லாவற்றிலும் சேலைக்கு முக்கிய பங்குண்டு. 20 வயதில் புடவை கட்ட ஆரம்பிக்கும் பெண்கள் கூட... சில ஆண்களின் அருவருப்பு பார்வை பொறுக்காமல் மீண்டும் சுடிதாருக்கு மாறி விட்டார்கள் என்று தெரிவிக்கிறது ஒரு சர்வே!

இதில் சில ஆண்கள் வேறுமாதிரி. சிலரை தொந்தரவு செய்வதாக நினைத்து பின் தொடர்ந்து சென்று பார்ப்பார்கள். இப்படிப்பட்ட அருவறுப்பு பார்வை கொண்ட ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது என்பதை புரிந்து கொள்ளும் ஆண்களே... இனியாவது இப்படி பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

* அடுத்து... பெண்களை உரசுவது, தட்டுவது... இடிப்பது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடும் ஆண்களை, 88 சதவீத பெண்களுக்கு பிடிப்பதில்லை! பஸ், ரயில், தியேட்டர், திருவிழா போன்ற கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பெண்களை உரசும் ஆண்களை சுத்தமாக பிடிக்காது.

சமீபத்தில் கூட விமானத்தில் அருகில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரி ஒருவர் மாட்டிக் கொண்டார். பஸ்சில் செல்லும் போது சிலர் வேண்டுமென்றே அதற்கான சூழலை உருவாக்கி பெண்களை இடிப்பார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் இப்படிப் பட்ட அனுபவங்களை பெறாத பெண்களே இருக்க முடியாது! அந்தளவிற்கு இடிமன்னர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறுகிறது, ஒரு ரகசிய சர்வே!

பெரும்பாலும் இப்படி சில்மிஷங்களில் ஈடுபடும் ஆண்களை பெண்கள் தட்டிக் கேட்ப தில்லை. இதனாலும் இந்த கொடுமை அதிகரித்து வருகிறது. பொதுவாகவே இப்படிப்பட்ட `சில்மிஷ` ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

* மூன்றாவதாக... சில பெண்களைப் பார்த்து... நீங்கள் அந்த மாதிரியான பெண்ணா? என்று அணுகும் ஆண்களை பெண்களுக்குப் பிடிப்பதில்லை.

அலுவலகத்தில், வேலை பார்க்கும் இடத்தில் அதிகமான வேலைகளால் தாமதமாகி பஸ் நிறுத்தம், ரயில் நிலையங்களில் தனியாக நிற்கும் பெண்களை கூர்ந்து பார்ப்பது... அவர்கள் இயல்பாக திரும்பிப் பார்த்துவிட்டால் போதும்... பக்கத்தில் வந்து நிற்பது... வழிந்து பேசுவது... சிரிப்பது என சிக்னல் கொடுப்பது... இறுதியில் அந்தரங்கமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

அந்த காலத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகத் தான், இருட்டு வதற்கு முன்பே வீட்டுக்கு வந்து விடு என்பார்கள்.

தனியாக பெண்கள் வசிக்க முடியாத சூழலும் உண்டு. எங்கேயாவது வெளிïருக்கு சென்றாலும் லாட்ஜில் ரூம் போட முடியாது. அங்கும் பிரச்சினைகள் ஏராளம். தனியாக நிற்கும் பெண்களிடம் தவறாக அணுகும் ஆண்களை, 90 சதவீத பெண்களுக்கு பிடிப்ப தில்லை.

* நான்காவதாக... மொபைல் போன் மூலம் தொந் தரவு செய்யும் ஆண்களை பிடிப்பதில்லை. கேமரா செல்போனில் படம் பிடிப்பது, மிஸ்டு கால் கொடுத்து பெண்கள் பேசினால் வழிவது... தெரிந்த பெண்ணிடம் மிஸ்டுகால் என்று கூறி ஜொள்ளு வடிவது... திடீர்னு ஏதாவது ஒரு நம்பரில் பேசி, பெண் என்றால் பெயர் சொல்லாமல் பேசுவது... பின்னர் பழகுவது போல் பாசாங்கு செய்வது என்று செயல்படும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிப்பதில்லை. இப்படி அடிக்கடி செல்போனில் பதில் கூறும் பெண்கள், தங்களது பெற்றோருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்!

ரெயில்களில் செல்லும்போது கீழே உட்கார்ந்திருக் கும், படுத்திருக்கும் பெண்களை செல்போனில் படம் பிடிப்பது என சில ஆண்கள் ஈடுபடுவதால்... இப்போதெல்லாம் கேமரா செல்போன் என்றாலே பெண்கள் அலறுகிறார்கள்.

* ஐந்தாவதாக... பெண்களிடம் நேரடியாக பேசும்போது ரொம்பவும் மரியாதையாக பேசும் ஆண்களில் சிலர், முதுகுக்குப் பின்னால் கண்டபடி பேசுவது பெரும்பாலான பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

பெண்கள், சில ஆண்களிடம் நெருக்கமாக பேசுவார்கள், பழகுவார்கள். அவர்களிடம் மட் டும் மனம் திறந்து பேசுவார்கள். ஆனால் இதை ஆண்கள் ரகசியமாக பாதுகாக்க மாட்டார்கள்.

இவர்கள் அடுத்தவரிடம் தம்பட்டம் அடிக்க... அந்த விஷயத்துக்கு கண், காது, மூக்கு வைத்து வேறு மாதிரியாக பேசப்படும். சில நேரங்களில் ரொம்ப திறமையான பெண்களை மனதளவில் நோகடிக்க இப்படி சில வழிகளை கையாளுவார்கள், சில ஆண்கள்.

இந்த மாதிரியான ஐந்து செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு செக்ஸ் ஊனம் இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். அருவறுப்பாக பார்ப்பது, முகம் தெரியாத பெண்களிடம் ஜொள்ளு வடிப்பது, தனியாக இருக்கும் பெண்களை ஒரு மாதிரியாக நினைப்பது, மொபைல் போனில் படம் எடுப்பது, முதுகுக்குப் பின்னால் முரணாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை, பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

எனவே ஆண்களே இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பழக்கமாக இருந்தாலும், உடனே விட்டு விடுவதுதான் உங்களுக்கும் நல்லது... உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது!

Brought u by SNS News Service

Thanks to thanthi.com

கீழே நின்றால் மேலே என்ன நடக்கின்றது என்று பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி அவதானமில்லாமல் இருக்கும்போது அவர்கள் கீழே விழுந்தால் தலையடித்து சாவதா?

88வீதத்தினருக்கு பிடிப்பதில்லை??? 12 வீதத்தினருக்கு பிடிக்கின்றது. ஆக 10 பேரை உரசினால் 8 பேர்களுக்கு பிடிக்காது 2 பேர்களுக்கு பிடிக்கும். உரசமால் நிற்பதினால் இந்த 2 பேர்களின் இல்லது 12 வீதத்தினரின் வெறுப்பிற்கும் ஆளாகும் அபாயமிருப்பதை ஆண்கள் கவனத்தில் கொள்க.

( ladys just a joke pls dont be seriuos)

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.