Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழ.நெடுமாறன் ஒரு பயங்கரவாதி,அவரது செயற்பாட்டை இந்திய அரசு தடுக்கவேண்டும் - ரட்ணசிறி

Featured Replies

கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார்.

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது :

தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

மிலேச்சத்தனமான புலிகளால் அமைச்சர் ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். புலிகள் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை எவராலும் அழிக்க முடியாது. அவருடைய கருத்தை. பணியை நாங்கள் முன்னெடுப்போம்.

அவரின் குரலை புலிகளால் இல்லாமல் செய்து விட முடியாது. யுத்தத்தில் தோல்வியடைந்து விரக்தியடைந்து மந்தநிலையில் இருக்கும் புலிகள் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் மறைந்திருந்து தாக்குதல் நடத்துகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளோம். வடக்கிலும் அவ்வாறு ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம்.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற மோதலில் 683 படையினர் காயமடைந்தும் 93 பேர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

பொதுமக்களில் 38 பேர் கொல்லப்பட்டும் 21 பேர் காயமடைந்தும் உள்ளனர். பயங்கரவாதிகளை அழிப்பதற்கு படையினர் தொடர்ந்தும் துணிவுடன் செயற்பட்டு வருகின்றனர்.

முருங்கன் வைத்தியசாலை மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தினர் நோயினாலும் கஷ்டப்படுகின்றனர். புலிகளும் தாக்குகின்றனர். இருந்தும் படையினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

நன்றி : முரசம்

  • கருத்துக்கள உறவுகள்

எது எதை யார், யார் சொல்லுறது எண்டு ஒரு இது இருக்கு ரட்ணசிறி.

நல்ல காலம், மகாத்மா காந்தியையும், புத்தரையும் இன்னும் சிறிது காலத்தில் தடைவிதித்து, அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். என்றும் சொல்லி மற்றவர்களைக் கொல்லப்போகிறார்.

நல்ல காலம், மகாத்மா காந்தியையும், புத்தரையும் இன்னும் சிறிது காலத்தில் தடைவிதித்து, அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். என்றும் சொல்லி மற்றவர்களைக் கொல்லப்போகிறார்.

ரடனசிறி ஒரு க..... கேஸ்.. இப்பிடி கனக்க சொல்லும். இஸ்ரேலில் சென்று தமிழர்கள் பாலஸ்தீன நண்பர்கள் என்று சொல்லும். பாலஸ்தீனம் சென்று கதையை மாற்றும்.

அறளை பெயர்ந்த வயசில் அதுக்கு பிரதம மந்தி.. பதவி ? யார் கேட்பது??

ரத்தினசிறி... வந்து சிங்கள இனம் தவம் இருந்து பெத்தெடுத்த... ஒரு தவ புதல்வன்....

உவனுக்கு எண்டைக்கும் விடியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.